Saturday 6 August 2016

விழுப்புரம் ஆசாரிகள்

விழுப்புரம் ஆசாரிகள்
●○●○●○●○●○●○●○●○●○

தங்க நகை வேலைப்பாடுகளில் அதுவும் சிறிய அளவிலான நகைகளில் சிறப்பான வேலைப்பாடுகளுடன் செய்துதருவதில் தமிழகத்திலேயே முதலிடம் விழுப்புரம்.
(பெரிய அளவிலான நகைகளுக்கு கோவை)

நகைகளைச் செய்து தந்து கூலி பெறுபவர்கள் ஆசாரிகள்.

ஆனால் தங்கம் முழுவதும் மார்வாடிகள் கையில்,
அதை விற்பதும் லாபம் பார்ப்பதும் பெரும்பாலும் மார்வாடிகள்
(தமிழகம் முழுக்க நிலை இதுதான்)

தமிழ் ஆசாரிகள் சிறுசிறு கடைகளும் பட்டறைகளும் வைத்திருந்தனர்.

இன்று நிலை முன்பை விட மோசம்.

வங்காளிகள் கூட்டம் கூட்டமாகக் குடிவந்து தங்க நகை செய்வது தவிர அதன் உதவி தொழில்களைச் செய்யும் பட்டறைகளைக் கைப்பற்றிவிட்டனர்.
சலங்கை உருக்குதல், பட்டை வெட்டுதல், கம்பி நீட்டுதல் போன்ற துணைத் தொழில்கள் இன்று வங்காள வந்தேறிகள் கையில்.

மார்வாடிகள் வங்காளிகளுக்கு பெரும் ஆதரவளித்து இத்தனைநாள் உழைத்துக் கொட்டிய தமிழர்களை ஒரம்கட்டிவிட்டனர்.

நகை செய்யும் திறமை தமிழ் ஆசாரிகள் கையில்தான் இன்றும் உள்ளது.
அவர்கள் வேறு எந்த சமூகத்துக்கும் அதைச் சொல்லிக்கொடுப்பதில்லை.

ஆனால் காலம் காலமாக கூலிகளாகவே உள்ளனர்.
கிலோ தங்கத்தை உருக்கி நகை செய்து கொடுக்கும் ஆசாரியின் வீட்டுக்குப் போனால் மனைவி மக்கள் கழுத்திலும் காதிலும் குண்டுமணித் தங்கம் இருக்காது.

தங்கத்தொழில் தொடர்பான பட்டறை வைத்திருந்த பல விழுப்புரம் ஆசாரிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் பல நடந்தேறி வருகின்றன.

எத்தனை ஆண்டுகாலம் தமிழ் மண்ணின் உப்பைத் தின்றாலும் வடவன் வடவனைத்தான் ஆதரிப்பான்.

இந்த பதிவைப் படித்துவிட்டு 'ஆசாரிகள் தொழிலை கைக்குள் வைத்திருப்பது சாதிவெறி' என திராவிட இயக்கங்கள் பிரச்சாரம் செய்யலாம்.

(தகவலுக்கு நன்றி: கா.தமிழ்வேங்கை
தென்செய்தி)

No comments:

Post a Comment