Friday 6 January 2017

பாண்டவர் பாண்டியரே! கௌரவர் குறவரே!

காந்தாரி அம்மன் யார்?

காந்தாரி அம்மன் யார் என அறியவேண்டின்,
நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும்.
மகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும்.

அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குறவர்களுக்கும்,
அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும்.

காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.

இதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர்.

தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம்.

அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார்.
அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார்.
அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார்.
இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை,
பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார்.

அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது.
அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி,
யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.
கருத்தினன் --> கிருத்தினன் --> கிருட்டினன் --> கிருஷ்ணன்.

குரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது.
மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே!
துரியோதனன் என்பது "துர்+ஓதனன்" என்றிருந்து மருவியது.
துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள்.

இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.
இந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன்.
இங்கு திரு என்பது அடைமொழி.
திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே.
வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல.
திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே!
திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே!
இப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை "காந்தம்" போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி.
அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி.
அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது.

இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது.
அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது.
மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான்.
இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.

காந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி.
அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி --> சங்குனி --> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது.
சம் என்றால் "அனைத்தையும்" அல்லது "ஒட்டுக்க" அல்லது "கூட்டாக" என்று பொருள்.
ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே!

பாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும்.
ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது.
அவள் பெண்ணல்ல.
ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள்.
அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி --> த்ரௌபதி --> திரௌபதி) திரௌபதி ஆனாள்.
அதாவது குரவர், கௌரவர் ஆனது போல.

திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு.
அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே!
அவளே மீனாட்சியும் ஆகும்.
அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா?

குரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது.
சகுனிக்கும் கோயில் உள்ளது.
இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது.
அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.

அதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது.
யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும்.

காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே!

ஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே!
"ஆதி நற்புரம்" என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது.
"ஆதிச்ச நல்லூரும்", "ஆதி நற்புரமும்" ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

"குரவர் சேர் தரை" தான் குருஷேத்திரம் ஆனது.
சேர் + தரை --> சேர் + த்ர --> சேர்த்ர --> ஷேத்ர --> ஷேத்ரம்.
மக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம்.
குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் --> குரஷேத்ரம் --> குருஷேத்ரம் ஆனது.
ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.

ஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே!
அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.

ஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி.
குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது.
குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை.
தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.

-முனைவர் வே.பாண்டியன்,
தமிழர் உலகம்.

21 நவம்பர் 2015, 12:39 PM ·

தாமிரபரணி ஆற்றங்கரையில் பாரதப்போர் நடைபெற்றது என்பதற்கு நம் முன்னோன் பெருஞ்சோற்று உதயன் சேரலாதனின் வரலாற்றுக் குறிப்பே ஆதாரம்.
ஆதித்த நல்லூரில் இன்னும் பாண்டவர் சமாதி, கௌரவர் சமாதி என்றுள்ளது...
மகாவம்சத்தில் பாண்டியரை பாண்டு என்றே அழைக்கின்றனர்...

M Raj Kumar அவர்களின் பதிவு

4 comments: