Showing posts with label உரை. Show all posts
Showing posts with label உரை. Show all posts

Wednesday, 6 November 2019

குறளை

குறளை

குறள் வேறு! குறளை வேறு!

கோதை (அதாவது ஆண்டாள்) "திருக்குறள் ஓதமாட்டோம்" என்று சொல்ல நினைத்திருந்தால்

"தீக்குறளை ஓதோம்" என்று மட்டும் கூறியிருக்கலாம்.
அதென்ன 'சென்று' ஓதுவது?!

ஒருவேளை அக்காலத்து பாடசாலை படிப்பு சொல்லிக் கொடுக்கும்போது திருக்குறளையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் இல்லையா?!
அங்கு 'சென்று' ஓதமாட்டோம் என்று கூறியிருக்கலாம் இல்லையா?!

அப்படியே சொல்ல நினைத்திருந்தால் "தீக்குறளைச் சென்றோதோம்" என்று 'ச்' போட்டு சொல்லியிருக்க வேண்டும்.

என்றால் கோதை கூறிய பொருள் என்ன?!

அவள் கூறவந்ததோ "தீக்குறளையைச் சென்றோதோம்" என்றுதான்.

ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் கூறிவிட்டால் அதாவது 'யை' தொக்கிவிட்டது.
அதாவது மறைந்துவிட்டது.

குறளை என்றால் என்ன?!

"குறளை ஓதுதல்" என்றால் "கோல் மூட்டுதல்" அல்லது "புறம் பேசுதல்" என்று பொருள்.

ஒருவரிடம் கேட்டதை அவருக்கு தெரியாமல் இன்னொருவரிடம் 'சென்று' கூறி கோள் மூட்டமாட்டோம் என்கிறாள் கோதை.

பொதுவாக புறங்கூறுதல் பெண்களின் குணம் என்பார்கள்.
கோதையும்
"நாட்காலே நீராடி மையிட் டெழுதோம்;
மலரிட்டுநாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்;
தீக்குறளை சென்றோதோம்"
என்று பெண்கள் செய்வதை தொடர்ச்சியாகக் கூறும்போதுதான் இதையும் சொல்கிறாள்.

'குறளை' பற்றி பெருஞ்சித்திரனார் தனது "திருக்குறள் மெய்ப்பொருளுரை" யில் எழுதியுள்ளார்...

‘கடுக்கி ஒருவன் கடுங்குறளை பேசி'
- நாலடியார் 1891

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லென'
- மணிமேகலை 30:68

‘குறளையுள் நட்பளவு தோன்றும்’
- திரிகடுகம் 371

‘பொய்குறளை வெளவல் அழுக்காறு இவைநான்கும்
ஐயந்தீர் காட்சியார் சிந்தியார்’
- ஆசாரக்கோவை 381

‘கடையாயார் முன்னின்று கூறும்
குறளை தெரிதலால்
பின்னின்னா பேதையார் நட்பு'
- பழமொழி நாற்பது 13.34

‘பொருளல்லார் கூறிய பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1471

‘காப்பாரே போன்றுரைத்த பொய்குறளை’
- பழமொழி நாற்பது 1932

‘குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது'
- முதுமொழிக்காஞ்சி 74

‘பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் நான்கும்
மறலையின் வாயின வாம்’
- ஏலாதி 28:3-4

'கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்'
- கந்த சஷ்டி கவசம்

குறள் என்றால் குறுகிய என்று பொருள் உண்டு.
திருக்குறள் குறுகத் தரித்ததால் அப்பெயர் பெற்றது.

குறளை என்பது வேறு!

"ஆண்டாள் ஒரு பாப்பாத்தி!
அவள் தமிழர் வேதமான திருக்குறளை ஓதமுடியாது என்று கூறிவிட்டாள்"
என்று ஒரு சிலர் பார்ப்பனரை தமிழர் இல்லை என்று திரித்துக் கூற முற்படுகின்றனர்.

அந்த சதிகாரர்கள் பேச்சை நம்பவேண்டாம்.

பார்ப்பனர் தமிழரே!

Saturday, 1 July 2017

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,

"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.

உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.

காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"

மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.

நன்றி: Jose Kissinger