இந்த வரைபடம் "தமிழ்தேசியப் பேரியக்கம்" மற்றும் "தமிழர்களம்" ஆகிய கட்சிகளாலும் பயன்படுத்தப் படுகிறது.
தேடுக : தமிழர்நாடு வட்டார எல்லைகள் )
இத்தனை பெரிய நிலப்பரப்பு நம்முடையது என்று எந்த சான்றுகள் அடிப்படையில் யார் வரைந்தார்கள் என்று தெரியவில்லை.
ஒரு பகுதி நமக்கு சொந்தம் என்று கூற நாம் காட்டவேண்டிய சான்றுகளாவன
2) கல்வெட்டு
3) அரசு ஆவணம்
4) புத்தகம்
5) தற்போதைய மக்கட்தொகை
'இலங்கை' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'கேரளா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'ஆந்திரா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
ஆகியவற்றிற்கு மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் திரட்டிவிட்டேன்.
அதில் தமிழ்ப் பழங்குடிகள் வாழ்ந்துள்ளனர்.
அக்காலத்து இலக்கிய சான்றுகள் நமக்கு சாதகமாக உள்ளன.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.
கன்னடரை விரட்டிவிட்டு தமிழர்கள் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.
பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.
ஆனால் இவ்வெல்லைக்கு இருபுறமும் நமக்கு கடற்கரையை ஒட்டி வெகுதூரம் வரைக்கும் சான்றுள்ளது.
இந்தப்பக்கம் கேரள எல்லையையும் தாண்டி கோகர்ணம் (Gokharna) வரை நமக்கு சான்று உள்ளது.
அந்த பக்கம் வடபெண்ணை ஆறு வரை நமக்குச் சான்றுள்ளது.
கல்வெட்டு தலைமை அலுவலகம் மைசூர் நகரில் இருப்பதால் பழமையான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு பழமையான கன்னட கல்வெட்டுகள் மட்டும் வெளிவந்துள்ளன.
இந்த வரைபடம் பற்றி மேலும் விபரம் தெரிந்தோர் தொடர்பு கொள்ளவும்.