Wednesday 21 March 2018

அடுத்தது நம்மில் யார்?

அடுத்தது நம்மில் யார்?

முகநூலில் தமிழ்தேசியம் பேசுவதோடு நில்லாமல் இயக்கம், கட்சி என களத்தில் இறங்கியவர்கள் எனக்குத் தெரிந்து 10 பேர் வரை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளனர்.

தற்போது செல்வா பாண்டியர் சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

* பள்ளர்கள் sc பட்டியலில் இருந்து வெளியேற்றம்
* பெரியார் திடல் முற்றுகை
* திரைத்துறை வந்தேறி ஆதிக்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம்
*முகநூல் தமிழ்தேசிய எழுச்சி பற்றி முதல் புத்தகம் வெளியீடு
* ஒரிசா பாலு அவர்களுடன் இணைந்து பணி

என செல்வா அவர்களது தமிழ்தேசியப் பணி மறக்கவியாதது.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்
ஒரு பெரிய உறுத்தல் உண்டு.

தமிழ்நாடு தெற்கு வடக்கு என இரண்டாக பிரிக்கப்பட அவர் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் நான் இரங்கல் தெரிவித்திருப்பேன்.

என் நாட்டைத் துண்டாட நினைத்த ஒருவருக்கு இரங்கல் தெரிவிக்க என் நாட்டுப்பற்று தடுக்கிறது.

எனவே அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் இயத்தினர் பெரியமனம் செய்து என்னை மன்னிக்கவும்.

அடுத்து யாரோ?!

No comments:

Post a Comment