Saturday 14 July 2018

தாய்மாமன் கணவனாகலாமா?

தாய்மாமன் கணவனாகலாமா?

'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தில் அக்கா மகளை மணம் செய்ய மறுக்கும் கதாநாயகனின் குடும்பத்தில் நடக்கும் பாசப் போராட்டத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால், அக்காவின் மகளைத் திருமணம் செய்வது தமிழரின் பண்பாடே இல்லை.

அவ்வாறு செய்தால் உறவுமுறை குழம்பிப் போகும்.

உறவுமுறையில் அத்தை அல்லது மாமன் முறையில் திருமணம் செய்வதுதான் தமிழரது பண்பாடு.

ஏனப்படி?!

நாம் பழமையான இனம்.
அப்போது மக்கட்தொகை மிகவும் குறைவு.
அதனால் உறவுமுறைக்குள் திருமணம் செய்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

ஒரு ஆண்குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் ஒன்றாக ஒரே வீட்டில் வளர்ந்தால் அவர்களுக்குள் அண்ணன்-தங்கை உணர்வுதான் ஏற்படும்.
இதுதான் இயற்கை விதி.
(மேற்கண்ட திரைப்படத்திலும் இதைக் கூறியுள்ளனர்).

ஒரு எடுத்துக்காட்டு கூற முடியும்.
மேலை நாட்டிலே தகப்பன் பெயரே தெரியாத ஒருத்தி தன் தந்தையையே காதலித்து பிறகு அந்த உண்மை தெரியப்பெற்று மனநல மருத்துவர்களிடம் செல்கிறாள்.
அவர்கள் அவ்விருவரையும் ஒரே வீட்டில் தந்தையும் மகளுமாக சில காலம் வாழச் சொல்கிறார்கள்.
இதன் மூலம் பிரச்சனை சரிசெய்யப்பட்டதை டிஸ்கவரியில் காட்டினர்.

தமிழரின் முறைப்படி அத்தையும் மாமியாரும் ஒரே முறை.
அங்கே சித்தியின் கணவருக்கும் தந்தையின் தம்பிக்குமே வெவ்வேறு உறவுமுறைப் பெயர்கள்.

வடக்கே அவ்வாறு கிடையாது.
மலையாளிகளிலும் அவ்வாறு கிடையாது.
(ஆனால் சிங்களவர் நமது முறையை பின்பற்றுகின்றனர்)

வடயிந்தியாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது இல்லை.
அங்கே கோத்திரம் என்றொரு முறை உள்ளது.
அது தந்தை வழி வருவது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதில்லை.
வெவ்வேறு கோத்திரம் என்றாலும் மணமக்கள் இருவரின் தாத்தா வரை ரத்தசொந்தம் இருக்கக்கூடாது என்பது விதி.
அதாவது அவர்கள் பழமையான இனம் இல்லை.
மக்கட்தொகை ஓரளவு பெருகிய நிலையில் உருவான இனம் ஆதலால் இப்படி செய்யமுடிகிறது.
(பிராமணர்கள் கோத்திர முறை அவர்களது பெண்ணெடுத்துப் பெண்கொடுக்கும் 'மாட்டுப்பெண்' அதாவது 'மாற்றுப்பெண்' முறையால் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் சிறுபான்மை சாதி என்பதால் நெருங்கிய உறவினைத் தவிர்க்க கோத்திர முறையை ஏற்றிருக்கலாம்)

அரேபியர் போன்ற பாலைவன இனங்களில் மக்கட்தொகை மிகவும் குறைவு.
எனவே அங்கே சித்தப்பா பெரியப்பா மாமா என எந்த குடும்பத்திலும் மணம் செய்கிறார்கள்.

ஐரோப்பாவில் உறவுமுறைக்குள் திருமணம் செய்வது ஆங்காங்கே நடந்துள்ளது.
சிறந்த எடுத்துக்காட்டு ஹிட்லர் குடும்பம்.
அவரது தந்தை அவரது தாயின் தாய்மாமன் ஆவார்.

தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் தந்தைக்கு அடுத்த நிலையை வகிக்கிறார்.

தமிழகத்தில் 50 ஆண்டுகள் முன்புவரை கூட பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களே இருந்தன.
அண்ணனும் தம்பியும் ஒரே வீட்டிலேயே இருந்தார்கள்.
அவர்களுடைய பிள்ளைகள் ஒன்றாகவே வளர்ந்தன.
அவர்களுக்குள் உடன்பிறப்பு என்கிற எண்ணமே மேலிடும்.

பெண்கள் பெரும்பாலும் வேறொரு வீட்டிற்கு வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவளது குழந்தைகள் அவள் பிறந்த வீட்டிலிருந்து பிரிந்தே வளர்வதால் பிற்பாடு பிறந்த வீட்டுடன் சம்பந்தம் செய்துகொள்ளத் தடை இல்லை.

சரி சித்தி மற்றும் பெரியம்மா கூட வேறு ஊரில்தான் வாழ்க்கைப் பட்டிருப்பர்.
அவர்கள் பிள்ளைகளும் எப்படி உடன்பிறப்பு ஆயினர்?

அப்போது அக்கா-தங்கை இருவரும் ஒரே வீட்டில் அல்லது ஒரே ஆணுக்கு வாழ்க்கைப்பட்டது  பரவலாக நடந்தது.

அப்போதெல்லாம் ஆண்கள் மக்கட்தொகை குறைவு.
பெண்கள் அதிகம்.
(காரணம் அன்றைய ஆபத்து நிறைந்த வாழ்க்கை மற்றும் போர் போன்ற காரணங்களால் ஆண்கள் அடிக்கடி இறந்தனர்.
இன்றும்கூட ஆண்களுக்கே அதிகம் இதயவலி வருகிறது.
இன்றும் பெண்களின் சராசரி ஆயுளே ஆண்களை விட அதிகம்)
எனவே இரண்டு மனைவிகளைத் திருமணம் செய்வது சர்வசாதாரணம்.

எனவே அக்கா-தங்கை பெற்ற பிள்ளைகளும் ஒரே வீட்டில் வளர்ந்தனர்.

அதனால் பெரியவர்கள் திருமண விதிகளை வகுக்கும்போது உடன்பிறந்தோர் ஒரே பாலினம் என்றால் அவர்கள் சம்பந்தம் செய்துகொள்ள தடை விதித்தனர்.
அதுவே இன்றும் தொடர்கிறது.

தெலுங்கரில் பிராமணரும் தேவதாசிகளும் (தேவரடியார் அல்ல) கலந்து ஒரு சாதி தோன்றியது.

இவர்களின் தொழில் விபச்சாரம்.
இவர்கள் தமது குடும்ப்ப் பெண்கள் மூலம் பகலில் ஆடலும் இரவில் விபச்சாரமும் செய்துவந்தனர்.
இச்சாதியில் உறவுமுறை என்றெல்லாம் எதுவுமே கிடையாது.
முதலில் சகோதரியை வைத்து விபச்சாரத் தொழிலைத் தொடங்கும் ஆண்கள்  பிறகு அவளது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.
அதற்கு வசதியாக அவளைத் திருமணம் செய்துகொண்டனர்.
இப்படி ஏற்பட்டதே அக்கா மகளை மணமுடித்தல் முறை.
பிற்பாடு இவர்கள் பதவி, அதிகாரம், சொத்து என செல்வாக்கு பெற்றனர் (இன்றும் அவ்வாறே).

இவர்களைப் பார்த்து தமிழரும் முறை தவறி அக்கா மகளை மணமுடிக்கத் தொடங்கினர்.
(எல்லா சாதிகளும் செய்வதில்லை.
சில சாதிகளில் இது சமீப காலமாகத்தான் நடக்கிறது)

விஞ்ஞானம் வளரத் தொடங்கியபோது உறவுமுறையில் திருமணம் செய்வது சரியா தவறா என்ற விவாதம் உலகம் முழுவதும் எழுந்தது.
இன்றும் அமெரிக்க மாகாணங்களில் பாதி உறவுமுறைத் திருமணங்களை அங்கீகரித்தும் பாதி தடைசெய்தும் சட்டமியற்றியுள்ளன.

நெருங்கிய உறவில் திருமணம் செய்வது பலவீனமான சந்ததியைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது.

தமிழர்கள் தொடக்கத்திலிருந்தே உறவுமுறையில் திருமணம் செய்துவந்துள்ளனர்.
உறவுமுறையில் மணமுடிக்க இயலாத சூழலில்தான் வெளியே பெண் எடுக்கின்றனர்.
  தமிழர்களின் இந்த பண்பாடு ஒற்றுமையான, நிலைத்த, "குடும்பங்களின் கூட்டு அமைப்பிற்கு" ஆதாரமாக உள்ளது.
சொந்தம் விட்டுப் போகாமல் இருக்கவும் சொத்து கைமாறாமல் இருக்கவும் அடிப்படையாக உள்ளது.

ஏதேனும் ஒரு குறையுடன் இருந்தாலும் வாழ்க்கைத் துணை கிடைக்க நமது பண்பாடு இவ்வாறு வழிசெய்துள்ளது.

நமது பண்பாட்டில் முறைப்பெண் மீதான முதல் உரிமை ஒரு ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முறையுள்ள பெண்ணை (சில சமயம் ஆணை) தூக்கிச்சென்று மணம் செய்துகொள்வதும் தவறாகப் பார்க்கப்பட்டதில்லை.

ரத்த சொந்தத்தில் திருமணம் செய்வது குறைகளைத் தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மை என்றால் மற்ற இனங்களை விட தமிழர்கள் பலவீனமாகவும் குறையுடனும் இருக்கவேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லை.

சொந்தத்தில் திருமணம் செய்வதால் பரம்பரை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 5% (மட்டுமே) அதிகம் என்று தெரியவருகிறது.
(ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்).

எகிப்து மற்றும் ஐரோப்பாவில் தனது ரத்தம் தூய்மையாக இருக்கவேண்டும் என்று ஒரே குடும்பத்தில் உடன்பிறப்புகளையே திருமணம் செய்து செய்து ஊனமாகி மனநலம் குன்றி அழிந்துபோன அரச பரம்பரைகளும் உண்டு.

நமக்கான நாடு அமையும்போது நமது முறைப்படி உறவுமுறையில் திருமணம் செய்வது பற்றியும் விரிவாக ஆராயவேண்டும்.

பாதிப்பு ஏற்படும் என்றால் இப்பழங்கால முறையைக் கைவிடுவதோடு 'ஒன்றுவிட்ட முறைமக்களுக்கு' முதல் உரிமை வழங்கவேண்டும்.
திருமணம் செய்யும் உறவுமுறைகளைச் சட்டமாக்க வேண்டும்.

அதுவரை அனைவரும் சொந்த சகோதரியின் மகளை மணமுடிக்கும் முறைதவறிய செயலைத் தவிர்க்கவேண்டும்.

இசுலாமியத் தமிழரும் சித்தி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா குடும்பத்தில் சம்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment