Thursday 3 October 2019

தமிழரே மூத்தகுடி - டார்வினின் சக ஆய்வாளர் ஹெக்கல்

தமிழரே மூத்தகுடி - டார்வினின் சக ஆய்வாளர் ஹெக்கல்

உலகப்புகழ்பெற்ற பரிணாம தத்துவவியலாளரும், பரிணாம கோட்பாட்டின் தந்தை டார்வினின் தோழருமான ஏர்ன்ஸ்ட் ஹெக்கல் உலகின் முதல் மனித இனம் தமிழர்கள் என்கிறார்.

அவர்கள் தோன்றியதும் தெற்காசியாவின் தென்முனையில் இருந்த பகுதியே என கண்டறிந்தார், Ernst Haeckel.

அதுவும் கடலில் மூழ்கிய லெமூரியாவே என்று ஆய்ந்து அறிவித்திருக்கிறார்.
அவர்கள் இங்கிருந்தே உலகெங்கும் பரவி படர்ந்திருப்பார்கள் என்பது ஹெக்கலின் கூற்று.

இன்றைய உயிரியலில் இருக்கும் எண்ணற்ற கண்டுபிடிப்புகளை உலகுக்கு தந்தவர் அந்த 'ஹெக்கல்'.

Ecology, phylum, phylogeny, Protista போன்ற உயிரியல் கோட்பாட்டுக்களை அறிமுகப்படுத்தியதே ஹெக்கல் தான்.

டார்வினின் Natural Selection 'ஐ ஹெக்கல் ஆதரித்தாலும், வாழ்நாள் காலத்தில் கற்றுக்கொள்ளும் புதிய பண்புகள் சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்கிற லாமார்க்கிசத்திலும் (Lamarckism) நம்பிக்கை கொண்டிருந்தார், ஹெக்கல்.

ஹெக்கல் 1880'களில் தமிழ் ஈழத்திற்கு பயணம் செய்து அங்கே பல காலம் தங்கி ஆய்வுகளும் செய்திருக்கிறார்.
அதை தனது 'ஒரு சிலோன் பயணம்' என்கிற நூலிலும் குறித்திருக்கிறார்.

தனது அனுபவம் குறித்து எழுதும்போது..
'மிக செயற்கையான இந்த சமூக வாழ்வை விலைக்கு விற்று விட்டு, பதிலாக 'இற்கையின் குழந்தை' எனும் வாழ்வை இங்கே வாங்கப்போகிறேன்'
என்று எழுதி இருக்கிறார்.

சங்கமும், தமிழும், ஈழமும், புலிகளும் தாங்கி நின்ற செங்காந்தள் மலர் பற்றி தனது நூலில் கசிந்துருகுகிறார்.

ஐரோப்பாவின் அகெடமியாக்கள் வளர்த்தெடுத்த நவ நாகரிக மங்கையரைவிட கருப்பு கற்பக சிலைகளாக இருக்கிறார்கள் தமிழ்ப் பெண்கள் என்று எழுதியிருக்கிறார் ஹெக்கல்.

அப்படியான ஒரு தமிழ்ப்பெண்ணின் படத்தை அவர் தனது நூலிலும், அவருக்கு பின் அவரது மியூசியத்த்திலும் நிறுத்தியிருக்கிறார்கள்.

அவர் சோசியல் டார்வினிசத்திலும் நம்பிக்கை கொண்டார்.
வலுவான சமூக அமைப்புக்கள் சமூக அரசியலில் தமது சக்தியையும், பொருளாதாரத்தில் நமது ஆளுமையையும் நிலைநிறுத்திக் கொள்கின்றன என்பது அது.

மாறாக வலுவிழந்தவை இரண்டிலும் வீழ்ந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுகின்றன என்பதுதான் சோசியல் டார்வினிசம்.

இதை கேபிடலிசம் தத்து எடுத்துக்கொண்டது.
கறுப்பினத்தை விட வெள்ளையர்கள் மேலும் பரிணாம மாற்றமடைந்து, உலகை ஆளுமை செய்கிறார்கள் என்கிற அவரது புரிதலை ஐரோப்பிய நாஸி மற்றும் பாசிச சக்திகள் தமக்கு ஏற்றவாறு கற்பிதம் செய்து கொண்டன.

இதனால் அரசியல் பொருளாதார ரீதியில் இன்று உலகை ஆளும் யூத லாபி ஏர்ன்ஸ்ட் ஹெக்கலின் மனித பரிணாம கோட்பாட்டை இருட்டடிப்பு செய்கிறது.

இப்படியான உலகப்புகழ் பெற்ற பரிணாம கோட்ப்பாட்டாளர்களின் தத்துவங்களை கீழடி, ஆதிச்சநல்லூர் மற்றும் பூம்புகாரோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டிய தருணம் இது.

இடையில் வந்த இடைச்செருகல்களான ஆரிய- திராவிட புரட்டுக்களை அறுத்தெறிந்து விட்டு தமிழினம் தனது வரலாற்றை மீட்டெடுத்து மீண்டும் இந்த அநீதியான உலகுக்கு அறம் போதிக்க வேண்டும்.

பிகு:
(இந்த எர்ன்ஸ்ட் ஹெக்கலும், கோத்தேவும், காரல் மார்க்ஸும், அவரின் ஆசான் தத்துவமேதை ஹெகலும் (Hegel) நான் PhD பட்டம் பெற்ற University of Jena'வில் PhD பட்டம் பெற்றவர்கள் என்பது பெருமிதம் கொள்ள வைக்கும் சுயபுராணம்)

நன்றி: Krishna Muthukumarappan

No comments:

Post a Comment