Thursday 10 October 2019

அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!











அரசியலில் வன்னியர் இழந்தது என்ன?!

 சில வன்னியர்கள்,
 அதாவது வன்னியரில் உள்ள பள்ளிகளில் உள்ள பா.ம.க வினரில் உள்ள மிகச்சிலர்,
 வன்னியர்களை பிற தமிழர்கள் அதுவும் குறிப்பாக நாடார், முக்குலம், கொங்கு வேளாளர் ஆகியோர் அடிமைப் படுத்த நினைப்பதாகவும்
 அதனால் வடதமிழ்நாடு தனியாகத் தேவை என்றும் வாதிடுகின்றனர்.

 இதில் சிறிதும் உண்மையில்லை!

--------
 மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் எம்.எல்.ஏ பதவிகளில் 19.7% இருந்தனர் (1967 இல்).

 1971 இல் 16.7% ஆகவும்
1977 இல் 16.2% ஆகவும்
1980 இல் 16.7% ஆகவும்
குறைந்தனர்.

 அப்போது
1980 இல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட பின் இந்த சதவீதம் 17.5% என உயர்ந்த்து.

 1989 இல் பா.ம.க தொடங்கப்பட்டு தேர்தலில் குதித்தது.
  இதனால் அனைத்து கட்சிகளிலும் வன்னியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து ச.ம.உ பதவிகளில் வன்னியர்கள் 18.8% ஐப் பிடித்தனர்.

 பா.ம.க பெற்ற வாக்கு எண்ணிக்கையைப் பார்த்த பிற கட்சிகள் மேலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

 1991 மற்றும் 1996 இல் வன்னியர் சட்டப் பேரவையில் 22.6% ஐப் பிடித்தனர்.

[CASTE IN POLITICAL RECRUITMENT: THE STUDY OF TWO
MAJOR DRAVIDIAN PARTIES IN TAMIL NADU]
-----------

 இது M.L.A பதவி தற்போது M.P பதவிகளைப் பார்ப்போம்.
-------
 1977 இல் வன்னியர்கள் அமைச்சர் பதவிகளில் 12.8% இருந்தனர்.
 அதாவது 39 இருக்கைகளில் 5 பேர்.

 வன்னியர் சங்கம் தொடங்கிய பின் 1980 இல் இது 15.4% ஆக உயர்ந்து
1984 இல் மீண்டும் 12.8% ஆனது.

பா.ம.க தொடங்கப்பட்ட பின்
1989 இல் 18.3% ஆக உயர்ந்தது.

1991 இல் 15.4% உயர்ந்து
1996 இல் 12.8% மீண்டும் ஆனது.

1998 இல் 25.6% ஆக உயர்ந்தது.
அதாவது 39 இல் 10 வன்னியர்கள்.

1999 இல் 20.51% ஆகவும்
2004 இல் 15.4% ஆகவும்
2009 இல் 12.8% ஆகவும்
இருந்து வந்துள்ளது.

 [புள்ளி விபரங்களுக்கு நன்றி:  'அச்சமில்லை' இதழ்]

 மக்கட்தொகையில் 12.5% உள்ள வன்னியர்கள் பல்வேறு கட்சிகளிலும் இருந்துகொண்டு தனது பங்கிற்கு அதிகமாகவே பதவிகளைப் பெற்று வந்துள்ளனர்.
-----


No comments:

Post a Comment