Thursday 10 July 2014

தமிழகம்-ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை


** தமிழகம் ==ஈழம் 
வாங்கிய அடிகளில் ஒற்றுமை 

இந்தியாவில் தமிழர் நிலப்பரப்பு(ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகம் சேர்த்து) 6% ==இலங்கையில் தமிழர் பரப்பு 33%

** இந்தியாவில் தமிழர் எண்ணிக்கை 6.8% 
==இலங்கையில் 17%

(இதுதான் தமிழகத்தைவிட ஈழத்தில் தமிழர் பெரிய விடுதலைப் போரை நடத்தமுடிந்ததற்கு காரணம்
ஆங்கிலேயர் இனரீதியாக பிரித்தாள தமிழரின் பழமையை ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தபடி இருந்தனர்; உலகப்போரில் இழப்பு காரணமாக ஆங்கிலேயர் வெளியேறும் நிலை வரும்போது அதுவரை தேசியமாகத் திரண்ட மக்கள் இனரீதியாக கிளர்ந்தெழ ,மூத்த இனமென்று சான்றுபெற்ற தமிழர்களுக்கு எதிராக 1910களில் திரும்புகிறார்கள்)

** 1920 சென்னை மாகாண அமைச்சரவையில் ஒரு தமிழர்கூட இல்லை ==1931ல் இலங்கை அமைச்சரவையில் ஒரு தமிழர்கூட இல்லை

** 1933 முதன்முதலாக தனிமாநிலம் கோரி தெலுங்கர் ஆந்திரமகாசபை அமைத்ததைத் தொடர்ந்து மராட்டியர், மலையாளிகள், கன்னடர் தத்தமது மகாசபைகளை அமைத்தனர்
== 1937ல் பண்டாரநாயக 'அவரவர் அவரவது இனத்தை திரட்டலாம்' என்று சிங்கள இனம் ஒன்றுசேர அழைப்பு

** 1947ல் போலி விடுதலை ==1948ல் போலி விடுதலை

** 1956ல் 'பசல் அலி கமிசன்' தமிழருக்கு துரோகம் (காரணம்-கே.எம்.பனிக்கர் )
==1947ல் சோல்பரி கமிசன் தமிழருக்கு துரோகம் (காரணம்-டி.எஸ்.சேனநாயக)

** 1937ல் இந்தி திணிப்பு, மாணவர் போராட்டம், நடராசன், தாளமுத்து மரணம்==1943ல் சிங்கள ஆட்சிமொழி கோரிக்கை

** 1965ல் மீண்டும் இந்தி திணிப்பு, மாணவர் போராட்டம், துப்பாக்கிச்சூடு, 70பேர் மரணம்==1956 சிங்களம் ஆட்சிமொழி சட்டம் நிறைவேறல், தமிழ்த்தலைவர்கள் மீது தாக்குதல்,மட்டகளப்பு கலவரம்

** 1939 தொடர்வண்டிகளில் இந்தி புகுத்தல், தார் பூசி அழிப்பு==1956 பேருந்துகளில் 'ஸ்ரீ' என்ற சிங்கள எழுத்து, பெயர்த்தெடுத்துஎதிர்ப்பு

** 1937 தனித்தமிழ்நாடு கோரிக்கை(தமிழ் மற்றும் திராவிட இயக்கங்கள்) == 1922ல் தனிஈழம் கோரிக்கை(அருணாசலம்)

** 1942 'தமிழ் ராஜ்ய கட்சி' (சி.பா.ஆதித்தனார்==1949 'தமிழரசு கட்சி' (தந்தை.செல்வா)

** 1946 தனிச் சட்டம் கொண்ட 'இந்தியாவுக்குள் தமிழ்க்குடியரசு' கோரி ம.பொ.சி 16 முக்கிய தலைவர்களிடம் கையெழுத்து பெறல் ==1949 செல்வா 'இலங்கைக்குள் இணை உரிமை (சமஷ்டி) அரசு' கோரல்

** 1952 சென்னையை ஆந்திராவுடன் இணைக்க உண்ணாமல் இருந்து ராமுலு மரணம், ஆந்திராவில் தமிழர் மீது மூன்றுநாள் கலவரம்,ம.பொ.சி, நேசமணி மற்றும் பல தமிழ்த் தலைவர்கள் கைது== 1959 பண்டாரநாயக சுட்டுக்கொலை, சிறி மாவோ அரசு அலுவலகங்களில் சிங்கள திணிப்பு, கலவரம், செல்வா வன்னியசிங்கம் போன்றோர் கைது

** 1950கள் தெலுங்கருக்கு ஆந்திர பல்கலை, மலையாளிகளுக்கு கேரளப் பல்கலை போன்று தமிழ்நாடு பல்கலைக்கழகம் அமைக்கக் கோரிக்கை நிறைவேறவில்லை (அண்ணா பல்கலை நிறுவல்) ==1956ல் திரிகோணமலை பல்கலை அமைக்க கோரிக்கை நிறைவேறவில்லை

** 1955 தமிழ்ப்பகுதிகளுடன் மதனபள்ளி, வாயல்பாடி போன்ற தெலுங்கு பகுதிகள் சேர்த்து சித்தூர் மாவட்டம் அமைத்து நில ஆக்கிரமிப்புக்கு அடிகோலல் == 1948 பட்டிப்பளை ஆறு கல்ஓயா என்று பெயர் மாற்றி நிலப்பறிப்புக்கு அடிகோலல்

** 1956 நிலப்பறிப்பு திருவனந்தபுரம், இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு, மைசூர், பெங்களூர், திருப்பதி, காளத்தி என்று வளமான 35% பகுதிகள் தமிழர் கைவிட்டு போயின,, தமிழ்ப்பகுதிகளில் அந்நியர் குடியேற்றம் (காட்டாக, பட்டம் தாணுப்பிள்ளையால் பீர்மேட்டில் மலையாள கைதிகள் குடியேற்றம்) == 1948 பட்டிபளை, கந்தளாய்,பதவியா, வவுனியா, மன்னார், மட்டகளப்பு, திரிகோணமலை வட்டாரங்களில் பெரும்பான்மைப் பகுதி அந்நியர் ஆக்கிரமிப்பு (காட்டாக, கல்ஓயா 20,000 சிங்கள குடும்பங்கள் சேனநாயகவால் குடியேற்றம்)

** 1940களிலிருந்து தற்போதுவரை வேற்றினத்தார் ஆட்சியில் போராடும் தொழிலாளர் மீது தடியடி, கைது, துப்பாக்கிச்சூடு நடந்துவந்துள்ளது (முக்கிய நிகழ்வு 1999 ல் மாஞ்சோலைத் தொழிலாளர் போராட்டத்தில் தடியடி நடத்தி 18பேரை ஆற்றில் தள்ளிக் கொன்ற தாமிரபரணி படுகொலை) == 1942முதல்1980வரை பல்வேறு போராட்டங்ளில் மலையகத் தமிழர் 33பேர் பலி (முக்கிய நிகழ்வு1977ல் சுடப்பட்ட சிவணு என்பவர் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டது)

** 1957 சி.பா.ஆதித்தனார் கட்சி பெயரை நாம்தமிழர் என்று மாற்றி 'தனித்தமிழ்நாடு' முழக்கத்தை முன்வைத்தார் == 1976 'தனித்தமிழ் ஈழம்' முழக்கத்தை வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா முன்வைத்தார்

** 1991 தமிழருக்கு எதிரான பெரிய கலவரமான 'காவிரி கலவரம்', வீரப்பனார் எழுச்சி == 1983 பெரிய கலவரமான 'கறுப்பு யூலை', பிரபாகரனார் எழுச்சி

**தமிழரசன் 1969ல் மாணவராக இருக்கும்போது பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார், சாதியை எதிர்த்து போராடினார், தமிழ்ப்போராளியாக தீவிரமாக செயல்பட்டார், சிறைசென்றார், 1989 பொன்பரப்பி வங்கி கொள்ளையின்போது 'பொதுமக்கள் போல வேடமிட்ட உளவுப்படையினர்' தாக்கவும் எதிர்த்து தாக்காமல் உயிரைக் கொடுத்தார் == சிவகுமாரன் 1968ல் கல்லூரியில் படிக்கும்போது 'மாணவர் பேரவையில்' இணைந்தார், சாதி பிரச்சனைகளுக்காகப் போராடி, பிறகு தீவிர செயல்பாடுகளில் இறங்கி, சிறைசென்று, 1974கோப்பாய் கிராமவங்கியை கொள்ளையடிக்கும் முயற்சியில் சுற்றிவளைக்கப்பட்டு நஞ்சுண்டு உயிர்விட்டார்

** 2000ல் தர்மபுரியில் பேருந்து எரிப்பு மூன்று கல்லூரி மாணவிகள் படுகொலை == 2006 செஞ்சோலை 61 பள்ளிமாணவிகள் படுகொலை

**கூடங்குளம், கல்பாக்கம் அணுவுலைகள், மீத்தேன் திட்டம், கெயில் எண்ணெய் குழாய் போன்ற மக்கள் எதிர்ப்பை மீறிய அரசதிட்டங்கள் == சம்பூர் அனல்மின் நிலையம், காங்கேசன் துறை சிமெண்ட் ஆலை, மன்னார் எண்ணெய் ஆய்வு, வன்னி விவசாய அபிவிருத்தி போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்கள்

** தமிழக மீனவர்களை சிங்களவர் கொடுமை மற்றும் தாக்குதல் == தமிழக ஏதிலி முகாமில் வேற்றின ஆட்சியாளர்கள் ஈழத்தமிழரை கொடுமை மற்றும் தாக்குதல்

** தமிழ்நாடு என்று பெயர்மாற்ற சங்கரலிங்கனார் உண்ணாமல் இருந்து சாவு == திலீபன், அன்னை பூபதி ஆகியோர் அமைதிப்படைக்கு எதிராக உண்ணாமல் இருந்து சாவு

** 1995 தனித்திறமையுடன் தமிழினப் பற்றுடன் தமிழகத்தில் வலம்வந்த பழனி பாபா படுகொலை ==1993 தனித்திறமையுடன்தமிழினப்போராளியாக வலம்வந்த கேணல்.கிட்டு படுகொலை

**வீரப்பனாருக்கு எதிராக அதிரடிப்படை நடவடிக்கையால் 400சாவு 2000பேர் பாதிப்பு == பிரபாகரனாருக்கு எதிரான அமைதிப்படை நடவடிக்கையால் 12000சாவு, 2லட்சம்பேர் பாதிப்பு

** கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைய போராடிய பழனி மாணிக்கம், திருவலங்காடு கோவிந்தசாமி சிறையிலேயே கொலை,, வீரப்பனார் தம்பி அர்ச்சுணன் மற்றும் தளபதி அய்யன் கன்னடக் காவல்துறையால் வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்படும்போது மாதேசுவரன் மலை பகுதியில் துன்புறுத்திக் கொலை == யூலைக்கலவரத்தின் போது சிறையிலேயே 51தமிழ்க்கைதிகள் கொலை, குட்டிமணி, ஜெகன் துன்புறுத்திக் கொலை

** வழிபாட்டுத்தலங்களில் தாக்குதல் (முக்கியமானது இடிந்தகரை தேவாலத்தில் மாதா மீது சிறுநீர் கழித்தது) == பல்வேறு கோயில்கள் தாக்குதல் (பாணந்துறை குருக்கள் எரிப்பு)

**. 2009ல் முத்துகுமார் தீக்குளிப்பு == ஐநா முன்பு முருகதாசன் தீக்குளிப்பு

**வேற்றின ஆட்சியில் தமிழகத்தில் வன்கொடுமைகள்
1957 கீழத்தூவல் படுகொலை 5பேர் சுட்டுக்கொலை 
1968 கீழவெண்மணி 44பேர் எரித்துக்கொரை 1982 மொழியுரிமைக்காகப் போராடிய 18தமிழர் கன்னடரால் கொலை 
1987 இடவொதுக்கீடு போராட்டம் துணைராணுவத்தால் 21பேர் கொலை 
1989 கண்டமனூர் துப்பாக்கிச்சூடு 3குழந்தைகள் உட்பட ஐவர் சுட்டுக்கொலை 1992 வாச்சாத்தி படுகொலை 34மரணம் 18பெண்கள் வல்லுறவு 
1994 சின்னாம்பதி ஊரில் அத்தனை பெண்களும் அதிரடிப்படையினரால் வல்லுறவு 
1995 கொடியன்குளம் காவல்துறையால் சூறையாடல்
1998 கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி காவலர்களால் சூறையாடல்
1998 பெரம்பலூர் அருகே ஓகலூர் காவலரால் சூறையாடல் 
2001 கோவை அருகே சங்கரலிங்கபுரம் சூறையாடல் 
2011 பரமகுடி 7பேர் சுட்டுக்கொலை 
2014-3-27 அன்றுகூட சேலம் அருகே பொன்மலையில் போராடிய பெண்கள்மீது துப்பாக்கிச்சூடு == நடந்த கொடுமைகள் 
1974 தமிழாராய்ச்சி மாநாட்டில் தாக்குதல் 10மரணம் 
1977 யாழ்மாணவர் 3பேர் சுட்டுக்கொலை மூன்றுவார கலவரம் 
1987 சாவகச்சேரி 68மரணம் 
1987 அளவெட்டி 15மரணம் 
1987 கொக்கட்டிச்சோலை வன்முறை 
1990 வீரமுனை 56மரணம் 
1990 சத்துருகொண்டான் 184மரணம் 
1995 நாகர்கோவில் 26மரணம்
1999 மடுமாதாதேவாயம் 44மரணம் 
2005 குமுதினி படகு 34மரணம்
2006 மண்டைத்தீவு 31மரணம்
2006 பொத்துவில் 15மரணம் 
2009 கணக்கில்லாத மரணங்கள் 
2014-4-15 அன்றுகூட கோபி உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொலை

** 2011விடுதலைப் போராளி சுப.முத்துக்குமார் மர்ம நபர்களால் கொலை == 1988விடுதலைப்போராளி ஜொனி இந்தியப் படையினரால் கொலை

**தமிழகத்தில் பெண்களுக்கெதிரான கொடுமைகளில் முக்கியமானவை சிதம்பரம் பத்மினி, அந்தியூர் விஜயா, திண்டிவனம் ரீட்டாமேரி, மலைக்குண்டு வசந்தி, திருக்கோவிலூர் 4பழங்குடிப் பெண்கள் காவர்நிலையத்திலேயே வல்லுறவு, 2002 பரகுடி கருப்பி என்பவர் துன்புறுத்தி கொல்லப்பட்டு காவல்நிலையத்திலேயே தூக்குமாட்டப்பட்டார் == முக்கியமானவை கிருசாந்தி, புங்குடுதீவு இளையதம்பி தர்சினி, சாரதாம்பாள், ரஜினி போன்றோர் வல்லுறவுக்குப்பின் கொலை

** தமிழகத்தில் தெலுங்கு வருடப்பிறப்புக்கும், ஓணத்திற்கும் விடுமுறை, சென்னையில் வடவர் விழாக்களான ஹோலி, சட் பூஜா போன்றவை கோலாகலக் கொண்டாட்டம் == சிறிலங்கா சுதந்திரதினம் ராணுவ கண்கானிப்பில் பள்ளிகளில் சிங்கக்கொடி ஏற்றி கொண்டாடல், யாழில் எசால பெரஹேர, புத்த பூர்ணிமா போன்றவை கொண்டாடல்

**முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு == மாவீரர் துயிலும் இல்லங்கள் இடிப்பு

** கண்ணகி சிலை தகர்ப்பு ==பண்டாரவன்னியன் சிலை திருத்தம்

** சாதி மோதல்கள் தூண்டுதல், இனத்தைவிட சாதியை அடையாளமாக உணரச்செய்தல் == மத மோதல்கள், இனத்தைவிட மதத்தை முதன்மைப்படுத்துதல்

** யாழ் மாணவர் கூடலில் தடியடி== லயோலா கல்லூரியில் உண்ணாமல் போராடிய மாணவர் நள்ளிரவில் தூக்கிச்சென்றது

** ராணுவத்தில் சிறியளவிளான மேல்பதவிகளில்கூட ஒரு தமிழர் கிடையாது,, தமிழக காவல்துறை தலைமை எப்போதும் வேற்றினத்தவர் கையில் == இலங்கை ராணுவத்தில் தமிழரே கிடையாது, காவல்துறையில் மிகக்குறைவே

** குமரப்பா புலேந்திரன் உட்பட 12பேர் கையறுநிலையில் நஞ்சுண்டு தற்கொலை == 2009ல் 16பேர் கையறுநிலையில் தீக்குளித்து தற்கொலை

** தமிழர் பகுதிகளில் வேற்றினத்தார் சிலைகள், சாலைகள், மாளிகைகள், கட்டிடங்கள் (தமிழக தலைமைச் செயலகமே ஓமந்தூரார் என்ற தெலுங்கர் பெயரில் உள்ளது) == தமிழர் பகுதியில் புத்தவிகாரைகள், ராணுவ நினைவிடங்கள்

** கல்வியில் தமிழ் கட்டாயம் இல்லை == கல்வியில் தமிழ் ஒடுக்கப்படுதல்

** ஆசியாவிலேயே பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திருமண மண்டபமாக்க முயற்சி செய்யப்பட்டது, பின் மருத்துவமனையாக மாற்ற முயற்சிகள் நடந்தது உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் வழக்கு இழுபறியில் உள்ளது- யாழ்நூலகம் எரிக்கப்பட்டது

** கேரளாவில் ஏலக்காய் தோட்டங்கள் வைத்திருந்த தமிழ்த் தொழிலதிபர்கள் விரட்டியடிப்பு == கொழும்பு தொழிலதிபர்கள் விரட்டப்பட்டமை

** முதல் தீக்குளிப்பு அப்துல் ரவூப் == முதல் களப்பலி ஜுனைத்தீன்

**காவிரி, பாலாறு, முல்லைப்பெரியாறு போன்றவற்றை தடுப்பதன்மூலம் வறட்சி, பஞ்சம், விலையுயர்வு, மரணங்கள், தற்கொலைகள் == குண்டுபோடுதல், படையெடுப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் மூலம் விலையுயர்வு, பஞ்சம், தற்கொலைகள் (ஆனால் ஈழத்தில் இயற்கைவளங்களை மறிக்க இயலாது, மாறாக புலிகள் மாவிலாற்றை சிங்களவருக்குக்கிடைக்காமல் அணைகட்டித் தடுத்தனர், கல்மடு குளத்தை உடைத்து இராணுவத்தினரை பின்வாங்கச் செய்தனர், இரணைமடு குளத்தை உடைத்து 2009ல் போரில் வெற்றியடையக்கூட வாய்ப்புகள் இருந்தன, உயிர்ச்சேதத்தை மனதில்கொண்டு அதை உடைக்கவில்லை)

** மீனவர்களை மற்ற மாநிலத்தார், இலங்கை கடற்படை தாக்குதல் ==கடலோரங்களில் சிங்கள மீனவர் குடியேற்றம், தமிழர்களின் பிடிக்கும் மீன்களை பறித்தல்

** சென்னையில் 13வயது தில்சன் ராணுவத்தினர் பகுதில் நுழைந்தமைக்காக சுட்டுக்கொலை, 16 வயது தமீம் அன்சாரி காவல்துறையினரால் வாய்க்குள் சுடப்பட்டமை போன்ற பல குழந்தைக் கொலைகள் == பாலச்சந்திரன் உட்பட பல குழந்தைகள் படுகொலை

** தமிழரே அதிகம் வசிக்கும் பெங்களூர், ஓசூர், திருப்பதி போன்ற நகரங்களில் பொதுஇடங்களில் தமிழில் பேசமுடியாத அளவு அடக்குமுறை == தமிழரே அதிகம் உள்ள கொழும்பிலும் தமிழ் பேசமுடியாத நிலை

** சொந்த நிலத்தைவிட்டு அகதிமுகாம்களில் தங்கவேண்டியநிலை முல்லைப்பெரியாறு பிரச்சனை தீவிரமடையும்போது பீர்மேடு, மூணாறு தமிழர்களுக்கும்,, காவிரி பிரச்சனை நடந்தால் மைசூர், சாம்ராஜ் நகர், மாண்டியா தமிழருக்கும் வருகிறது == ஈழத்திலும் இதேநிலை

**இறுதியாக 2009ல் மூன்று லட்சம் மக்கள் சாவின் விளிம்பில் இருந்தபோது தமிழகத்தமிழர் கையறுநிலையில் தவித்தனர் == 1964 ல் சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம், 5லட்சத்து 75ஆயிரம் தமிழக வம்சாவளித் தமிழர் வெளியேற்றப்பட்டபோது ஈழத்தமிழர் கையறுநிலை

**பல பத்திரிக்கையாளர் கொலை (முக்கியமானவை: தினகரன் நிருபர்கள் மூவர் எரித்துக்கொலை, நக்கீரன் அலுவலகம் தாக்குதல்) == பல பத்திரிக்கையாளர்கள் கொலை மற்றும் விரட்டியடிப்பு (முக்கியமானவை: லசந்த படுகொலை)

ஐயா தமிழ்ப்பிறப்பே, மேலேயிருக்கும் படத்தைப் பாருங்கள். அவ்வப்போது தலைதூக்கிய தமிழர்புரட்சிகள். இப்போது முழுதும் அடிமைகள் ஆகிப்போனோம்; காரணம் என்ன? நாம் நமக்குள் இணையாததுதான்; ஈழத்தில் 1,75,000பேரை பலிகொண்ட படுகொலை நடந்துவிட்டது; தமிழகத்தில் மீத்தேன், அணுவுலை போன்ற திட்டங்களால் ஒரு இனப்படுகொலை நடந்தேறவுள்ளது; இருண்டுபோன நம்தாய்நிலத்தை பாருங்கள்; இனியும் உங்களால் பொறுமையாக இருக்கமுடியுமா? இந்தியா, இலங்கை ஆகியன நம் எதிரிகள்தான்; ஆனால், **ஈழம் என்பதும் தமிழருக்கு எதிரான சிந்தனையே** ஈழம் என்பதை நீங்கள் ஒத்துக்கொண்டால் அப்போதே நீங்கள் இலங்கை ஒரு நாடு என்றும் இந்தியா ஒரு நாடு என்றும் ஒத்துக்கொள்கிறீர்கள்; இருபுறமும் ஒரே மக்கள், இருபுறமும் ஒரே பிரச்சனைகள் பிறகு ஏன் ஒரே நாடாக அமையக்கூடாது?? இனியும் ஈழவரைபடத்தையோ அல்லது தமிழக வரைபடத்தையோ கையில் ஏந்தாதீர்கள்; மேலே இருக்கிறதே இதுதான் நமது பரந்துவிரிந்த தாய்நாட்டின் வரைபடம். இனி இதற்காகப் போராடுங்கள்; இல்லையென்றால் அடிமையாக சாகவேண்டியதுதான். இந்த பதிவை ஒவ்வொரு தமிழருக்கும் கொண்டுசெல்லுங்கள். உங்கள் இணையத்திலோ, வலைத்தளத்திலோ, சமூக ஊடகத்திலோ இதை பதிவேற்றுங்கள்; உங்கள் பெயரில் இதைப் போட்டுக்கொண்டாலும் சரி. நன்றி.
https://www.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13

No comments:

Post a Comment