Showing posts with label பட்டம். Show all posts
Showing posts with label பட்டம். Show all posts

Wednesday, 11 February 2026

சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா


சாதிப்பட்டம் சாதிவெறியைத் தூண்டுமா?

 தமிழகத்தில் சாதிவெறி அதிகம் என்று கூறுபவர்கள் கூட மதவெறி இல்லை என்று ஒத்துக்கொள்வர். இவற்றை ஒப்பிடுவோம். 

 நான் வட இந்தியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது யாராவது கையில் பை ஏதாவது கொண்டு போனால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன்.
 (இது தமிழர்களை அடையாளம் காணத் துடிக்கும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் அனைவரும் செய்கின்ற ஒரு வழக்கமாகும்). இந்த பழக்கதோஷம் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் தொடரும். அவ்வாறு ஜவுளிக்கடை போன்று கையில் ஏதாவது வைத்திருந்தால் அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறதா என்று பார்ப்பேன். தமிழ் இஸ்லாமியர் கையில் ஏதாவது கொண்டு போனால் அதில் இருக்கும் பெயர்கள் பெரும்பாலும் இசுலாமிய பெயராக இருக்காது (இஸ்லாமிய நிறுவனங்கள் மற்றும் கடைகள் வெளிப்படையான இஸ்லாமிய பெயர்களை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை. ஆங்கில எழுத்துக்களையோ அல்லது ஆங்கில பெயரையோ வைத்திருப்பார்கள். இதை என்னால் அடையாளம் காண இயலும்). தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இஸ்லாமியரிடம்தான் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்வார்கள் என்கிற தவறான எண்ணம் சிலருக்கு உண்டு. ஆனால் பெரும்பாலும் அது உண்மை இல்லை. நான் பார்த்தவரை தமிழக இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தமிழர்கள் போலவே பிரபலமான மதம் சாராத கடைகளில்தான் பொருட்களை வாங்குவர்.

 உலகம் முழுவதுமே கூட மதவெறியானது தலைவிரித்து ஆடுகிறது. அதிலும் இஸ்லாமியருக்கு எதிரான போக்கு இந்தியா முழுவதும் மூலைமுடுக்கெல்லாம் காணப்படுகிறது. தமிழகம் கேரளா ஆகியவற்றை தவிர்த்து ஏனைய இடங்களில் மதவெறி தலைவிரித்தாடுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் அப்படி ஒரு நிலை இன்றுவரை இல்லை. இத்தனைக்கும் தமிழின இஸ்லாமியர்கள் தான் ஒரு இஸ்லாமியர் என்ற வெளிப்படையான அடையாளத்துடன் தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொள்கிறார்கள்.  இஸ்லாமிய உடைகளை அணிந்து கொள்கின்றனர். இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். பாஜக எதிர்ப்பையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் மக்கள் தொகையில் ஓரளவு கணிசமான அளவு இருந்தும் இனப்பற்று என்று வரும்போது அவர்கள் அளித்த பங்கு என்று பார்த்தால் குறைவு என்றுதான் கூற வேண்டும். அப்படி இருந்தும் பிற தமிழர்கள் தமது ரத்த சகோதரர்களான தமிழ் இசுலாமியரை தனியே ஒதுக்குவதில்லை. ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டுவது அந்த அடையாளத்திற்கு எதிராக பிறரைத் தூண்டுவதாக ஆகாது என்று இதன் மூலம் உணரலாம்.

 இப்போது கூறவந்த விடயத்திற்கு வருகிறேன். உலகம் முழுவதும் சாதிப் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர் (சமீபத்தில் வெளிவந்த tomorrow war என்கிற ஹாலிவுட் படத்தில் கூட தொலைந்த தன் மகளை froster என்கிற குடிப்பட்டத்தின் மூலம் கதாநாயகன் அடையாளம் கண்டுகொள்கிறான்).
 சாதிப் பட்டம் போட்டுக் கொள்வதன் மூலம் வந்தேறிகளை முழுமையாக அடையாளம் காண முடியாவிட்டாலும் பெரும்பான்மையான வந்தேறிகளை அடையாளம் கண்டுவிட முடியும். இதனாலேயே சாதிப் பட்டத்தை வந்தேறி அரசுகள் ஒழித்தனர். இதனை மீண்டும் கொண்டுவர தமிழ் தேசியவாதிகள் முயற்சிக்கும் பொழுது சாதிப் பட்டம் போட்டால் சாதிவெறி தலைதூக்கும் என்கிற அடிப்படையே இல்லாத ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அப்படியென்றால் தமிழகத்தில் இசுலாமியருக்கு எதிரான மதவெறி தலைதூக்கி யிருக்கவேண்டும்  இல்லையா?! 
மத அடையாளம் மத நல்லிணக்கம் அமையத் தடையில்லை என்றால் அடையாளத்துடன் கூடிய சாதிய நல்லிணக்கம் சாத்தியம்தான்.

 தமிழர்களுக்கு சாதிவெறியும் மதவெறியும் கிடையாது. தமிழர்கள் எப்போதுமே ஒரு பண்பட்ட சமூகம். 

 தமிழக கிராங்களில் பல்வேறு சாதியினர் உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்வதும், ஒரே தெருவில் பல சாதியினர் வாழ்வதும், ஒரே குலதெய்வக் கோவிலில் ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் ஒற்றுமையாக வழிபடுவதும். சாதி தாண்டிய உயிர் நண்பர்கள் இருப்பதும், ஊருக்கு பொதுவான கோவிலுக்கு அந்த ஊரில் இருக்கும் சமுதாயங்கள் முறைவைத்துக் கொண்டு விழா எடுப்பதும் சர்வ சாதாரணம்.  ஒரே பொருளாதார அந்தஸ்தில் இருக்கும் இருவேறு சாதியினர் கலப்புத் திருமணம் செய்துகொள்வதும் பன்னெடுங்காலமாக இயல்பாகவே நடந்து வருகிறது (உங்கள் பெற்றோரை விசாரித்துப் பாருங்கள் உங்கள் தாத்தா பாட்டி காலத்திற்கு முன்பே சாதிதாண்டிய திருமணம் நடந்திருக்கும்). 

இதற்குச் சான்றாக இருவேறு சாதிகள் தங்களுக்குள் பெண்கொடுத்து பெண்ணெடுத்து அந்த இரு சாதிகளுக்கு நடுவிலேயே ஒரு சிறுபான்மை சாதி உருவாகியிருக்கும். உதாரணமாக நான் சேனைத்தலைவர் சாதியைச் சேர்ந்தவன் (மூப்பனார் பட்டம்) நாங்கள் செங்குந்தர் மற்றும் மறவர் ஆகியோர் கலந்து உருவான சிறுபான்மை சாதி (தமிழக மக்கட்தொகையில்  0.4 சதவீதம்). 

பிரச்சனை எப்போது வருகிறது என்றால் பொருளாதார அந்தஸ்து வேறுபாடான இரு குடும்பங்களில் திருமண சம்பந்தம் நடைபெறுவதில்லை. அதாவது (அது ஒரே சாதியாக இருந்தாலும்) வெவ்வேறு அந்தஸ்தில் இருக்கும் குடும்பங்கள் சம்பந்தம் செய்துகொள்வது இல்லை. இந்நிலையில் ஒரு ஆண் ஏழையாக இருந்தால் அவரது முறைப்  பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால்  பிரச்சனைகள் வருவது இயல்பு (அதிலும் காதலர்கள் காத்திருந்து காரியத்தைச் சாதிக்காமல் ஊரைவிட்டு ஓடிவிடுவது பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும்). ஆக நாம் இங்கே செய்யவேண்டியது பொருளாதார சமநிலை தான்.  அதாவது அனைத்து சாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்கி சமமான பொருளாதாரத்திற்கு உயர்த்தி விட்டால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பெண்கொடுத்து பெண்ணெடுத்து கலந்து விடுவது இயல்பாகவே நடந்துவிடும். ஆனால் வந்தேறி அரசுகளும் இயக்கங்களும் ஊடகங்களும் தமிழகத்தில் எங்கோ நடக்கும் சாதிய கொடுமைகளை ஏதோ தமிழகத்தின் பொதுக் கலாசாரம் போல பிரச்சாரம் செய்கின்றனர். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் தான் சாதிய மோதல்கள், ஆணவக்கொலைகள், தீண்டாமை, சாதிய கலவரங்கள் ஆகியன பிற மாநிலங்களை விட மிகவும் குறைவு. இங்கே நடந்த அத்தகைய சில அசம்பாவிதங்களும் திராவிட அரசியல் செய்யும் சாதிய அரசியலே காரணம்.

 ஆகவே தமிழர்களே! நாம் அனைவரும் உலகில் எல்லா முன்னேறிய சமூகங்களும் செய்வது போல நமது தாத்தா பாட்டிகள் போல நமது குடிப் பட்டத்தை நமது பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளவேண்டும். குடிப்பட்டத்தை பெயருடன் இணைத்துக்கொள்வது சட்டப்படி தவறு இல்லை.  இதை நாம் செய்தால் வந்தேறிகளை அடையாளம் காண்பது மிகவும் எளிதாகிவிடும். தமிழ்ச்சாதிகளின் பட்டங்கள் போன்றே பட்டம் கொண்ட பிற இனத்து சாதிகள் மிகவும் குறைவு.  பெரும்பான்மையான தமிழ் குடி பட்டங்கள் தனித்துவமானவை. ஒருவர் தமிழர் என்று அடையாளம் காண இன்று நமக்கு வேறு வழியில்லை. வெளிப்படையாக நான் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.

 தன் குடிப்பெயரை பெயருடன் இணைத்து பயன்படுத்துவது சாதிவெறியாக பார்க்கப்படுவதை தவிர்க்க தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்கு 'தமிழர் நிலத்தில் சாதியவேறுபாடுகள் வேற்றின ஆட்சிக்கு முன்பு இல்லை' என்று ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வந்த எந்த சாதிக்கும் மேலேயோ கீழேயோ கிடையாது என்பதையும் தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்ய வேண்டும். 

உலகில் தனது இனத்தை ஓரணியில் திரட்டிய தலைவர்கள் சாதி மத வர்க்க அடையாளங்களை அழித்துவிட்டுத்தான் வரவேண்டும் என்று பிரச்சாரம் செய்ததில்லை. 

சாதியை ஒழித்து விட்டு மதத்தை ஒழித்து விட்டு தூய தமிழில் பேசி வர்க்க முரண்பாடுகளை ஒழிக்கும் திட்டத்துடன்தான் ஒரு தமிழ் தேசியவாதி இருக்க வேண்டும் என்று நம்மை மூளைச்சலவை செய்துவைத்துள்ளனர். சாதிய, மத வேறுபாடுகளை ஒழித்தால்தான் தமிழினம் ஒன்றிணைய முடியும் என்பது பித்தலாட்டம். நடக்கவே நடக்காது என்று தெரிந்துதான் வந்தேறிகள் 'இனத்தின் முதல் எதிரி சாதி' என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். நாமும் அந்த வழியை முயன்றுபார்த்து தோற்றுவிட்டோம். வந்தேறிகள் தமது அடையாளத்தை மறைத்துகொண்டு எளிமையாக அதிகாரத்தைக் கைப்பற்றி கொழுத்துவிட்டனர்.

 ஆகவே இனி வழியை மாற்றுவோம் சாதி அடையாளத்துடனும் மத அடையாளத்துடனும் இனவுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு ஒன்றிணைவோம். தனிப்பட்ட கொள்கைகள், விருப்பு வெறுப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைப் பொருட்படுத்த வேண்டாம். 

 முதலில் இன உணர்வு அதற்குப் பிறகு பிற உணர்ச்சிகள் என்று இருந்தால் போதும். குடிப்பட்டத்தை பயன்படுத்தும் ஒரு தமிழருடன் நம்பிக்கையுடன் ஒன்றிணைய முடியும். இந்த வழியில் நம்மால் எளிமையாக ஒன்றிணைய முடியும். எந்த குடியும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ இல்லை என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.

 ஆகவே முதல்வேலையாக நமது குடிப்பட்டத்தை பெயருடன் இணைப்போம்.  வந்தேறிகள் கதறத்தான் செய்வார்கள். எதையும் பொருட்படுத்தாமல் நாமும் உலகில் வெற்றி பெற்ற இனங்களின் பாதையில் பயணிப்போம். வந்தேறிகளை அடையாளம் காண்போம். அதிகாரத்தைக் கைப்பற்றுவோம். முன்னேறுவோம்.

26.07.2021

Friday, 2 May 2025

மரபணு சோதனையின் அவசியம்

மரபணு சோதனையின் அவசியம்

 தமிழ் தேசியவாதிகளின் அன்பிற்குரிய நார்வே இங்கர்சால் அவர்கள் ஒரு தெலுங்கர் என்று யாரோ கிளப்பி விட அது தொடர்பாக ஒரு சிறிய உரையாடல் முகநூலில் நடந்தது.
நான் எப்போதும் போல அவருடன் இணைய வழி தொலைபேசும்போது இது பற்றி பேச்சு வந்தது.
 'தற்போது இனத்திற்கான ஒரே சான்று சாதி சான்றிதழ் மட்டுமே' என்று கூறி அதை காட்ட சொல்லி கேட்டேன்.
 முதலில் தயங்கினாலும் பிறகு தனது குடிச்சான்றை அவர் காட்டினார்.
  தமிழர்தான்!
 முழுமையான நம்பிக்கைக்கு உரியவர் ஆகிவிட்டார்!
 ஏன் இவ்வளவு தயக்கம் என்று கேட்டேன்.
 அதற்கு சாதி சான்றும் தற்போதைக்கு நம்ப தகுந்தது இல்லை என்றும் தன்னிடம் டி என் ஏ மேப்பிங் தொடர்பாக ஒரு யோசனை இருப்பதாகவும் அதன் மூலம் ஒரு ஆணினுடைய சந்ததியை அவர்களுடைய டி என் ஏ மரபணு மாதிரிகளை வைத்து வாழையடி வாழையாக கண்டுபிடித்து விடலாம் என்றும் அவ்வாறு செய்தால் நூறு சதவீதம் நம்ப முடியும் என்றும் கூறினார்.
 மரபணு ஆராய்ச்சி தற்போது உச்சத்தைத் தொட்டுவிட்டது. இத்தாலியில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடையில் கிடைத்த சிறு சதைத் துணுக்கை வைத்து அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து அதில் ஓரளவு ஒத்துப்போன ஒரு நபரைப் பிடித்து அவரது தூரத்து பங்காளி வரை தேடி குற்றவாளியைப் பிடித்த சாதனை நடந்துள்ளது.
 அதாவது கொடிவழி, கொத்து, கூட்டம் என்று பலவாறு அழைக்கப்படும் தந்தையிடமிருந்து மகனுக்கு கடத்தப்படும் அந்த மரபு மிக முக்கியமானது!
கோத்திரம் என்றும் கூறுவர்! 
 இதேவழியில் தான் குடிப்பட்டமும் கடத்தப்படுகிறது!
 இதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்!
 ஒவ்வொரு குடியும் தனது dna sample ஐ ஆவணப்படுத்தி heritage map ஐ உருவாக்க வேண்டும்.
 இந்த சான்று இருந்தால் காகிதச் சான்றுகள் அவசியமில்லை! 
  ஆனால் அதுவரை சாதிச் சான்றுதான் ஒரே வழி!
 அண்ணன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது குடியை வெளிப்படுத்த தற்போது இயலாது!
 சக தமிழ்தேசியவாதிகள் மன்னிக்கவும்! 
 இங்கர்சால் ஒரு தகைசால் தமிழர்தான்!

Monday, 27 January 2025

திராவிடமும் புஷ்பா திரைப்படமும்

திராவிடமும் புஷ்பா திரைப்படமும்

 புஷ்பா -2 திரைப்படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள்!
 அதன் கதை ஒரு தகப்பனுக்கு முறையில்லாமல் பிறந்த ஒருவன் தவறான வழியில் போயேனும் தன் குடும்ப வாரிசாக அங்கீகாரம் பெற போராடுவது ஆகும்.
  இந்த அங்கீகாரம் வழி வழியாக வரும் குடிப்பட்டத்தை தன் பெயருடன் சேர்த்துக்கொள்ள நடக்கிறது.
 உலகில் குடிப்பட்டம் என்பது எந்த ஒரு இனத்திலும் உள்ளது.
 இது ஒரு இயல்பான அடையாளம் தான்.
 காரல் "மார்க்ஸ்",  சே "குவேரா",  கரம்சந்த் "காந்தி", ஹோ சி "மின்", மார்ட்டின் "லூதர்கிங்", பிடல் "காஸ்ட்ரோ", மா "சே துங்",  போன்ற அனைவருமே தமது குடிப்பட்டத்துடன் தான் எல்லா மக்களுக்கும் பொதுவான சிந்தித்தார்கள்.
அனைத்து சாதி மக்களும் ஆதரிக்கும் தலைவர்களாக உருவானார்கள்.
 உலகில் குடிப்பட்டத்தை நீக்கிக் கொண்டவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமையாக கொண்டு செல்லப்பட்ட கருப்பின மக்கள் மட்டுமே!
 இவர்கள் அடிமையாக விற்கப்பட்டு கால்நடைகள் போல இனப்பெருக்கம் செய்யப்பட்டு தகப்பன் பெயர் தெரியாமல் தன் முதலாளியின் குடிப்பட்டத்தை அடையாளமாகக்கொண்டு வாழ்ந்தார்கள்.
  இந்த அடிமைத்தன அடையாளத்தை ஒழிக்கவே மால்கம் எக்ஸ் போன்ற தலைவர்கள் நமது குடிப்பட்டத்தை நீக்கிவிட்டனர்.

  இதிலிருந்து நாம் தெரிவது என்ன?!
 குடிப்பட்டம் இல்லாமல் இருப்பது அடிமைத்தனம் அல்லது முறையற்ற பிறப்பு என்பதை குறிக்கும்!
 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று கூறியவரே " கணியன்" பூங்குன்றன் என்று குடிப்பெயரோடு தான் தன் பெயரைப் பதிந்துள்ளார்.
 நம் கண்முன்னே சிதம்பரம் பிள்ளை, முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்கள் அனைத்து சாதியினருக்கும் போராடிய நம் இன தலைவர்கள் தம் குடிப்பட்டத்துடன் தான் போராடினார்கள்.
 மக்களுக்காக பெரும் இழப்புகளை ஏற்றுக் கொண்டார்கள்.
 அத்தகைய தலைவர்களை குடிப்பட்டம் போட்டுக் கொண்ட இயல்பான நடைமுறையை வைத்து சாதிய தலைவர்கள் என்று முத்திரை குத்திவிட்டனர் வந்தேறிகள்.
 தமிழர்கள் தமது குடிப்பட்டத்தை போட விடாமல் தடுத்தது திராவிட சதி!
 இதை இவர்கள் ஏன் செய்தார்கள் என்றால் தேவதாசி முறைப்படி அப்பன் பெயர் தெரியாத கூட்டம் வெளியில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுடன் வந்தனர்.
  இந்த வந்தேறிகள் ஆங்கிலேயர் ஆதரவுடன் திராவிடத்தை உருவாக்கி ஆட்சியை ப் பிடித்திருந்தனர்.
 இவர்களை மடக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தேவதாசி வகையறா தமக்கு குடிபட்டம் இல்லை என்பதாலேயே எல்லா தமிழர்களையும் அவ்வாறு ஆக்கிவிட்டனர்.
  இதனால் மேற்கண்ட தலைவர்களை விட இவர்கள் பெரிய புரட்சியாளர்கள் என்று ஆகிவிட்டது.
  இது தமிழகத்தில் உள்ள பிற இனத்தவர் தமது அடையாளத்தை மறைத்துக் கொள்ளவும் வசதியாக இருந்ததால் அவர்களும் ஏற்றுக் கொண்டனர்.
 இதற்காகவே தமிழர்களை தேவிடியா மகன்கள் என்று தொடர்ந்து கூறியும்
தமிழின பட்டியல் சமூகத்தாரை சாதி பட்டம் இழிவானது என்று பிரச்சாரம் செய்தும் அதை நீக்க செய்தவர் ஈவேரா!
 இந்த நடைமுறையை பின்பற்றுவது உலக இயல்புக்கு மாறானது!
 எனவே தமிழர்கள் அனைவரும் தமது குடிப்பட்டத்தை பயன்படுத்த வேண்டும்!
 ஒரு தமிழ்க்குடி இன்னொரு தமிழ்க் குடியை அதன் குடிப்பட்டத்தை வைத்து ஜாதி பெயர் என்று விமர்சிப்பதும் உயர்வாகவோ தாழ்வாகவோ நினைப்பதும் கூடவே கூடாது!
 

Tuesday, 13 February 2024

குலாலா மட்டும் இல்லன்னா

குலாலா மட்டும் இல்லன்னா

 "கலம் செய் கோவே" அதாவது "பானை செஞ்சு தாங்க மகாராசா" என்கிற மாதிரி மரியாதையாக கூப்பிட்டு 'எனக்கு தகுந்த ஈமத்தாழி செய்து தா' என்று கணவனை இழந்த துக்கத்தில் பாடுகிறாள் ஒருத்தி (புறநானூறு 256).

 ஒரு தேர்ந்த குயவர் மண்ணை தன் விருப்பம் போல வளைத்து பானை செய்வது போல மன்னன் நாட்டை வடிவமைத்ததாக புறநானூறு (32) கூறுகிறது.
 
 கம்ப ராமாயணம் (3980) 'வன் தோள் குயவன் திரி மட்கலத்து' என்று தோள்வலிமை கொண்ட குயவர் சக்கரத்தைச் சுற்றுவது போல என்று மரியாதையுடன் உவமை காட்டுகிறது.

 பெரியபுராணம் 'திருநீலகண்டத்து குயவனாருக்கு' என்றும் 
 சித்தர் பாடல் 'நாலாறு மாதமாய் குயவனை வேண்டி' என்றும் குயவரை மரியாதையுடன் குறிக்கின்றன.

 கிபி 1837 இல் அமெரிக்க பயணி வரைந்த குயவர் ஓவியம் கொசவன் என்ற தலைப்புடன் இருக்கிறது அதில் பூணூல், கடுக்கன், தலைப்பாகை அணிந்த குயவர் பானை செய்வது போல உள்ளது (Seventy-two Specimens of Castes in India).

 ஆனா இவனுக சொல்ற கதைய பாருங்க!
 தமிழர்கள் சாதிவெறியோட குயவரை "கொசப்பய" னு சொன்னோமாம்!
சாதிக் கொடுமை பண்ணோமாம்!
 உடனே தெலுங்கு குலாலா ஓடிவந்து 'இனி நீங்களும் குலாளர் என்று அழைக்கப் படுவீர்களாக' னு தங்களோட பெயரை குயவருக்கு சூட்டி மரியாதை வாங்கித் தந்தானுகளாம்!

குயவர் என்கிற பெயரையும் வேளார் என்கிற பட்டத்தையும் மீட்க குயவர் குரல் எழுப்பினால் சாதி ஒற்றுமை கெட்டுவிடுமாம்!

 அதனால் அரசின் சாதிப் பட்டியலில் உள்ளபடி 'குலாலா சாதியின் ஒரு பிரிவுதான் குயவர்' னு ஒத்துக்கிட்டு வேளார் பட்டம் போடாம ஒற்றுமையா இருக்குற இடம் தெரியாம  இருக்கணுமாம்!

 இந்த அநியாயத்த கேக்க யாருமில்லயா?! 
 

 

 

Saturday, 12 November 2022

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

பெண்கள் பெரியார் பட்டம் வழங்கவில்லை

13.11.1938 அன்று நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வே.ரா வுக்கு பெரியார் என்று பட்டம் வழங்கப்பட்டதாக கூறுவது பொய்!
 இந்த மாநாடு பற்றி ஈ.வே.ரா வின் 'குடி அரசு' ஏடு செய்தியும் வெளியிட்டதுள்ளது. அதில் பட்டம் வழங்கப்பட்டதாக எதுவும் இல்லை.
 மீனாம்பாள் அவர்கள் இப்பட்டத்தை வழங்கியதாக கூறுவதும் பொய்!
 உண்மையான பெரியார் தொண்டர் யாராவது இருந்தால் பெண்கள் அல்லது பெண் தலைவர் எவர் எந்த மேடையில் பெரியார் பட்டம் வழங்கினார் என்று சான்று தரவும்!

Saturday, 10 June 2017

சாதிப்பெயர் வேண்டாமென முதன்முதலாகத் தீர்மானம் கொண்டுவந்த தமிழர்

சாதிப்பெயர் வேண்டாமென முதன்முதலாகத் தீர்மானம் கொண்டுவந்த தமிழர்

1929 பெப்ரவரி 17,18 ஆம் திகதிகளில் செங்கல்பட்டிலுள்ள தியாகராயநகர் பனகல் அரசர் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் மாகாண சுயமரியாதை மாநாட்டில் சாதி பட்டங்களை பெயருடன் பயன்படுத்துவதை விட்டுவிடவேண்டும் என்றும் மத,சாதி அடையாளங்களை அணிந்துகொள்ளக்கூடாது எனவும் தீர்மானத்தை சிவகங்கை தாலுக்கா போர்டு தலைவர் ராமச்சந்திரன் சேர்வை கொண்டுவந்தார்.
நானும் இன்றிலிருந்து என் பெயரை வெறும் ராமச்சந்திரன் என்று மாத்திரம் வைத்துக்கொள்கிறேன் எனக் கூறி அதற்குச் சட்டத்தின்படி என்ன வழி இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

இவர் இன்றைய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியராசன் சேதுராமலிங்கத்தின்( Packiarajan Sethuramalingam ) தாத்தா ஆவார்.
இது குறித்து அவர் எழுதிய பதிவை ஒளிப்பிரதியாகக் காணலாம்.
இவ்வாறு பெயருக்குப் பின்னால் சாதியை வைத்துக்கொள்ளக் கூடாது என்று சமத்துவ நோக்கத்தில் சிந்தித்தவர் ஒரு தமிழர்.
ஆனால் அதையும் இவர்கள் மறைத்து பிடுங்கி ஈ.வெ.ராமசாமிக்கு கொடுத்துவிட்டனர்.

சரி.இந்தக் கொள்கை நிறைவேற்றப்பட்டு 19 வருடங்களின் பின்னர் 1948 இல் நடந்த திருமண அழைப்பிதழ் ஒன்றைப் பார்ப்போம்.
தனது 14 வயதில் அரசியலுக்கு வந்ததாக பெருமையடித்துக்கொள்ளும் கருணாநிதி அடைப்புக்குறிக்குள் தாயாளுவின் தந்தை பெயரை பிள்ளை என்ற பின் ஒட்டுடன் போட்டுள்ளார்.

சாதி ஒழிப்புப் போராளிகளில் ஒருவராக காட்டப்படும் கருணாநிதி தனது சின்னமேளம் சாதிக்கு இசைவேளாளர் என்று பெயரை மாற்றிய சாதனையாளர்.
ஒழிக்கிற சாதிக்கு ஏன் பெயரை மாற்றுவான்!
அது மட்டுமல்ல கருணாநிதியின் வீட்டில் நடந்த ஒழுங்குசெய்த திருமணங்கள் அனைத்தும் அவரின் சொந்தக் சாதிக்குள்ளேயே நடந்துள்ளன.

கருணாநிதியின் திருமண அழைப்பிதழை எனக்கு அனுப்பியிருந்தவர் இளங்கோ சுப்பிரமணியன்( ElangoSubramanian SF

பதிவர்: Nadesapillai Sivendran