Showing posts with label தொழில். Show all posts
Showing posts with label தொழில். Show all posts

Saturday, 26 October 2019

சிவகாசிக்கு உதவி

சிவகாசிக்கு உதவி

  பட்டாசுக்கு வெடிக்காமல் "பச்சை தீபாவளி" கொண்டாடுவோம் என்று சில சூழலியல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனே சில இசுலாமிய பயங்கரவாதிகள் "பட்டாசை புறக்கணிப்போம்" என்று பிரச்சாரம் செய்ய
"அப்டித்தான் வெடிப்போம்" என்று சில இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆரம்பிக்க
வழக்கம்போல குழப்பத்தில் சிக்கிவிட்டது தீபாவளி.

இந்திய ஒன்றியம் மற்றும் அதன் அண்டை நாடுகள் வரை தீப்பெட்டியும் வெடியும் ஏற்றுமதி செய்யும் சிவகாசி நிறுவனங்களை நசுக்க களமிறங்கி உள்ளன சில வட ஹிந்திய நிறுவனங்கள்.

இவை போதாது என்று தமிழகத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்காற்றும் சிவகாசி வெடிமருந்து தொழில் தற்போது சீன பட்டாசு போட்டியையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே மோடி செய்துவரும் பொருளாதார சீர்கேட்டினால் பாதி சிவகாசி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

இயற்கையும் பாதிப்படையக் கூடாது,
பொருளாதாரமும் பாதிக்கப்படக் கூடாது.

என்ன செய்யலாம்?

சிவகாசி வெடிமருந்து தொழில் அம்மக்களுக்கு வாழ்வாதாரத்தை தருகிறதோ இல்லையோ கட்டாயம் நோயையும் உயிரிழப்பையும் தருகிறது.

கடினமாக உழைக்கும் மக்களால் "குட்டி ஜப்பான்" என்று பெயர் பெற்றாலும் மக்கள் என்னமோ வேறுவழியின்றிதான் வெடிமருந்து தொழிலுக்கு போகிறார்கள்.

அதில் முதலாளிகளுக்கும் சரி தொழிலாளர்களுக்கும் சரி அரசுக்கும் சரி பெரிய வருமானம் எல்லாம் கிடையாது.

சிவகாசி ஒன்றும் பாலைவனப் பகுதி இல்லை.
அது விவசாய பூமி.
இப்போதும் கூட!
இதுபோக சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர் பெற்றது.

அரசாங்கம் இவ்விரண்டையும் முன்னேற்றினால் பட்டாசு ஆலைகளை படிப்படியாக மூடிவிடலாம்.

அதுவரை நாம் சிவகாசி பட்டாசு வெடித்துதான் ஆகவேண்டும்.
ஆனாலும் கொண்டாட்டத்திற்காக இயற்கையை நாசம் செய்வதை ஏற்க முடியாது அல்லவா?!

எனவே கூடிய விரைவில் அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்த அடிமை திராவிட கட்சிகள் அதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.

ஈழத்திற்கு வெடிமருந்து மட்டுமல்லாது செங்கண்ணன் என்கிற ஒரு கரும்புலியையும் அனுப்பிவைத்தது சிவகாசி மண்.

தமிழர்கள் ஆயுதம் தூக்கும்போதும் வெடிமருந்தும் இளைஞர்களும் கொடுத்து முன்னனியில் நிற்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

புலிகள் வழியில் தமிழர்களுக்கான அரசு அமைந்த பிறகு சிவகாசியையே கூட "பச்சைகாசி" ஆக்கிவிடலாம்.

அனைத்து மத தமிழரும்
எண்ணெய் தேய்த்து குளித்து
கறிச்சோறு உண்டு
தீபங்கள் ஏற்றி
சுளுந்து கொளுத்தி
முன்னோர் வழிபாட்டுடன்
"தீவாளி" எனும் "கார்த்திகை" யைக் கொண்டாடலாம்.

ஆனால் அதுவரை சிவகாசிப் பட்டாசு வெடித்தே ஆகவேண்டும்!

Sunday, 8 October 2017

சங்ககாலத்தில் புலையர் செய்த தொழில்கள்

சங்ககாலத்தில் புலையர் செய்த தொழில்கள்

'துடியெறியும் புலைய'
(புறநானூறு 287) என்று புலையர் துடி எனும் பறைவகையை முழக்குவோராகக் கூறுகிறது.

'போகிப் புலையன்
பெருந்துடி கறங்க'
(நற்றிணை 77)
புலையர் யானைமீது துடி முழக்கியதைக் கூறுகிறது.
[அதாவது படையை வழிநடத்த அல்லது மன்னன் வருவதை அறிவிக்க யானை மீது பெரும் சத்தத்தையும் அதிர்வையும் எழுப்பும் பறையை முழக்குவர்]

'புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு'
(புறநானூறு 360)
அதாவது புலையர் வேலையாட்களோடு ஈமச்சடங்கு செய்து சுடுகாட்டில் படையல் இட்டதைக் கூறுகிறது. 
[அதாவது ஈமச்சடங்கு செய்துதரும் பார்ப்பனர் தொழில் செய்ததாகக் கூறியுள்ளது]

' புலையன் பேழ்வாய்த் தண்ணுமை'
(நற்றிணை: 347)
என்று புலையர் வைத்திருந்த அகன்ற வாயினையுடைய மத்தளம் போன்ற இசைக்கருவி (தண்ணுமை) குறிக்கப்பட்டுள்ளது.

பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து
(கலித்தொகை 95)
புலையர் யாழ் மீட்டியது பற்றி கூறுகிறது.

புலையர் குலப் பெண் பற்றி கூறும்போது,

'உடை ஓர் பான்மையின் பெருங்கை தூவா வறன் இல் புலைத்தி'
(நற்றிணை 90)
அதாவது உடைகளை தரம்பிரித்து வெளுக்கும் வறுமை இல்லாத புலைத்தி என்று.

நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் (குறுந்தொகை 330)
இதன் பொருள் நல்ல குணங்களை உடைய புலைத்தி ஆடைகளுக்கு பசை தடவி திரியாக முறுக்கி குளத்தில் துவைத்தது பற்றி கூறுகிறது.

ஆடை கொண்டு ஒலிக்கும்
நின் புலைத்தி காட்டு என்றாளோ
(கலித்தொகை 72)
புலையர் பெண் துணி துவைக்கும் தொழில் செய்ததை கூறுகிறது.
[துணியை அடித்து துவைப்பதால் ஏற்படும் ஒலியதிர்வுதான் அழுக்கு துணியிலிருந்து பிரிய காரணம் ஆகும்.
இந்த அறிவியல் உண்மையை அறிந்திருந்த பழந்தமிழர் துவைப்பதை ஒலிப்பது என்றே கூறியுள்ளனர் !!!!]

பசை கொல் மெல் விரல்
பெருந் தோள் புலைத்தி
(அகநானூறு 34) என்று அகநானூறும் கிட்டத்தட்ட இதையே கூறுகிறது.

மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்தது ஓர்
போழின் புனைந்த வரிப் புட்டில் (கலித்தொகை 117)
என்று புலைத்தி பிண்ணிய கூடை பற்றி வருகிறது.

ஆக சங்ககாலத்தில் புலையர் ஆண்கள்
ஈமச்சடங்கு செய்பவராக, பறை முழக்குபவராக, இசைக் கலைஞராக என பல்வேறு தொழில்களைச் செய்தவராக இருந்துள்ளனர்.
ஆனால் புலையர் பெண்கள் சலவை  செய்பவராகவே அதிகம் குறிக்கப்படுகின்றனர்.
அத்துடன் கூடை பிண்ணும் தொழிலும் செய்துள்ளனர்.

[இன்று புலையர் என்று அறியப்படுவோர் பெரும்பாலும் மலையாளமே பேசுகின்றனர்]
--------------------
இலக்கிய தரவுகளுக்கு நன்றி : mytamil-rasikai.blogspot