Saturday 26 October 2019

சிவகாசிக்கு உதவி

சிவகாசிக்கு உதவி

  பட்டாசுக்கு வெடிக்காமல் "பச்சை தீபாவளி" கொண்டாடுவோம் என்று சில சூழலியல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனே சில இசுலாமிய பயங்கரவாதிகள் "பட்டாசை புறக்கணிப்போம்" என்று பிரச்சாரம் செய்ய
"அப்டித்தான் வெடிப்போம்" என்று சில இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆரம்பிக்க
வழக்கம்போல குழப்பத்தில் சிக்கிவிட்டது தீபாவளி.

இந்திய ஒன்றியம் மற்றும் அதன் அண்டை நாடுகள் வரை தீப்பெட்டியும் வெடியும் ஏற்றுமதி செய்யும் சிவகாசி நிறுவனங்களை நசுக்க களமிறங்கி உள்ளன சில வட ஹிந்திய நிறுவனங்கள்.

இவை போதாது என்று தமிழகத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்காற்றும் சிவகாசி வெடிமருந்து தொழில் தற்போது சீன பட்டாசு போட்டியையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

ஏற்கனவே மோடி செய்துவரும் பொருளாதார சீர்கேட்டினால் பாதி சிவகாசி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

இயற்கையும் பாதிப்படையக் கூடாது,
பொருளாதாரமும் பாதிக்கப்படக் கூடாது.

என்ன செய்யலாம்?

சிவகாசி வெடிமருந்து தொழில் அம்மக்களுக்கு வாழ்வாதாரத்தை தருகிறதோ இல்லையோ கட்டாயம் நோயையும் உயிரிழப்பையும் தருகிறது.

கடினமாக உழைக்கும் மக்களால் "குட்டி ஜப்பான்" என்று பெயர் பெற்றாலும் மக்கள் என்னமோ வேறுவழியின்றிதான் வெடிமருந்து தொழிலுக்கு போகிறார்கள்.

அதில் முதலாளிகளுக்கும் சரி தொழிலாளர்களுக்கும் சரி அரசுக்கும் சரி பெரிய வருமானம் எல்லாம் கிடையாது.

சிவகாசி ஒன்றும் பாலைவனப் பகுதி இல்லை.
அது விவசாய பூமி.
இப்போதும் கூட!
இதுபோக சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர் பெற்றது.

அரசாங்கம் இவ்விரண்டையும் முன்னேற்றினால் பட்டாசு ஆலைகளை படிப்படியாக மூடிவிடலாம்.

அதுவரை நாம் சிவகாசி பட்டாசு வெடித்துதான் ஆகவேண்டும்.
ஆனாலும் கொண்டாட்டத்திற்காக இயற்கையை நாசம் செய்வதை ஏற்க முடியாது அல்லவா?!

எனவே கூடிய விரைவில் அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இந்த அடிமை திராவிட கட்சிகள் அதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.

ஈழத்திற்கு வெடிமருந்து மட்டுமல்லாது செங்கண்ணன் என்கிற ஒரு கரும்புலியையும் அனுப்பிவைத்தது சிவகாசி மண்.

தமிழர்கள் ஆயுதம் தூக்கும்போதும் வெடிமருந்தும் இளைஞர்களும் கொடுத்து முன்னனியில் நிற்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

புலிகள் வழியில் தமிழர்களுக்கான அரசு அமைந்த பிறகு சிவகாசியையே கூட "பச்சைகாசி" ஆக்கிவிடலாம்.

அனைத்து மத தமிழரும்
எண்ணெய் தேய்த்து குளித்து
கறிச்சோறு உண்டு
தீபங்கள் ஏற்றி
சுளுந்து கொளுத்தி
முன்னோர் வழிபாட்டுடன்
"தீவாளி" எனும் "கார்த்திகை" யைக் கொண்டாடலாம்.

ஆனால் அதுவரை சிவகாசிப் பட்டாசு வெடித்தே ஆகவேண்டும்!

No comments:

Post a Comment