Friday 18 July 2014

பொல்லாதத் தமிழர்கள்

பொல்லாத தமிழர்கள்
LLLLLLLLLLLLLLLLLLL
உலகை உலுக்கிய மனிதர்களை என்றுமே மக்கள்
மறப்பதில்லை
அப்படி ஆட்டிப்படைத்த தமிழர்களும்
இருக்கவே செய்தனர்;
அவர்கள் பற்றி ஒரு பதிவு.
மஸ்தான் மிர்ஸா
--------------------------
1970களிலும் 1980களிலும் மும்பையைக் கலக்கிய
நிலழுலக பெருந்தலை (underworld don); 1926ல்
இராமநாதபுரத்தில் பனைக்குளம் என்ற சிற்றூரில்
பிறந்தவர்; மள்ளராக இருந்து இசுலாமியராக மாறிய
குடும்பம்; 1955ல் தமது 17வயதில் சுமைதூக்கும்
கூலியாக பம்பாயில் தமது வாழ்க்கைத் தொடங்கினார்;
பத்தே வருடங்களில் கடத்தல் தொழிலில்
ஈடுபட்டு இந்தி திரைப்படங்களைத் தயாரிக்கும்
அளவு உயர்ந்தார்; 1975
நெருக்கடி காலத்தின்போது சிறையிலடைக்கப்பட்டார்;
சிறையில்தான் இவர் இந்தி (பம்பாய் வந்து 20ஆண்டுகள்
கழித்து) பேசக் கற்றார்; இவருக்கு தமிழ்
மட்டுமே எழுதப் படிக்கத் தெரியும்; விமானம் மூலம்
சென்னையிலிருந்து நாளிதழ்கள் வரவைத்துப்
படித்துக்கொள்வார்; இவர் 1980களில்
மும்பையிலேயே முதல் பெரியமனிதராக இருந்தார்;
அப்போது இவரது மாதவருமானம் நூறுகோடிக்கும் மேல்
என்கிறார்கள்; கடத்தலிலும் இவர் மின்னணு சாதனங்கள்,
தங்கம், வெள்ளி போன்றவற்றையே கடத்தியுள்ளார்;
நிழலுக வாழ்க்கையில் இவர் எவ்வளவு நன்மை செய்தார்
எவ்வளவு தீமை செய்தார் என்பது தெளிவாகத்
தெரியவில்லை; இந்தியில் இவரது வாழ்க்கையைத்
தழுவி பல படங்கள் வந்துள்ளன; தமிழில் 'தீ' என்ற படம்
இவர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது.
வரதராசமுதலியார்
---------------------------
1926ல் வேலூரில் பிறந்தார்; கூலிவேலை செய்ய
பம்பாய் சென்று 1980களின் பிற்பகுதியில்
பம்பாயை ஆட்டிப்படைத்தவர்; இவரும் மஸ்தான் மிர்ஸாவும்
நண்பர்கள்; கடத்தலில் ஈடுபட்ட இவரும் நிலழுலகப்
பெருந்தலை; எனக்குத் தெரிந்து ஒரே துறையில்
இருதமிழர்கள் கொடிகட்டிப் பறந்தும் தங்களுக்குள்
மோதிக்கொள்ளாதது இவர்கள் காலத்தில்
மட்டுமே நடந்துள்ளது; 1982ல் இவரது மாதவருமானம்
80கோடிக்கு மேல் என்கின்றனர்; இவர் 1990ல்
சென்னையில்
மரணமடைந்தபோது இவரது பூதவுடலை மஸ்தான்
தனி 'இந்தியன் ஏர்லைன்ஸ்' விமானம் மூலம் பம்பாய்
கொண்டுவந்து தமிழர் பகுதிகளில் அஞ்சலிக்காக
எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்;
இவரது வாழ்க்கையைத் தழுவியும் பல படங்கள்
வந்துள்ளன; தமிழில் 'நாயகன்' படம் வந்துள்ளது.
பேங்டாங் காளி
---------------------
1961ல் மலேசியாவில் 'பேங்டாங்'ல் பிறந்தார்;
1990களில் நிழலுகப் பெருந்தலையாக
உருவெடுத்தார்; இவரைப்பற்றி தகவல்
தருவோருக்கு ரூபாய் மதிப்பில் 10,40,000
அறிவிக்கப்பட்டிருந்தது; 200பேர் கொண்ட
தனிப்படை அமைக்கம்பட்டிருந்தது; 1993ல்
காவல்படையினருடன் துப்பாக்கி மோதலில்
கொல்லப்பட்டார்; இவரைப் பற்றி வேறு தகவல்கள் இல்லை;
தற்போதும் மலேசியாவில் அறிவிக்கப்பட்ட
பெருந்தலைகள் பலரும் தமிழர்கள்; (பில்லா படம்)
மலேசிய எல்லைக்கருகே தாய்லாந்து நாட்டுக்குள்
'பென்டாங்' 'டன்னோக்' போன்ற பகுதிகளில் பெருந்தலைகள்
(பெரும்பாலும் தமிழர்கள்) ஆதிக்கம் கொடிகட்டிப்
பறப்பதாகக் கூறுகின்றனர்.
மலையூர் மம்பட்டியான்
----------------------------------
1959லிருந்து ஐந்து ஆண்டுகள்
காவல்துறைக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்;
நெடுஞ்சாலைத் துறையில் கூலிவேலை செய்துவந்தவர்;
பிற்காலத்தில் காட்டுக் கொள்ளைக் காரனாகவும்
வேட்டைக்காரனாவும் மாறினார்; தமது காலத்தில் பல
வீரசாகசங்களைச் செய்தவர்; கொள்ளைக்காரனாக
இருந்து பிற்காலத்தில் தமிழினப் போராளியாக
மாறிய வீரப்பனாருக்கு இவர்தான் முன்மாதிரி; கென்னத்
ஆன்டர்சன் என்ற ஆங்கிலேயர் காடுகளில்
மம்பட்டியானுடன் தங்கியிருந்த
தமது அனுபவங்களை தமது நூல்களில் குறிப்பிடட்டுள்
ளார்; 1964உடன் பழகிய ஒருவராலேயே சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இவரது வாழ்க்கையைத் தழுவி 'மலையூர் மம்பட்டியான்'
படம் வெளிவந்தது.
இவர்களை முன்மாதிரியாகக் கொள்ளமுடியாதுதான்;
இவர்கள் வாழ்க்கையும் பெரும்பாலும்
வெளிப்படையானதாக இல்லாததால்
இவர்களை எடைபோடுவதும் கடினம்; இருந்தாலும்
வெளியிடங்களுக்குச் சென்று அங்கே வல்லவர்களாகத்
திகழ்ந்தவர்கள் என்பதால் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்
https://m.facebook.com/photo.php?fbid=425989110838081&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment