Friday 20 January 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இணையவழிப் போராளிகள்

வெளிநாட்டில் அதாவது வடயிந்தியாவில் உட்கார்ந்து கொண்டு,
களத்தில் போராடுவோருக்கு
அதைச் செய்யுங்கள் இதைச் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கவோ

அப்படி நடக்கும் இப்படி நடக்கும் என்று சோதிடம் சொல்லவோ நான் முகநூலில் செயலாற்றவில்லை.

ஏனென்றால் நான் முகநூல் மூலம் என்னால் எது முடியுமோ அதை ஏற்கனவே செய்துவிட்டேன்.

இப்போது நடப்பதை மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்க்கிறேன்.

தமிழனுக்கு இனப்பற்றே கிடையாது ஒற்றுமையே கிடையாது
பதிவுபோட்டே புரட்சி பண்ணமுடியாது
அப்படியெல்லாம் தமிழரைத் திட்டி திட்டி பதிவு போட்டவர் மத்தியில் தமிழன் எழுவான்
தமிழினம் எழும்
இனப்பற்று மொழிப்பற்று ஒற்றுமை எல்லாம் இருக்கிறது என்று தொடர்ச்சியாக பதிவு போட்டவன் என்ற வகையில்
நான் சொன்ன சோதிடம் தான் பலித்தது.

பாலச்சந்திரனுக்கும்
சென்னை வெள்ளத்துக்கும்
இளைஞர்களைக் களத்தில் இறக்கியவர்கள்
என்னைப் போன்ற ஆயிரமாயிரம் இணையவழி போராளிகள்தான்.

இது ஆரம்பம்தான்.

தொடர்ந்து போராடுவோம்.

17 ஜனவரி, 07:12 PM

No comments:

Post a Comment