Thursday 31 October 2019

தமிழகம் இழந்த பகுதிகள் - தவறான வரைபடம்


தமிழகம் இழந்த பகுதிகள் - தவறான வரைபடம்
முதல் படத்தை "தமிழகம் இழந்த பகுதிகள்" என பல்வேறு தமிழ்தேசிய அமைப்புகள் கூறுகின்றனர்.
இந்த வரைபடம் "தமிழ்தேசியப் பேரியக்கம்" மற்றும் "தமிழர்களம்" ஆகிய கட்சிகளாலும் பயன்படுத்தப் படுகிறது.
இரண்டாவது படம் நான் தயாரித்த "தமிழர்நாடு" வரைபடம் மற்றும் மேற்கண்ட "தமிழகம் இழந்த பகுதிகள்" வரைபடத்தின் ஒப்பீடு.
(தெளிவான தமிழர்நாடு வரைபடம் காண
தேடுக : தமிழர்நாடு வட்டார எல்லைகள் )
முதலாவது படமே பெரியதாக உள்ளது.
இத்தனை பெரிய நிலப்பரப்பு நம்முடையது என்று எந்த சான்றுகள் அடிப்படையில் யார் வரைந்தார்கள் என்று தெரியவில்லை.
நான் வரைந்த தமிழர்நாடு வரைபடம் நான் திரட்டிய சான்றுகள் அடிப்படையில் வரையப்பட்டது.
இதற்கென தனி வலை ஏற்படுத்தி (vaettoli. wordpress. com)  அதில் மண்மீட்பு சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளேன்.

ஒரு பகுதி நமக்கு சொந்தம் என்று கூற நாம் காட்டவேண்டிய சான்றுகளாவன
1) இலக்கியம்
2) கல்வெட்டு
3) அரசு ஆவணம்
4) புத்தகம்
5) தற்போதைய மக்கட்தொகை
இதில்
'இலங்கை' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'கேரளா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'ஆந்திரா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
ஆகியவற்றிற்கு மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் திரட்டிவிட்டேன்.
கர்நாடகா ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு மட்டும் பழமையான கல்வெட்டு சான்று தவிர மீதி நான்கும் உள்ளது.
தமிழகத்திற்கும் கன்னட நாட்டிற்கும் இடையே தற்போதுள்ளதை விட பெரிய காடு இருந்துள்ளது.
அதில் தமிழ்ப் பழங்குடிகள் வாழ்ந்துள்ளனர்.
அக்காலத்து இலக்கிய சான்றுகள் நமக்கு சாதகமாக உள்ளன.
காடுகளுக்கு அந்தப் பக்கத்திலிருந்து கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.
பிறகு தமிழ் அரசு பேரரசாக விரிந்தது.
கன்னடரை விரட்டிவிட்டு தமிழர்கள் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.
பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.
காவிரி தோன்றும் குடகு இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதி மண்மீட்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
பிற எல்லைகள் போல அல்லாது கன்னடர் - தமிழர் எல்லை ஒரு இழுபறியிலேயே உள்ளது.
ஆனால் இவ்வெல்லைக்கு இருபுறமும் நமக்கு கடற்கரையை ஒட்டி வெகுதூரம் வரைக்கும் சான்றுள்ளது.
இந்தப்பக்கம் கேரள எல்லையையும் தாண்டி கோகர்ணம் (Gokharna) வரை நமக்கு சான்று உள்ளது.
அந்த பக்கம் வடபெண்ணை ஆறு வரை நமக்குச் சான்றுள்ளது.
அதையும் தாண்டி இமயம் வரை நமக்கு இலக்கியச் சான்று உள்ளது.

கல்வெட்டு தலைமை அலுவலகம் மைசூர் நகரில் இருப்பதால் பழமையான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு பழமையான கன்னட கல்வெட்டுகள் மட்டும் வெளிவந்துள்ளன.
நானறிந்த வரையில் மேற்கண்ட வரைபடம் அளவு நிலத்தை நாம் கோர நம்மிடம் சான்றுகள் இல்லை.

இந்த வரைபடம் பற்றி மேலும் விபரம் தெரிந்தோர் தொடர்பு கொள்ளவும்.

நன்றி!








No comments:

Post a Comment