Friday 18 July 2014

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்

அயோத்திதாசரின் தமிழ்முழக்கம்

எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

ஈவேரா-வை தமிழ்த் தேசியத் தந்தை என்று சிலர் திரிக்கின்றனர்.

தமிழ்நாடு தமிழருக்கே என்று அவர்தான் முதலில் கூறினாராம்.

ஈவேரா என்பவர் திராவிட நாடு, தனித்தமிழ் நாடு என்று மாற்றி மாற்றி பேசி கடைசிரை குழப்பியவராவார், அவர் எப்படி தமிழ்த்தேசியத்தின் தந்தை ஆவார்?

ஆனால், 1881லேயே தாழ்த்தப்பட்ட மக்களை பஞ்சமர் அல்லது தலித் என்று குறிப்பிடாமல் 'ஆதித் தமிழர்' என்று குறிப்பிட வலியுறுத்தியவர் அயோத்திதாசர்;
1885லிருந்து 'ஜான் ரத்தினம்' என்பவருடைய 'திராவிடப் பாண்டியன்'என்ற இதழில் அயோத்திதாசர் உதவியாசிராக பணிபுரியலானார்;
ஆனால், 1907ல் அவர் தனி இதழ் தொடங்கியபோது அதற்கு திராவிடப் பெயரை வைக்காது 'ஒரு பைசாத் தமிழன்' என்றே பெயர் சூட்டி தமிழிய சிந்தனைகளோடு வெளியிட்டுவந்தார்;
பிறகு 1908ல் அதன் பெயரைத் 'தமிழன்' என்று மாற்றினார்;
தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத, மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தாழ்த்தப்பட்டோர் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளுடன் வெளிவந்தது தமிழன் இதழ்.
மலேசியா, சிங்கப்பூர் வரையிலும் கூட அவ்விதழ் பரவியது.
(1942ல் 'தமிழ் ராஜ்ய கட்சி'  என்ற கட்சியைத் தொடங்கி தமிழருக்குத் தனி ராஜ்யம் தேவை என்று முழங்கிய சி.பா.ஆதித்தனாரும் 1942ல்  'தமிழன்' என்ற வார இதழைத் தொடங்கினார்)

மொழியின் மூலம் சாதியை பின்னுக்குத் தள்ளலாம் என்பதை  "ஓர் பாஷையின் பெயரால் சங்கத்தை நிலை நிறுத்துவோமானால் ஆதவரும் ஆதி தமிழரென்பர், வன்னியரும் ஆதி தமிழரென்பர்,
நாடாரும் ஆதி தமிழரென்பர், வேளாளரும் ஆதி தமிழரென்பர்" என்கிறார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியம், திராவிடம் போன்ற 'தமிழர் மீதான வேற்றின ஏகாதிபத்திய' கருத்துகள் தமிழர் மத்தியில் விதைக்கப்பட்டபோது, முதன்முதலாக 'தமிழ்நாடு தமிழருக்கே' (தமிழ்தேசம் சுதேசிகளுக்கே) என்று கூறியவரும் அயோத்திதாசப் பண்டிதரே ஆவார்.

30-10-1912 அன்று தமிழன் இதழில் 'விடுதலை அளித்தால் இம்மண்ணின் மைந்தரான(சுதேசிகளான) தமிழருக்கே வழங்கவேண்டும்' என்றார். "தமிழ்மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கே சுதந்திரம் வழங்கவேண்டும்" என்கிறார்.
மேலும் "கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும்.
நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர்
குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக்கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என
ஆங்கிலேயரிடம் விடுதலை பெறுவதற்கு 35ஆண்டுகளுக்கு முன்னரே அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
(இதே காலகட்டத்தில் 1922ல் அருணாசலம்'தனி ஈழம்' என்கிற கருத்தியலை உருவாக்குகிறார்)

ஈவேரா பொதுவாழ்க்கைக்கு வரும் முன்னரே 'தமிழர் ஒரு தேசிய இனம்' என்று சிந்தித்த அயோத்தி தாசரே 'தனித் தமிழர் நாடு'  என்ற கருத்தியலின் தந்தை ஆவார்.

நன்றி: http://thamizhanvelu.blogspot.in/2012/07/blog-post_4258.html?m=1
https://m.facebook.com/photo.php?fbid=568286243286260&id=100003146695085&set=t.100003146695085&source=42&refid=13
http://ta.m.wikipedia.org/wiki/அயோத்தி_தாசர்
https://m.facebook.com/photo.php?fbid=467886293315029&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=48

No comments:

Post a Comment