Showing posts with label மன்மோகன் சிங். Show all posts
Showing posts with label மன்மோகன் சிங். Show all posts

Wednesday, 18 October 2017

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

பழைய மோடியும் புதிய மன்மோகனும்

2005 - 2013 ல் மன்மோகன் பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்த கடன் 36 லட்சம் கோடி.

அதாவது மொத்த கார்ப்பரேட் கடனையும் சேர்த்தால் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வயிற்றிலும் அடித்து தலைக்கு 29,000 ரூ பிடுங்கி பெருமுதலாளிகளுக்கு கொடுத்துள்ளான் மன்மோகன்.

இதில் அதிகமாக 72,000 கோடி அதானிக்கும்
1,13,000 கோடி அம்பானி குழுமத்திற்கும் கொடுத்துள்ளான்.
அதாவது அம்பானி - அதானி குடும்பம் வசதியாக உண்டு உறங்கி கொழுக்க ஒவ்வொரு இந்திய குடிமகனிடமும் 1850 ரூ பிடுங்கப்பட்டுள்ளது.

கொடுத்ததோடு சரி திருப்பி கேட்கவேயில்லை.
2013 வரை திரும்ப வந்தது மிக மிக குறைவு, ஒன்றுமே இல்லை எனலாம்.

2013 ல் புது வேலைக்காரன் மோடி வந்தான்.
வந்தவன் முதலாளிகளின் காலில் விழுந்து கும்பிட்டு,
"ஐயா! சாமீ! கொஞ்சமாவது திருப்பி கொடுங்க.
அப்பதான் இன்னும் அதிகமாக கடன் தரமுடியும்" என்று கோரிக்கை வைத்தான்.

"என்னது வாங்கிய பணத்தை திருப்பித் தரணுமா?
போடா வேலைக்கார நாயே!" என்று கூறிவிட்டு விஜய் மல்லையா வெளிநாடு போய்விட்டான்.

அவனது கடன் 9,091 கோடி.
இன்று வரை அவன் சொத்துகளை விற்கமுடியாமல் அல்லாடுகின்றன வங்கிகள்.
(அதிலும் அவனுடைய 103 கோடி மதிப்புள்ள கிங்பிஷர் ஹவுஸ் ஐந்துமுறை ஏலம் விடப்பட்டு சரியான விலைக்கு வாங்க ஆளில்லாமல் ஏலம் தோல்வியில் முடிந்துள்ளது)
எல்லா சொத்துக்களையும் விற்றாலும் 4300 கோடி குறைந்த பட்சம் நஷ்டம் ஏற்படும்.
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் சட்டைப் பையிலிருந்தும் 32 ரூ மல்லையாவால் எடுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ளது).

மல்லையாவை விட எட்டு மடங்கு கடன்காரன் அதானி.
மோடியை வேலைக்கு அமர்த்திய முதலாளி இவன்தான்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது இவனது கடன் 96000 கோடி.
இவன் ஒருவனது கடன் மட்டுமே ஒட்டுமொத்த விவசாய கடனுக்கு சமமாகும்.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 716 ரூ)

அனில் அம்பானியின் தற்போதைய கடன் 1,21,000 கோடி
(அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இவன் 902 ரூ கொடுக்கவேண்டும்)

முகேஷ் அம்பானியின் கடனோ 1,87,000 கோடி
(ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஏறத்தாழ 400 ரூ தரவேண்டும்)

அதிகம் பேசப்படாத குழுமம் எஸ்ஸார் குழுமம்.
கடன் அம்பானியை விட கொஞ்சம் குறைவு. அதாவது 1,01,500 கோடி.
(அதாவது ஒவ்வொரு குடிமகனுக்கும் 757 ரூ)

இவர்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் அரக்கன் டாடா குழுமம்.
பல வெளிநாடுகளிலும் இது கிளைபரப்பி இருப்பதால் இந்தியாவில் இதன் கடனை சரியாகக் கூறமுடியவில்லை.
இரண்டு லட்சம் கோடி வரை இருக்கலாம்.
(தலைக்கு 1400 ரூ வரும்).

இதையெல்லாம் படிக்கும் நீங்கள் என்னதான் முக்கி முக்கி சம்பாதித்தாலும் வாழ்நாளில் ஒரு கோடி சொத்து சேர்க்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் கஷ்டப்பட்டு உழைத்து வரிகட்டி வங்கியில் போடுவோமாம்.
மத்திய அரசு நோகாமல் மொத்தமாக எடுத்து கார்ப்பரேட்காரனுக்கு அள்ளி அள்ளி கொடுக்குமாம்.
அது அங்கு சுற்றி இங்கு சுற்றி நமது தலையிலேயே கடனாக வந்து விழுமாம்.

நம்மை கொள்ளையடித்து வடயிந்தியராவது வாழ்கிறார்களா என்றால் இல்லை.
அத்தனையும் பெருமுதலாளிகளின் கணக்கில் போய் சேருகிறது.
அதை அந்த பெருமுதலாளி தன்வாழ்நாள் முழுவதும் செலவுசெய்ய முடியாது.
ஆக யாருக்குமே நன்மை பயக்காது நமது பணமெல்லாம் வீணாகிறது.

இந்தியாவை விட அதிகம் கடன் உள்ள நாடுகள் 23 இருக்கின்றன.
  அவை அனைத்தும் வளர்ந்த நாடுகள்.
கடனும் வாங்கி வளர்ச்சியும் அடையாமல் அனைத்தையும் கார்ப்பரேட்டுக்கு தாரைவார்த்ததால்
இன்று பிறக்கும் ஒரு குழந்தை 53,800 ரூ கடனாளியாக பிறக்கிறது.
இந்த கடனும் கூடிக்கொண்டே போகிறது (குறிப்பாக மோடி வந்தபிறகு).
ஏழாண்டுகளில் இந்த தனிநபர் கடன் ஏறத்தாழ இரு மடங்கு ஆகியுள்ளது.
(இத்தனைக்கும் தனிநபர் ஆண்டு வருமானம் 1 லட்சம்தான்)

இந்தியாவின் பொருளாதாரத்தை 3ல்1 பங்கு தாங்கிக்கொண்டு நிற்கும் தமிழகம் உழைத்து கொட்ட,
வடயிந்தியன் அதிலும் குறிப்பாக குஜராத்தியன் பணம் சேர்த்துக்கொண்டே போகிறான்.

நாமோ சேமிப்பையும் வரியையும் வடக்கே அள்ளி இரைத்துவிட்டு தண்ணீருக்கும் பாதுகாப்புக்கும் ஹிந்தியனிடம் மன்றாடி நிற்கிறோம்.

கார்ப்பரேட் பணக்காரர்களிலோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு தமிழனைக் கூட பார்க்கமுடியவில்லை.
(தி.மு.க குடும்பத்தைக் கூட நாம் தெலுங்கன் கணக்கில்தான் சேர்க்கவேண்டும்)

கார்ப்பரேட் திட்டங்கள் முதலில் தமிழ் மண்ணை குறிவைத்தே வருகின்றன.
நாமோ போராடி போராடி சாகிறோம்.

இப்படி ஒரு வறுமையான நாட்டிடம் கொடூரமான ஆட்சியாளர்களிடம் நாம் ஏன் சிக்கித்தவிக்கிறோம்?

கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் இந்த ஹிந்திய அரசிடமிருந்து நாம் பிரிந்து தனிநாடு அமைப்போம்.
இதன்மூலம் நமது மண்ணில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஒழிப்போம்.
தமிழர்நாட்டிலும் முதலாளித்துவம் வளராது தடுப்போம்.

நமது நெற்களஞ்சியம் முற்றாக அழிக்கப்படவுள்ளது.
கதிராமங்கலம் உட்பட பல இடங்களில் வேலை தொடங்கிவிட்டது.

இப்போது விழிக்காவிட்டால் தமிழ்நாடு ஒரு சோமாலியா ஆவதை யாராலும் தடுக்கமுடியாது.

Saturday, 1 July 2017

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,

"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.

உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.

காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"

மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.

நன்றி: Jose Kissinger