Thursday 10 July 2014

ஏனய்யா இருநாடுகள்?


மொட்டையாகப் பேசி
மொட்டையடிப்போர்

(×)தமிழனை தமிழன் ஆளவேண்டும்(×)

(×)தமிழனுக்கு என்று ஒரு நாடு வேண்டும்(×)

மேலோட்டமாகப் பார்த்தால் இம்முழக்கங்கள் தமிழரின் மனநிலை சரியான இலக்கு நோக்கி மாறிவருவதைக் குறிக்கின்றன;
அம்மாற்றம் மகிழ்ச்சி தருவதே;
இன்று இவற்றை எல்லோரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்;
மொட்டை கட்டையாக சொல்லப்படும் மேற்கண்ட முழக்கங்கள் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை.

முதலில் 'தமிழனை தமிழனே ஆளவேண்டும்' என்பது,
தமிழரை தம்மைத் தாமே ஆள்வதுதான் முறை;
ஆனால் எப்படி ஆளவேண்டும் என்பதுதான் கேள்வி;
சுருங்கிவரும் தாய்நிலத்தை வலுவான படையால் காவல்போட்டு, அந்நியர் உள்ளே வராமல், தமிழர் வெளியே செல்ல தேவையேதும் இல்லாமல், தமிழ் மக்கள் தமக்குத் தேவையானதை தாமே செய்துகொண்டு தன்னிறைவு பெற்ற வல்லரசாக மாறுமளவு ஆள்வது அதுவும் எவர் ஆதிக்கத்திற்குக் கீழும் இல்லாமல் ஆள்வதுதான் 'தமிழனைத் தமிழனே ஆளுதல்' என்பது.
அதை விடுத்து, மக்கள் சந்தித்த அழிவால் ஏற்பட்ட வலியை வாக்குகளாக மாற்றி, ஒப்புக்கு சப்பானியான தமிழக முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்துகொண்டு, பிரச்சனை வரும்போதெல்லாம் தீர்மானமோ கடிதமோ தயார் செய்து நேரடியாக பிரதமர் அலுவலக குப்பைத்தொட்டியில் போடாமல், சுற்றிவளைத்து பல கைகள் மாறி அக்குப்பைத் தொட்டிக்கு கொண்டு சேரச்செய்துவிடுவது, பின் வாய்ச்சவடால் விட்டே தமிழரை ஆள்வது, அதுவும் ஹிந்தியா மற்றும் அதன் முதலாளிகளான வல்லாதிக்க நாடுகளின் காலடிக்குக் கீழ் தமிழர்களை ஆள்வது 'தமிழரைத் தமிழர் ஆள்வது' என்று எப்படி ஆகும்?

இனி எவனாவது தமிழனைத் தமிழன் ஆளவேண்டும் என்று மொட்டையாகக் கூறினால் அடித்து துரத்திவிடுங்கள்.

தமிழக முதலமைச்சராக ஒரு தமிழன் வருவதுதான் நியாயம்;
அதை நாம் செய்துதான் ஆகவேண்டும்;
அதற்காக அதுவே போதும் என்று நினைக்காதீர்கள்;
நீங்கள் மேல்வலிக்காமல் போடும் வாக்கு எந்த பெரிய மாற்றத்தையும் கொணராது.

தமிழ்நாடு என்று அழைக்கப்படும் பாதி சுருங்கிய நம் தாய்நிலத்தில் 28ல் ஒருவராக ஒரு முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு நாக்கு கூட வழிக்கமுடியாது.
நம்மை நாலாபுறமும் சுற்றியிருக்கும் எதிரிகளிடம் அதைவிட பெரிய பெரிய நிலமும் மக்கள் தொகையும் நாடும் படையும் இருக்கிறதே!
நாம் படையொன்றை நிறுவாமல் ஒரு நாற்காலியை கைப்பற்றுவதன் மூலம் என்னத்தைக் கிழிக்கமுடியும்?

முதலில் தமிழக அரசை கைப்பற்றி அதன் ஆதரவோடு படைநிறுவோம் என்று கூறுவோர் இன்னும் பரிதாபத்திற்குரிய ஏமாளி.
தமிழக அரசைக் கைப்பற்ற 15ஆண்டுகளாவது ஆகும்; அதற்குள் ஈழத்தில் ஒரு தமிழன் இருக்கமாட்டான்;
அதன்பிறகு ஈழவலியை மறந்துபோன மக்களுக்கு உணர்ச்சியூட்டி புரட்சிசெய்வது நடக்குமா?

தவிர தந்தை செல்வா இருந்தவரை விடுதலைப் போராளிகள் தலைதூக்க முடிந்ததில்லை; காரணம் மக்கள் என்றுமே தீவிரவழியை விரும்பமாட்டார்கள், அவர்கள் மனம் கவர்ந்த அரசியல்வாதி கிடைத்துவிட்டால் அவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள்; ஆனால் இன்று தமிழரின் நிலையானது அன்று தந்தை செல்வா மறைவிற்குப் பிறகான காலம் போன்றது; அப்போது சரியான நேரத்தில் ஈழஇளைஞர்கள் பதிலடி கொடுத்தார்கள்; மக்கள் ஆதரவு குவிந்தது;
ஆயுதப்போராட்டமா அது தீவிரவாதம், அதைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்பவர்கள் தலைவர் பெயரைக்கூட சொல்லக்கூடாது; என்று நீங்கள் அவரை தலைவராகக் கருதத் தொடங்கினீர்களோ அன்றே அவரது போராட்ட வடிவத்தை ஏற்றவராகிறீர்கள்;
அவர் வருகைக்காக இனியும் காத்திருப்பதாகக் கூறி கையாலாகமல் இருக்கவேண்டாம்; எப்போதுமே இத்தகைய மாபெரும் தலைவர் இறந்துவிட்டதாக எதிரிகள் அறிவிப்பதில்லை; அப்படி அறிவித்தால் மக்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துவிடுவார்களே, அதனால் தலைவர் இருக்கிறார் என்று கூறி கூறியே அம்மக்களை தேங்கிநிற்கச் செய்வார்கள்; அதற்காக தலைவர் இல்லை என்று உறுதியாகக் கூறவில்லை; 16வயதில் உழைக்கத் தொடங்கிய தலைவர் 40வருடங்கள் போராடி அத்தனையையும் இழந்துவிட்டார்; இனி அவருக்கு ஓய்வுகொடுங்கள்.
தலைவரே கூட "தமிழ்மக்கள் யார் அவர்களுக்காக போராட முன்வருகிறாரோ அவரையே கடவுளாக்கி பொறுப்புகளைச் சுமத்தி தாம் விலகிக்கொள்கிறார்கள்" என்று கூறியும் வந்துள்ளார்; தமிழரின் எழுச்சி ஈழப்படுகொலைக்கு பதிலடி தருமளவு இல்லை; அந்த கொஞ்ச நஞ்ச எழுச்சியும் அரசியல்வாதிகள் கபளீகரம் செய்யுமுன் புரட்சியின் தொடக்கம் அரங்கேறவேண்டும்;
வல்லாதிக்கத்தை உட்கார்ந்த இடத்திலிருந்து அடிக்கும் போர்மறவர்கள் நம்மண்ணில் உதிக்கவேண்டும்;
அதற்கு இதுவே சரியான நேரம்.

இரண்டாவது 'தமிழருக்கு ஒரு நாடு வேண்டும்' என்கிற மொட்டையான முழக்கம்;
ஈழத்தையும் குறிக்கவேண்டும், தனித் தமிழ்நாடு என்றும் குறிக்கவேண்டும்; என்ன ஒரு தந்திரம்?!
முன்பு நம் தாத்தன் இந்தியா என்ற கொள்கைக்கு முழு ஆதரவையும் வழங்கினான்;ஆங்கில ஆதிக்கம், பொதுவான சமயங்கள், வரலாற்று தொடர்புகள் என்று பல காரணங்கள் இருந்தன;
அது தவறென்று தெரிந்த நம் அப்பனும் திராவிடம் என்ற முழக்கத்திற்கு முழு ஆதரவு வழங்கினான்; தென்னிந்தியரில் மூத்த இனம் தமிழினம் என்றும், தென்னிந்தியர் ஒரே இனம் என்றும் குறிக்கும்படியான மொட்டைகட்டையாக ஒரு கொள்கை; இன்று நாம் முழுமூச்சுடன் திராவிடத்தை எதிர்க்கவேண்டியுள்ளது; காரணம் அன்றே தொலைநோக்குப் பார்வையில்லாததுதான்;

பட்டும் திருந்தினோமா?
இல்லை; இன்று ஈழம் ஈழம் என்று கத்துகிறோம்; தமிழரைத் துண்டாடும் கொள்கைதான் ஈழம் என்ற கருத்தியல்;
பாக் நீரிணைப்புக்கு அந்த பக்கம் ஈழம் இந்தப் பக்கம் தமிழகம்; இரு புறமும் ஒரே மக்கள், ஒரே பிரச்சனை, நாம் ஏன் ஈழம் மட்டும் கோருகிறோம்;
இருபுறமும் தமிழர்கள் வாங்கிய அடிகளில்தான் என்னே ஒற்றுமை!
இந்த பதிவில் விளக்கியுள்ளேன்=
https://m.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13

உலகில் தமிழர் எண்ணிக்கை 1.1%
இதற்குள் என்னய்யா சாதி, மத, வட்டார பிரிவுகள்?

உலக நிலப்பரப்பில் தமிழர் தாய்நிலம் வெறும் 0.15%
இதற்குள் ஏனய்யா இருநாடுகள்?

ஆகவே தமிழரே
மொழி, இனம், நாடு மூன்றும் ஒன்றாக அமைந்தால்தான் வல்லரசாவது எளிது;
தமிழ் மொழி, திராவிட இனம், இந்திய நாடு என்பது பலபேருக்கு மனைவியாக வாழ்வது போன்றது;
நீங்களும் நானும் கண்டவனுக்கு முந்திவிரித்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்;

எவன் வேண்டுமானாலும் ஏறிமேயலாம் என்ற வேசிவாழ்க்கை இனியும் நமக்குத் தேவையா?

சிந்திப்பீர்.


https://www.facebook.com/photo.php?fbid=440074406096218&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment