Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Saturday, 1 July 2017

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,

"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.

உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.

காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"

மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.

நன்றி: Jose Kissinger

Tuesday, 20 December 2016

திருச்சிராப்பள்ளி - தமிழர்நாட்டின் தலைநகரம்

திருச்சிராப்பள்ளி - தமிழர்நாட்டின் தலைநகரம்

பலரும் சென்னைக்கு ஒரு தலைநகரமாக இருக்க தகுதி இல்லை என்று கூறுகிறார்கள்.

அது உண்மைதான்.

சிலர் பல தலைநகரங்களை அமைப்பது பற்றி கூறுகின்றனர்.
அதாவது அரசியல் தலைநகர், பொருளாதாரத் தலைநகர், இராணுவத் தலைநகர் என்றவாறு.
அது சரிவராது என்பது என் கருத்து.

சென்னைக்கு மாற்றாக மதுரையையும் திருச்சியையும் சிலர் முன்வைக்கின்றனர்.

ஓர் ஊர் நகரமாக உருவாக, அது முக்கிய சாலைகள் வெட்டிக்கொள்ளும் இடத்தில் இருக்கவேண்டும்.

அதுவே தலைநகராக உருவாக அது நாட்டின் மத்தியில் இருக்கவேண்டும்.

ஆறு ஓடும் இடமாகவும்
நிறைய மக்கள் குடியேற வசதியாக சமதள பரப்பாகவும் இருக்கவேண்டும்.

அந்த வகையில் திருச்சி தலைகரமாக இருப்பது சரிதான்.

தமிழகம் மட்டுமே நமது நாடு கிடையாது.
நமது நாடு கடல் தாண்டி இலங்கைத் தீவின் தென்கிழக்கு முனை வரை நீண்டுள்ளது.

மதுரையைவிட திருச்சிராப்பள்ளிதான் தலைநகராக இருப்பதற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

ஏனென்றால் வடக்கு-தெற்கு எல்லைகளான நெல்லூரும் அம்பாறையும் திருச்சியிலிருந்து  சமமான தொலைவில் உள்ளன.
மதுரையும் அவ்வாறே.

  மேற்கு எல்லையான பாலக்காடு மதுரையை விட திருச்சிக்கு நேர்க்கோட்டில் உள்ளது.

அதே போல திருச்சியிலிருந்து முக்கிய நகரங்களான மைசூர், பெங்களூர், சென்னை, திரிகோணமலை, திருவனந்தபுரம் ஆகியன சமமான தொலைவில் உள்ளன.

இவற்றை விட அருகில் சம தொலைவில் கோயம்புத்தூரும், தருமபுரியும், விழுப்புரமும், பாண்டிச்சேரியும், யாழ்ப்பாணமும், திருநெல்வேலியும்,  இராமேஸ்வரமும் உள்ளன.

அதைவிட மிக நெருக்கமாக மதுரையும் திண்டுக்கல்லும் கரூரும் சேலமும் தஞ்சாவூரும் புதுக்கோட்டையும் உள்ளன.
இவை தலைநகருக்குத் துணைநகரங்களாக உருப்பெற இயலும்.

மிக முக்கியமாக காவிரி ஆறு ஓடுகிறது.

ஆக சிராப்பள்ளியே தமிழர்நாட்டின் தலைநகராக விளங்க மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.

இதை நான் வெளியிட்ட "அகன்ற தமிழர்நாடு" வரைபடத்தில் குறித்துமிருந்தேன்.