Showing posts with label ஆதார். Show all posts
Showing posts with label ஆதார். Show all posts

Wednesday, 22 November 2017

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!

இனி ஜட்டி  வாங்கினாலும் காட்டிக்கொடுக்கும் ஆதார்!
பாதுகாப்பு இருக்கு ஆனா இல்ல!

(மத்திய அரசுக்கு பிடிக்காதோரின் சொத்துகளை பிடுங்க வசதியாக)   சொத்துக்களுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட உள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார் (நேற்றைய பாலிமர் செய்தி).

படம்: தனிநபர் ஆதார் ரகசிய தகவல்கள் 210 அரசு வெப்சைட்டில் வெளியீடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் பெறப்பட்ட தகவல்.
(ஜியோ சிம் அரசு சார்ந்ததா என்று கேட்கக்கூடாது!)

நீதிமன்றம் ஆதார் திட்டம் தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று (காலம் கடந்து) அறிவித்ததை இவர்கள் கால்தூசியளவும் மதிக்கவில்லை என்பதையும் பேசக்கூடாது.

"காங்கிரஸ் கொண்டுவந்துள்ள ஆதார் தீவிரவாதிகள் ஊடுருவ வழிவகுக்கும்.
எல்லை மாநிலமான என் குஜராத் முதலில் பாதிக்கப்படும்" என்று மோடி முதலில் எதிர்த்ததையும் மறந்துவிடவேண்டும்.

ஜெய்ஹிந்தி! என்று கூறிக்கொண்டு அடங்கிக்கிடந்தால்
எல்லையில் பத்துநாளுக்கு ஒருவர் வீதம் ராணுவவீரர்கள் சாகிறார்களே அது குறையும்.

Saturday, 1 July 2017

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

ஆதார் - பாகிஸ்தான் ஊடுருவிகளின் அடையாளம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில்,

"கடந்த 2 நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பினை கூறியிருக்கிறது.
காங்கிரஸார் நடனமாடிக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை குறித்த தீர்ப்புதான் அது.

உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆதார் அட்டை சென்றது ஏன் என்பதும் குறித்தும் இதனால் பயன் அடைந்தவர்கள் யார் யார் என்பதும் குறித்தும் மத்திய அரசும், பிரதமரும் விளக்க வேண்டும்.

காரணம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டை குறித்து நான் கூறிய கருத்தைத்தான் கேட்ட கேள்விகளைத்தான் தற்போது உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

குஜராத், பாகிஸ்தான் எல்லையொட்டி உள்ள மாநிலம்.
இங்கு ஆதார் அட்டை போல் மத்திய அரசு ஒரு அடையாள அட்டை வழங்கினால் ஊடுருவி இருக்கும் நபர்கள் ஆதாயம் அடைவார்கள் என கூறியிருந்தேன்.
மேலும் இது குறித்து அனைத்து முதல்வர்களிடம் பேச வேண்டும் என குறிப்பிட்டேன்.
ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆதார் அட்டை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்கிற எனது கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனது கருத்தினை பிரதமர் உள்ளிட்டோர் காதில் வாங்கி கொள்ள வில்லை.
தற்போது உச்சநீதிமன்றம் ஆதார் அட்டை குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.
இந்த அடையாள அட்டைக்காக ஏழை மக்களின் வயிற்றுக்கு செல்லவேண்டிய பல ஆயிரம் கோடி பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் விளக்க வேண்டும்"

மேற்கண்ட பேச்சு 27.09.2013 அன்று திருச்சியில் நடந்த பாஜக கூட்டத்தில் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி (இதே மோடிதான் வேற ஆள்னு நெனச்சிரப்போறீங்க) பேசிய பேச்சு.

நன்றி: Jose Kissinger

Thursday, 4 May 2017

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

ஆதார் - நவீன குற்றப்பரம்பரை

வெள்ளைக்காரன் கொண்டுவந்த குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் கைரேகை எடுக்கும் முறையின் நவீன வடிவம்தான் ஆதார்.

அவனாவது ஒரு குறிப்பிட்ட மக்களைக் கண்கானிக்க அதைச் செய்தான்.

ஆனால் மோடி நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அதைச் செய்கிறான்.

இதை அரசு மட்டும் பயன்படுத்தினால் பெரிய பிரச்சனை இல்லை.

இதை மோ(ச)டி அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கிறது.

பணம் படைத்தவனெல்லாம் எல்லாம் அறிந்த கடவுளாக உருவெடுப்பான்.

இதன்மூலம் ஒரு மனிதனின் அன்றாட வாழ்க்கையை கண்கானித்து அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, தேவையானது ஆகியவற்றை அறிந்து அந்த சந்தைக்கு ஏற்ப அவர்களால் விற்பனை செய்யமுடியும்.

தேவையில்லாததை விளம்பரம் செய்து விற்கவும் முடியும்.

உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்த ஒருவனிடம் உன்னால் மோதமுடியுமா?!