Saturday 26 July 2014

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

ஈழம் நோக்கிப் புறப்பட்ட தமிழகம்

$S$S$S$S$S$S$S$S$S$S$S$

ஈழத்தில் கருப்பு யூலைக் கலவரம்
நடந்தபோது தமிழகத்தில்
பல்வேறு போராட்டங்கள் தமிழக மக்களால்
நடத்தப்பட்டது; வேற்றினத்தார் ஆட்சியில்
சிக்குண்டுள்ள 'ஏழைத் தமிழகம்' தம்மால்
முடிந்த எதிர்ப்பைத் தெரிவித்தது;
அதில் முத்தாய்ப்பான போராட்டம்
பழ.நெடுமாறன் அவர்கள் நடத்திய 'தியாக
பயணம்' போராட்டம்;
கருப்பு யூலைக் கலவரம்
முடிந்து ஒவ்வொரு செய்தியாக வெளிவெரத்
தொடங்கியபோது தமிழக மக்கள்
அதிர்ந்துபோனார்கள்;
ஈழம் நோக்கிச் செல்லவும் துணிந்த
பழ.நெடுமாறன் துணிவுள்ள இளைஞர்கள்
மதுரையில் கூடும்படி அழைப்பு விடுத்தார்;
சுமார் ஐயாயிரம் இளைஞர்கள் மதுரையில்
திரண்டனர்;
7,ஆகஸ்ட்,1983 அன்று குன்றக்குடி அடிகளார்
தொடங்கிவைக்க மதுரையிலிருந்து பேரணியாக
ராமேசுவரம் சென்றனர்;
வழிநெடுக மக்கள் வரவேற்பளித்தவாறும்
விருந்தோம்பல் செய்தும் கூட்டத்தில்
சேர்ந்தவாறும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள்
ராமேசுவரம் வந்தடைந்தனர்;
காவல்துறையினர் இந்த எழுச்சிபெற்றக்
கூட்டத்தைச் சமாளிக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருந்தனர்;
என்ன செய்வது ஈழத்திற்கும் தமிழகத்திற்கும்
இடையில் இந்தப் பாழாய்ப்போன கடல்
இருக்கிறதே!
காவல்துறையினர் முன்னேற்பாடாக படகுகளைப்
பறிமுதல் செய்துவிட்டிருந்தனர்;
ராமேசுவர மீனவர்களையும் போராட்டக்காரர்க
ளுக்கு படகு தரக்கூடாது என்று மிரட்டிவைத்திரு
ந்தனர்;
ஆனாலும் கிடைத்த ஒரு படகுகளில்
ஏறிக்கொண்டு பழ.நெடுமாறன் தலைமையில்
புறப்பட்டனர்;
பலர் முடிந்த
தொலைவு வரை கூடவே நீந்திச்சென்றனர்;
நடுக்கடலில் கடலோரக் காவல்படையால்
வழிமறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சட்டமன்றத்தில் ம.கோ.இரா (எம்ஜிஆர்)
மீது படகுகளைப் பறிமுதல் செய்ததாகக்
குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கடுமையான
கண்டம் தெரிவிக்கப்பட்டது;
"ஆமாம், நான்தான் பறிமுதல் செய்தேன்;
சிறிலங்கா கடற்படை சுட்டால்
தடுப்பதற்கு அவர்களிடம் மனத்துணிவைத் தவிர
என்ன இருக்கிறது?"
என்ற மகோஇரா பதிலளித்தார்.
(இதே போல பண்டாரவன்னியனுக
்கு தமிழகத்திலிருந்து 'ரகுநாத நாயக்கர்' என்ற
தெலுங்கு மன்னர் படையுதவி செய்துள்ளார்;
ஈழத்திற்கு வேற்றினத்தார் செய்த
உதவிகளை மறைக்கக்கூடாது என்பதற்காக
இதை இங்கே கூறுகிறேன்)
இதில் ஒன்றை நீங்கள் கவனிக்கவேண்டும்;
கருப்பு ஜூலை என்பது 25ம்
தேதியிலிருந்து 30ம் தேதி வரையான கலவரம்
ஆகும்.
ஆனால், 8நாட்கள் கழித்துதான் தமிழகம்
தமது பெரியளவிலான போராட்டத்தைத்
தொடங்குகிறது;
இதேபோல 2009
இனவழிப்பிற்கு பிறகு தமிழகத்தின்
பெரியளவிலான போராட்டங்கள் 2013ல்தான்
நடக்கிறது;
இதேபோலத்தான் கர்நாடக,ஆந்திர,கேரள
மாநிலங்களில் உள்ள தமிழர்கள் படும்
அல்லல்களும் அவர்களது போராட்டங்களும்
கூட தமிழக மக்களுக்குத் தெரியவராது;
என்றால் அந்தமான்,மலேசிய,சிங்கப்பூர்
தமிழரைப் பற்றி கூறவும் வேண்டுமா?
இதற்குக் காரணம் வேற்றினத்தார்
ஊடகங்களைக்கூட பெரும்பாலும்
கைப்பற்றி அரசியல் ரீதியாக
ஒரு இரும்புத்திரைக்குள் தமிழக
மக்களை வைத்திருப்பதுதான்.
ஈழமக்களும் மேற்குலக நாடுகளில்
பரப்புரை செய்வதில் காட்டும் அக்கறையைத்
தமிழ் மக்களிடம் பரப்புரை செய்வதில்
காட்டுவதில்லை;
தமிழகத்தின் ஈழ ஏதிலிகள்(அகதி) கடுமையான
கண்கானிப்பில் அடக்கி வைக்கப்பட்டிருப
்பது இந்த காரணத்தினாலேயே ஆகும்.
https://m.facebook.com/photo.php?fbid=470103026426689&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment