Friday 10 June 2016

ஈழமும் தனித்தமிழ்நாடும் மோதிக்கொள்ளலாமா?!

ஈழமும் தனித்தமிழ்நாடும் மோதிக்கொள்ளலாமா?!
?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?.?

தமிழ்தேசியம் Vs நாம் தமிழர்
என்பது
தமிழர்நாடு Vs ஈழம்
என்பதன் மறுவடிவமே

முதலில் நாம் தமிழர் கட்சி பேசுவது தமிழ்தேசியமா?
இல்லை.
அது ஈழதேசியம்தான் பேசுகிறது.

மீதி ஏழரைக் கோடி தமிழர்களின் விடுதலையைப் பற்றிய கவலையோ
தனித்தமிழ்நாடு பற்றிய அக்கறையோ
தமிழகமும் ஈழமும் ஒரே நாடு என்ற எண்ணமோ
அவர்களுக்குக் கிடையாது.

அவர்கள் ஈழத்து மனநிலையில்தான் இங்கே திரிந்துகொண்டிருக்கின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை தமிழரைத் தமிழன் ஆள்வது என்பது முதல் அமைச்சர் ஆவதுதான்.
(அதாவது முதல் படியை அவர்கள் இறுதி படியாக நினைக்கிறார்கள்)

ஈழத்தில் வந்தேறி அடையாள மறைப்பு கூட்டம் இல்லாததால் புலிகளுக்கு சாதி ஒழிப்பு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.
அங்கே யார் தமிழன் என்ற குழப்பம் இல்லை.

தமிழகத்தின் நிலை வேறு.
தமிழகத்தில் தெற்கே தேனி வரை கன்னடக் குடியேற்றமும்
தூத்துக்குடி வரை தெலுங்கு குடியேற்றமும் உள்ளது.

அதாவது தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழ்பேசும் அடையாளம் தெரியாத வந்தேறிகள் நிறைந்துள்ளனர்.

தமிழருக்கென்ற ஒரு நாடு அமைந்து,
தமிழ் சாதிகள் யாரெல்லாமோ அவர்களின் ஆவணங்களில் சாதிப் பெயர்களை நீக்கிவிட்டு  அதற்குப் பதில் தமிழர் என்று போடவேண்டும்.

அத்தோடு ஒழிந்தது சாதி.

அதுவரை தமிழரை அடையாளம் காண சாதி அடையாளம் தேவை.

நமக்கான அரசு அமைந்த பிறகு நமக்கான ஒரு மதத்தை நிறுவி அதற்கு மாறிக்கொள்ளவேண்டும்.
அதில் தமிழர் மட்டுமே இணைய வேண்டும்.

சாதி= தமிழ்
இனம்= தமிழ்
மொழி= தமிழ்
மதம்= தமிழியம்
நாடு= தமிழர்நாடு

என்ற நிலை வரவேண்டும்.

தமிழர்நாடு பற்றி பேசாமல் வெறும் ஈழத்தைப் பற்றி பேசும் நா.த.கட்சிக்கு முழு தமிழருக்குமான சீர்திருத்ததை முன்வைக்க என்ன தகுதி உள்ளது?

தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழமக்கள் கூட உங்களை மட்டுமே நம்பியிருக்கிறார்கள் வேறு போக்கிடம் இல்லை என்று நினைக்கவேண்டாம்.

இப்போதே சாதியை ஒழித்துவிட்டு வா என்று கூறினால்
எதை வைத்து தமிழரை அடையாளம் காண்பீர்கள்?
இதற்கு பொருத்தமான பதில் சொல்லுங்கள் பதிவையே நீக்கிவிடுகிறேன்.

தமிழ் பேசினாலே தமிழர்.
தமிழ் உணர்வு இருந்தாலே தமிழர்.
என்றெல்லாம் வரையறுத்தால் கருணாநிதி கூட தமிழர்தான்.

ஆகவே நாம் தமிழர் அண்ணன்களே தம்பிகளே!

நீங்கள் தமிழ்நாட்டு மாநிலமும் ஈழத்து நாடும் தமிழருக்குக் கிடைக்க போராடுங்கள் தவறில்லை.
அதற்காக தனித்தமிழ்நாடு போராளிகளைப் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

ஏதேது? நாளை நீங்கள் முதலைச்சராக ஆளும்போது தனித்தமிழ்நாட்டு விடுதலைக்காக ஆயுதம் தூக்கும் இளைஞர்களை அழித்தொழிப்பீர்கள் போலிருக்கிறதே?!

அதே போல தனித் தமிழ்நாடு போராளிகளே!
தமிழர் நாடு போராளிகளே!
நாம் தமிழர் கட்சி வெளிப்படையாகப் பிரிவினை பேச முடியாது.
பேசினால் தேர்தலில் போட்டியிட முடியாது.
அவர்கள் ஆட்சியைப் பிடிப்பது நமக்கு முதல் வெற்றி.
நமக்கான ஆயுதக் குழு தோன்றும் வரை நாம் தமிழரை பந்தாடவேண்டாம்.
புலிகள் ஏன் த.தே.கூ கட்சியை ஆரம்பித்தார்கள்?
அதுபோல நாம் தமிழர் நமக்கான அரசியல் கட்சி அவ்வளவுதான்.

நாம் சீமான் அண்ணனை நம்புகிறோம்.
ஆனால் சீமான் அண்ணனை மட்டுமே நம்பியிருக்கவில்லை.

ஆனால் சாதி ஒழிப்பு நடக்கத்தான் வேண்டும்.
தமிழினமே ஒரே சாதியாவது மட்டுமன்றி அதற்கும் மேல் ஒரே குடும்பமாகும் நிலை வரவேண்டும்.

ஆனால் முதல்படி ஏறுமுன்னே நான்காம் படியில் கால்வைப்பது சரியில்லை.

ஆக நெல்லூர் முதல் கதிர்காமம் வரை
கண்ணூர் முதல் கொழும்புவரை
பெங்களூர் முதல் கண்டி வரை
பரந்து விரிந்த தமிழர்நாடு (ஒரே நாடாக) தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை
சாதி அடையாளம் தேவை.

இதுதான் தீர்ப்பு.

பஞ்சாயத்து முடிந்தது.

கிளம்பி வேறு வேலையிருந்தால் பாருங்கள்.

இதற்கு மேலும் முகநூலில் அண்ணன் தம்பிகளுடன் மோதிக்கொண்டு நாசத்திற்கு வழிவகுக்கவேண்டாம்.

இரு தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

No comments:

Post a Comment