Monday 9 January 2017

ஏறுதழுவதல் மற்றும் குதிரை பயன்பாடு கற்காலத் தமிழர் ஓவியம்

கற்காலம் முதலேயே மஞ்சு விரட்டும் பரியேற்றமும் தமிழர்கள் செய்து வந்தது தான். இதற்கான சான்றுகள் தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருந்து வந்துள்ளன.
பீட்டா, ஆரிய, திராவிட, தலித்தியக்கதைகள் என்ன சொல்லும்னா ஏறுதழுவல் ஒரு சாதிக்கூறியதுன்னும் அது அனைத்து தமிழர்களும் விளையாட்டில்லைன்னும் அதனால் அது தமிழர் விளையாட்டில்லைன்னும் சொல்லும்.
ஆரியன் தான் தமிழ்நாட்டுக்கு குதிரையையே கொண்டுவந்தான்னும் அதுக்கு முன்னாடி தமிழருக்கு பரியேற்றமே தெரியாதுன்னும் கண்டபடி கதை விட்டுக்கொ(ல்லு
)ள்ளும்.
குதிரை இந்திய விலங்கே கிடையாதுன்னும் அதை ஆரியர்கள் வட இந்தியாக்கு கி.மு. 1500 அளவில் குடிபுகுந்த போது கொண்டுவந்தனர்னு உச்சபச்ச நகைச்சுவை காமெடிகளை அவிழ்த்துவிடும்.

தமிழ்நாட்டில் பரி வரையபட்டதற்கான சான்றுகள் 5000 ஆண்டுகள் முன்னரயே கிடைக்கின்றனவே என கீழுள்ள ஓவியங்களை வைத்து கேட்டுப்பாருங்கள்.
அது உடனே வேற்றுக்கிகவாசிகள் கொண்டுவந்ததுனு கதைவிட ஆரம்பிச்சுருவாங்க.
ஏற்கனவே கூர்ங்கோட்டவர் பக்கத்தில் வேற்றுக்கிரகவாசிகள் கதையை அமெரிக்க வந்தேறிகள் தென்னமெரிக்க மண்ணின் மைந்தர்களின் பழைய சான்றுகளை எல்லாம் வேற்றுக்கிரகவாச
ிகளுடையதுன்னு கதைவிட்டதையும் இந்தியத்தொல்லியல் துறையும் கூட பழங்குடிகளின் வரைபடத்தை வேற்றுக்கிரகவாசிகளா என அறிய நாசாவுக்கு அனுப்பிய அவலத்தையும் பதிவு செய்திருந்தேன்.
அந்த பதிவு இந்த இணைப்பில்
வேற்றுக்கிரகவாசி கதைகளை கட்டுவதன் மூலம் மண்ணின் மைந்தர்களின் சான்றுகளை எல்லாம் வஞ்சகமாக திரிப்பதற்கு மிகப்பெரிய உலக சதிகள் அரங்கேறி வருகின்றன.
இதனால் மண்ணின் மைந்தர்கள் கூட அந்த இடத்துக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கதை கட்டி இன தேசியம் எழவிடாமல் பார்த்துக்கொள்வது உலக வந்தேறிகளின் வழக்கம்.
அதாவது தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு திராவிடர்களாக கி.மு. 1500 அப்போதே வந்தனர் என்பது போன்ற கதைகளும் தென்னமெரிக்க பழங்குடிகளுக்கு அறிவை கற்றுத்தந்ததே தற்போதைய வேற்றுக்கிரகவாசிகளான அம்மண்ணின் முன்னால் பூர்விக மக்கள்னும் அந்த வேற்றுக்கிரகத்துக்கு போன முன்னால் பூர்விக மக்களிடம் தற்கால செவ்விந்தியர் குடியேறி பிச்சை எடுத்து அனைத்து கதைகளையும் கற்றது போலவும் என்பது போன்ற கதைகளும் இந்த இரகம்.

இன்னும் தமிழர்கள் விலங்குகள் மூலம் வழிபாடு, மெய்யியல், போர் கலை போன்றவற்றை எப்டிக்கற்றனர் என்பதுலாம் தொகுத்து எழுதினால் பெரிய நூலே வெளியிடலாம்.
இது ஏறுதழுவல் காலம் என்பதால் மஞ்சுவிரட்டு, குதிரையேற்றம் தொடர்பாக தமிழகத்தில் 5000 ஆண்டுகள் முன்னரேயே இருக்கும் இரண்டு வரலாற்றுப்பதிவுகள் பற்றி மட்டும் தற்போது படமாக கீழே தந்திருக்கிறேன்.
- தென்காசி சுப்பிரமணியன்

No comments:

Post a Comment