Showing posts with label மூவர் தூக்கு. Show all posts
Showing posts with label மூவர் தூக்கு. Show all posts

Saturday, 29 June 2019

எழுவர் தூக்கு விடயத்தில் வஞ்சகம் செய்த கருணாநிதி - பழ.நெடுமாறன் எழுத்துகளில்

எழுவர் விடுதலையை தடுத்த" துரோகி கருணாநிதி"


எழுவர் விடுதலையை கருணாநிதி எப்படியெல்லாம் தடுத்தார் என்பது ஐயா பழ நெடுமாறன் எழுதிய நூலிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் முழுதாக விடுவிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டவர் ஐயா பழ நெடுமாறன் அவர்கள்.
அவர் இதற்காக பலரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி, இப்போது இருக்கும் எழுவரை தவிர மீதி உள்ளவர்களை விடுதலை செய்ததில் ஐயாவின் பங்களிப்பு முக்கியமானது.


அப்படியானவர் தூக்கு கொட்டடியிலிருந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து எப்படியாவது விடுவித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் என்பதை தினமணியில் கட்டுரையாக எழுதியுள்ளார். 

அதுவே தினமணி கட்டுரை என்ற நூலாக வெளிவந்துள்ளது. 

அதைப் படிக்கப் படிக்க, கருணாநிதி என்ற துரோகி எழுவர் விடுதலை விஷயத்தில் செய்த அத்தனை அயோக்கியத்தனத்தையும் புறிந்து கொள்ளமுடிகிறது.


சரி வாருங்கள் நூலுக்கு செல்வோம்.


-------


அவர்களை விடுவிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று புறப்பட்ட போது முதலாவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின மருமகளும் மனித உரிமை ஆர்வலருமான மோகினி கிரி அம்மையார் அவர்களை சந்திக்க முடிவு செய்தோம் மோகினிகிரி சோனியா காந்தி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறிந்து, நாங்கள் அவர்களை சந்தித்தால் இந்த வழக்கு விரைவில் முடித்து அவர்களை வெளியில் எடுத்து விடலாம் என்று நம்பிக்கையோடு நாங்கள் அவர்களை சென்று சந்தித்தோம்.


அவரிடம் இந்த நால்வரின் மரண தண்டனை தொடர்பாக பேசினேன்.
அதன் விளைவாக அவர் இந்த நால்வரையும் சிறையில் சந்திக்க விரும்பினார்


வழக்கறிஞர் கோபியுடன் அவரை வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தேன்.
இந்த நால்வரையும் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற மூவரையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்த அவர் பெரிதும் நெகிழ்ந்து போய் இருந்தார்.
அதிலும் கற்றறிந்த நளினியின் சந்திப்பு அவர் உள்ளத்தையும் மிகவும் தொட்டிருந்தது. என்னிடம் அவர்களைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார்.
திருமதி சோனியா அவர்களிடம் இது குறித்து பேசுவதாக கூறினார். அதன்படியே பேசி திருமதி சோனியா அவர்களும் இந்த நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பினார்.

இந்த நால்வரின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தோம்


மேலும் டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாய் உட்பட அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து முறையிடுவது என முடிவு செய்தோம், அதற்கிணங்க மணியரசன், தியாகு, கார்முகில் ஆகியோருடன் நானும் டெல்லி சென்று நண்பர் வைகோ அவர்களின் உதவியுடன் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, ராணுவத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராம்ஜெத்மலானி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனுக்கள் அளித்தோம்.

சட்டத்துறை அமைச்சர் ஜெத் மாலினியை சந்தித்தபோது அவர் எங்களிடம்,

"ஏன் உங்கள் முதலமைச்சரே இதை செய்யலாமே என்று கூறினார்"


என்ன காரணத்தினாலோ அவர் தயங்குவதாக நாங்கள் தெரிவித்தபோது


"முதலமைச்சரின் தொலைபேசி எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டார், அவரே உடனடியாக அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிது நேரத்தில் முதலமைச்சர் கருணாநிதி அவரிடம் பேசினார்


"எதற்காக தயங்குகிறீர்கள்" "தைரியமாக செய்யுங்கள்" " நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்" என்று ஜெத்மாலனி கூறினார் ஆனால் முடிவில்


"அவர் நீங்களே செய்யுங்கள் என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்" என்று எங்களிடம் கூறினார்.


திருமதி சோனியா காந்தி அவர்கள் நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கடிதம் எழுதிய செய்திக்குப் பிறகு, நளினியின் தண்டனை மட்டும் குறைக்க கருணாநிதி முன் வந்தாரே தவிர மற்றவர்களின் தண்டனையை குறைத்து மரண தண்டனையை ஒழிக்க முன்வரவில்லை.


ஆனால் மரண தண்டனைக்கு எதிராக முழங்கியவர் கருணாநிதி.


ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போது அதை கண்டித்தவர் கருணாநிதி.


பாகிஸ்தான் சிறையில் வாடும் சரண்தீப் சிங் தூக்குத் தண்டனையை குறைக்க உலகநாடுகள் குரலெழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சிறந்த மனிதராக தன்னை காட்டிக் கொண்டவர் கருணாநிதி.


அண்மையில் சென்னையில் நடந்த மரண தண்டனைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொண்ட முதல் அமைச்சரின் மகள் திருமதி கனிமொழி அவர்கள் தூக்கு மேடையின் நிழலில் நிற்கும் பேரறிவாளனின் நூலை வெளியிட்டு மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை கூறினார்.
இதன் மூலம் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் புதிய நம்பிக்கை பெற்றார்கள்.


அண்ணா நூற்றாண்டில் தமிழ் நாட்டில் மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறக்கும் என நம்பினர்.
ஆனால் அந்த நம்பிக்கை அடியோடு தொலைந்து விட்டது


உலக அளவில் மதிக்கப்படும் முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் அவர்கள் அண்ணா நூற்றாண்டில் பேரறிவாளன் உட்பட மூவருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் அந்த கடிதத்துக்கும் அவர் எந்த மதிப்பும் தரவில்லை.

17 ஆண்டுகாலத்திற்கு மேலாக சிறையில் வாடும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எழுத்தாளர்கள் கலைஞர்கள் கவிஞர்கள் கையெழுத்திட்ட வேண்டுகோள் கடிதத்தை தியாகு மற்றும் அவரது துணைவியார் திருமதி தாமரை ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கொடுத்த போது,


"தான் எதுவும் செய்வதற்கில்லை டெல்லி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பிவிட்டார்.

எல்லோரிடமும் இவ்வாறு கூறுகிறார் இது உண்மையா இந்தக் கூற்றில் கொஞ்சமும் உண்மை கிடையாது.


கிரிமினல் சட்ட விதிகளின் மத்திய மாநில அரசுகளுக்கு பொதுவான பட்டியல் உள்ளன.
எனவே தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிப்பது குறித்து சட்டத்தை தமிழக சட்டமன்றமே இயற்ற முடியும்


இதுதான் சட்டம் அறிந்த வல்லுனர்களின் கருத்தாகும்.
ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சருக்கு துணிவுமில்லை மனமுமில்லை


நால்வரின் கருணை மனுவை அன்றைய ஆளுநர் தள்ளுபடி செய்த போது உயர் நீதிமன்றம் அந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தது.
கருணை மனுக்கள் மீது முடிவு செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு என்று கூறியும் அந்த அதிகாரத்தை பயன்படுத்த முதல்-அமைச்சர் கருணாநிதி முன்வரவில்லை அதைத் தட்டிக் கழித்தார்


அண்ணா நூற்றாண்டு விழாவிலும் அதையே செய்கிறார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரான லீலாவதியை பட்டப் பகலில் நட்டநடு வீதியில் படுகொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திமுகவினரை 7 ஆண்டுகளில் விடுதலை செய்ய அவரால் முடிகிறது இவர்களுக்காக ஆயுள் தண்டனை பெற்ற அனைவருமே 7 ஆண்டுகளில் விடுதலை பெற்று விட்டார்கள்.


தனது கட்சிக்காரர் களுக்காக சட்டத்தையே வளைத்தும், திறமை வாய்ந்த முதலமைச்சருக்கு நியாயத்தின் அடிப்படையில் கூட மரண தண்டனையை ஒழிக்க மனமில்லை.

வாய்ச்சொல் வீரராக சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப ஏமாற்றுபவராக விளங்கும் ஒருவரால் மனிதநேயத்தோடு ஒரு போதும் செயல்பட முடியாது என்பதைத்தான் அவர் நிரூபித்திருக்கிறார்.


பழ. நெடுமாறன்


தென்செய்தி


அக்டோபர் 1. 15. 2010


******************************

எம்மை பொறுத்தவரை கருணாநிதி ஒரு தெலுங்கு இனப் பற்றாளர்,
அத்தோடு சுயநலவாதி.
இந்த நால்வரையும் விடுதலை செய்தால் தனக்கு ஆயிரம் கோடி கிடைக்கும் என்றால் உடனே விடுதலை செய்திருப்பார்.


இல்லை பாதிக்கப்பட்டு தூக்கு கொட்டடியில் இருப்பவர்கள் தெலுங்கர்களாக இருந்தால் அவர் விடுதலை செய்து இருப்பார்.


கருணாநிதியை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழர் அல்லாத அனைவருக்கும் மனிதநேயம் காட்டுவார், இரக்கம் காட்டுவார், எல்லாம் காட்டுவார்.
தமிழர்கள் என்றால் 'செத்து ஒழியட்டும் நாய்கள்' என்று இருப்பார் அந்த துரோகி கருணாநிதி


இந்த மண்ணில் பிறக்கின்ற பச்சைத் தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரும் இந்த கருணாநிதியின் துரோகம் பற்றியும்,
தெலுங்கு இன அரசியல் ஆதிக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளும் வரை எமது போராட்டம் தொடரும்.

அதியமான்

பொதுச் செயலாளர்


தமிழர் முன்னேற்ற கழகம்


Saturday, 8 September 2018

பேரறிவாளனும் திராவிடமும்

பேரறிவாளனும் திராவிடமும்

கேள்வி: பெரியாரிய கொள்கைகளைப் பின்பற்றும் பேரறிவாளனின் விடுதலைக்கு திராவிடர் கழகம் செய்த பங்களிப்பு என்ன?

அற்புதம் அம்மாள்: அதுவொரு கொடுமை.
முதல் துரோகமே பெரியார் திடல்லதான் கெடச்சது.
பெரியார் சிலைகிட்ட இருந்துதான் என் மகன சிபிஐ கூட்டிட்டுப் போனாங்க.
ஆனா, அதப்பத்தி விடுதலை பத்திரிக்கைல ஒரு அறிக்கையோ, செய்தியோ வரல.
வந்திருந்தா, சிபிஐ நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும்ன்னு நான் இன்னைக்கும் நம்புறேன்.
ஏன்னா அறிவுக்காக குரல் கொடுக்க யாருமே இல்லன்னுதான் அவன் மேல நிறைய குற்றம் சுமத்துனாங்க.

கேள்வி: திமுகவாவது உங்க மகனின் விடுதலைக்கு ஏதாவது செய்ததா?

அற்புதமம்மாள்: கலைஞர் கருணாநிதி முதலமைச்சரா இருந்தப்ப நெடுமாறன் ஐயா தலைமைல ஆயிரக்கணக்கான பேர் திரண்டு ஒரு கோரிக்கை மனு வச்சோம்.
அப்ப நாலு பேருக்கு மரண தண்டனை இருந்தது. குழந்தைகள், பெண்கள்ன்னு எல்லா அமைப்புகளும் திரண்டு போனோம்.
தண்டனைக் குறைப்பு வழங்குங்க. உங்களுக்கு அதிகாரம் இருக்குன்னு கோரிக்கை மனு கொடுத்தோம்.
நளினிக்கு தண்டனைக் குறைப்பு செஞ்சாரு.
அறிவுக்கு பண்ணுவாருன்னுதான் நெடுமாறன் ஐயா உட்பட எல்லாரும் எதிர்பார்த்தோம்.
ஆனா, செய்யல.
நளினிக்கும் தண்டனைக்குறைப்பு செஞ்சாங்களே ஒழிய விடுதலை செய்யல.
அவரது ஆட்சியில செம்மொழி மாநாடு, அண்ணா பிறந்த நாள்ன்னு எத்தனையோ பேர விடுதலை செஞ்சாங்க.
அப்பகூட நளினிய விடுதலை செய்யல.

நன்றி: சீனி. மாணிக்கவாசகம்
(முகநூல் பதிவு, 31.05.16)
தீ இதழ் (மே 2016)

----------------------

கேள்வி: ஏன் அரசியல் கட்சிகள் பகிர்ந்துகொள்ளவில்லையா?

அற்புதம் அம்மாள்:
சில விஷயங்களை எல்லாம் பேச வேணாம்னு நெனைக்கிறேன்பா.
அவ்வளவு துரோகங்கள் இருக்கு அறிவு கதையில.
ரெண்டு உதாரணங்களை மட்டும் சொல்றேன்.
எந்த இயக்கத்தை எங்க உயிரா நெனைச்சோமோ, அந்தத் தி.க. என்ன பண்ணுச்சு தெரியுமா?
அறிவு கைதுசெய்யப்பட்ட உடனே, இயக்கத்துக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு அறிவிச்சுச்சு.
சீக்கிரமே, பகுத்தறிவுக் கழக மாவட்டப் பொறுப்பாளரா இருந்த என்னோட கணவர் குயில்தாசனையும் ஒதுக்குச்சு.
அவசர நிலைக் காலகட்டத்துல, கலைஞர் அரசு கவிழ்க்கப்பட்டப்போ, எதிர்த்துப் போராட நிதி வசூலிச்சுக்கிட்டு, ஊரையே திரட்டிக்கிட்டுப்போய்,
“தலைவா! நாங்க இருக்கோம் உன்கூட”னு நின்ன குடும்பம் எங்களோடது.
ஆனா, அறிவு கைதுசெய்யப்பட்ட பின்னாடி இந்த 23 வருஷத்துல ஒருமுறைகூட அவரைச் சந்திக்க முடியலை.
இதையெல்லாம் குற்றச்சாட்டா சொல்லலை.
வேதனையாதான் சொல்றேன்.
இப்படி எவ்வளவோ கதைகளைச் சொல்லலாம்.
ஆனாலும், நெடுமாறன், நல்லகண்ணு, தியாகு, வைகோ, சீமான் இவங்கல்லாம் பெரிய ஆதரவைத் தந்திருக்காங்க.
எல்லாத்துக்கும் மேல இப்போ முதல்வர் அம்மா என் பிள்ளையை மீட்டுத்தர்றேன்னு சொல்லிட்டாங்களே…

தி ஹிந்து (26.02.2014)

Saturday, 11 June 2016

அப்பாவிகள் தண்டிக்கப்படாமல் இருக்க

அப்பாவிகள் தண்டிக்கப்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்???

ஒரே வழி, அவர்கள் உண்மையிலேயே குற்றவாளிகளாக இருக்கவேண்டும்.

  ஹிந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் விதிமுறை இதுதான்.

குற்றவாளியை விட அப்பாவிதான் தண்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

( இது மிகைப்படுத்தப்பட்ட பதிவு அல்ல)