Wednesday 21 March 2018

உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல்
---------------------
"ஏன் பாய்?
நாங்கள்லாம் எத்தன வருசமா கூட இருக்கோம்?!
அவனுக்கு நன்றி இருக்கா?! போய்ட்டான் பாருங்க.
ஆனா நீங்க அவனுக்குனா மட்டும் இப்பிடி துடிக்கிறீங்களே ஏன் பாய்?"

"நீங்கள் எல்லாரும் என்ன பாய் பாய் னு கூப்டும்போது
அத்தனபேரு மத்தில அவன் மட்டும்தாய்யா என்ன அண்ணே அண்ணே னு கூப்டுவான்"
-----------
"எனக்கு உருளக்கிழங்கு வறுவல்னா ரொம்ப பிடிக்கும்.
  இப்போ சிப்ஸ் லேய்ஸ் னு சொன்னாதான் எல்லாருக்கும் புரியுது.
என் மொழியினுடைய ஒரு வார்த்தை அழிந்துவிட்டதே!
இது பற்றி யாராவது பேசுறீங்களா?!"
விஜய் டிவியில் வணிகம் உலகமயமாதல் பற்றி பேசிய ஒரு இசுலாமியர்
------------
  "என்ன சார் வாய்ல நுழையாத பேரு வச்சிக்கிட்டு...
ஸ்பெல்லிங் சொல்லுங்க"

"எதுக்குங்க ஸ்பெல்லிங்?
பேசாம தமிழ்ல தரவேண்டியதுதானே?! பிரச்சனயே இருக்காதே!
மெடிக்கல் ரிப்போட்னா இங்கிலீசுலதா இருக்கணுமா?
தமிழ்நாட்டுல எல்லாருக்கும் தமிழ் தெரியுமே?!"

30 வயது படித்த இசுலாமிய இளைஞர்
----------------
மேற்கண்ட மூன்றும் நான் நேரில் சந்தித்த அனுபவங்கள்.

ஈழத்தில் ஏதோ இசுலாமியர்கள் தமிழரே கிடையாது என்கிறார்கள்.
சான்று கேட்டால் பதிலில்லை.

எனக்கு தமிழகத்து இசுலாமியரை பற்றித்தான் தெரியும்.

தமிழ் இலக்கியங்களில் வரும் இராமனை எவனோ வடயிந்தியன்   எடுத்துக்கொண்டு ரதம் அமைத்து இசுலாமியர் பகுதி வழியாக போகிறான்.

ஒரு பொம்பள பொறுக்கி இசுலாமியத் தலைவன் பிரபாகரன் ஒரு தீவிரவாதி என்கிறான்.
பொங்கல் பண்டிகையை இசுலாமியர் கொண்டாடக் கூடாது என்கிறான்.

ஆனால் நடைமுறையில் எல்லோரும் இணக்கமாகத்தான் இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment