Tuesday 10 July 2018

இமயமே தமிழரின் எல்லை

இமயமே தமிழரின் எல்லை

இலக்கியம் என்பது ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு ஆகும்.

மண்மீட்பு நோக்கத்துடன் தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்தால் தமிழர்நாடு இமயமலை வரை பரவியிருந்தது என்பதற்கு பல சான்றுகள் கிடைக்கின்றன.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தெடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
- காரிக்கிழார்,
புறநானூறு 6:1–4

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே
- குமட்டூர்க்  கண்ணனார்,
பதிற்றுப்பத்து 11:23–25

கடவுள் நிலைஇய கல் ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்
- பரணர்,
பதிற்றுப்பத்து 43 :6–8

தென்குமரி வட பெருங்கல்
குண குட கடலா எல்லை
குன்று மலை காடு நாடு
ஒன்றுபட்டு வழிமொழிய
கொடிது கடிந்து கோல் திருத்தி
படுவது உண்டு பகல் ஆற்றி
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல
-குறுங்கோழியூர் கிழார்,
புறநானூறு 17:1-8

வடவேங்கடந் தென் குமரியாயிடைத்
தமிழ் கூறு நல்லுலகத்து
- பனம்பாரனார்,
தொல்காப்பிய பாயிரம்

மேற்கண்டவை இமயம் நமது வடக்கெல்லை என்பதற்கான சான்று மட்டுமே.

இமயம் வரை அரசாண்ட தமிழ் மன்னர்கள் பற்றியும் மக்களுக்கு இமயத்துடன் இருந்த தொடர்பு பற்றியும் பார்ப்போம்.

மூவேந்தரும் இமயத்தில் தமது வெற்றிச் சின்னத்தைப் பொறித்ததை 'இமயநெற்றியில் விளங்கு வில்-புலி-கயல் பொறித்த நாள்' என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

  இமயம் வரை வெற்றிகண்ட சேரலாதன் மற்றும் செங்குட்டுவன் பற்றி,
அகநானூறு 127,
புறநானூனு 39,
சிறுபாணாற்றுப்படை 48,
பதிற்றுப்பத்து பதிகம் 2,
பதிற்றுப்பத்து 2-11,
பதிற்றுப்பத்து 43,
சிலப்பதிகாரம் வாழ்த்துப்பாடல்
ஆகிய இடங்களில் வருகிறது.

கரிகாலன் இமயம் வரை வெற்றி கண்டது பற்றி,
கலிங்கத்துப்பரணியில் 'இமயத்தில் புலிக்கொடி' எனும் பகுதி,
சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதை 88-97, வஞ்சிக் காண்டம் 24 மற்றும் மதுரைக் காண்டம் 17,
பெரியபுராணத்தில் திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணம், செய்யுள் 85
மற்றும் அதே நூலில் எறிபத்தர் கதை ஆகிய கூறுகின்றன.

நெடியோன் பாண்டியன் இமயமலையையும் கங்கையையும் கைப்பற்றி ஆண்டதை சிலப்பதிகாரம் 11:17-22 கூறுகிறது.

ஏதோ பக்கத்து ஊர் குன்றினைக் குறிப்பிடுவது போல இமயமலையைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் இலக்கியம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றன.

திருக்குறள் 969 இமயமலையில் வாழும் கவரிமா முடியை நீக்கினால் (குளிரில்) இறக்கும் என்று கூறுகிறது.

இமயமலையில் மூங்கில் மரங்கள், நெல்லிமரங்கள், கொன்றைமரங்கள் இருப்பது பற்றியும் இமயமலை மான்கள் வறட்சியின் போது நெல்லிக்காயைத் தின்னும் என அகநானூறு 399 கூறுகிறது.

நவ்வி மான்கள் அந்தணர் வளர்த்த தீயின் வெளிச்சத்தில் (கதகதப்பில்) வந்து உறங்கும் என்று புறநானூறு 2 கூறுகிறது.

சிவந்த கால்களுடன் வெண்ணிற அலகு கொண்ட பறவை இமயமலையில் ஏரிகளில் திரிவது பற்றி நற்றிணை 356 கூறுகிறது.

இமயமலை அருவிகள் கங்கை ஆற்றுடன் கலப்பதையும்
இமயமலையில் உள்ள ஞெமை மரங்கள் பற்றியும் மாலைவேளையில் கொக்குகளும் இதர பறவைகளும் கூட்டாகப் பறப்பதையும்
முல்லைகொடி மொட்டுகள் மலர்வதையும்
நற்றிணை 369 விவரிக்கிறது.

இமயமலையின் பறவைகள் பகலில் மேகங்களைக் கொத்துமளவு உயரப்பறந்து மாலை கூடடைவதை கலித்தொகை 92 கூறுகிறது.

இமயமலை மாலை நேரத்தில் பனியில் செவ்வானக் கதிர்கள் பட்டு தங்கம்போல மின்னும்.
இதனை தங்கம் என்று புறநானூறு 39 மற்றும் 369, அகநானூறு 398, மற்றும் பெரும்பாணாற்றுப்படை ஆகியன வர்ணிக்கின்றன.

இமயமலையின் இருக்கும் மூங்கில் மரங்கள் பற்றி புறநானூறு 166,
முருக்க மரங்களையும் நரந்தைப் புற்களையும் கவரிமான்களையும் பற்றி பதிற்றுப்பத்து 11,
மாமரங்களைப் பற்றி அகநானூறு 127 ஆகிய பாடல்கள் கூறுகின்றன.

இமயமலையின் தகர மரங்கள், எலுமிச்சை மணமுடைய நரந்தை புல், நீர்ச்சுனைகளில் மலர்ந்திருந்த குவளை மலர்கள், புல்லைத் தின்றுவிட்டு ஓய்வெடுக்கும் கவரிமா ஆகியன புறநானூறு 132 இல் குறிக்கப்படுகின்றன.

இமயமலையில் மேகங்கள் மோதி (கொண்டல்)மழை பொழியும் என்கிறது புறநானூறு 34.

இதுபோக இமயமலையை போகிறபோக்கில் குறிப்பிடுவதை புறநானூறு 166, குறுந்தொகை 158, கலித்தொகை 105, அகநானூறு 265, பரிபாடல் 8 ஆகியவற்றில் பார்க்கிறோம்.

எந்தவொரு மொழியிலும் இமயமலை பற்றி இத்தனை விரிவாக ஆவணங்கள் இல்லை.

"இமயம் எமது எல்லை" என்று எந்த இனமும் எழுதிவைக்கவும் இல்லை.

நியாயப்படி இலக்கியச் சான்றுகள் காட்டி தமிழர்களாகிய நாம் இமயமலைவரை திருப்பிக் கேட்டாலும் ஹிந்தியர் மறுகேள்வி கேட்காமல் தரவேண்டும்.

நன்றி:-
kalappal இணையம்,
திருத்தம் பொன்.சரவணன், மற்றும் விக்கிபீடியா

1 comment: