சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?
1994 ல் இந்தியாவில் ஆன பிரசவங்களில் 61.6% பிரசவங்கள் வீட்டில் நடந்துள்ளன.
பிரசவமானோரில் டாக்டர் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டோர் 21.6 சதவீதம் மட்டுமே.[9]
பிரசவ மரணங்கள் (தாய் உயிரிழப்பு) அப்போது லட்சத்திற்கே 437 தான் இருந்தது.
அதாவது 'மொத்த பிரசவங்களின்' எண்ணிக்கையில் 'தாயின் மரணத்தில் முடிந்த பிரசவங்களின்' எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது 0.43% ஆகும்.
இந்த அரைசதவீத மரண வாய்ப்பும் இந்தியாவின் நிலைதான்.[9]
பேறுகால கவனிப்பில் (Antenatal care) தமிழகம் அப்போது மூன்றாம் இடத்தில் இருந்தது.
அதாவது 94% தமிழக கர்ப்பிணிகள் பேறுகால கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பெற்றிருந்தனர்.
37% இந்திய கர்ப்பிணிகளின் மட்டுமே பிரசவ கால கண்கானிப்பு பெற்றிருந்தனர்.[9]
எனவே தமிழகத்தில் பிரசவ மரணங்கள் மூன்று மடங்கு குறைவாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது லட்சத்திற்கு 180 வரை இருந்திருக்கும் என அனுமானிக்கலாம்.
புரிந்துகொள்ளும் வகையில் கூறினால் பிரசவமான ஆயிரம் தாய்மார்களில் (தோராயமாக) இருவர் இறந்துள்ளனர்.
நியாயப்படி இந்த ஆயிரத்தில் இருவரைக் காப்பற்றத்தான் சிசேரியன் செய்யப்படவேண்டும்.
ஆனால் தற்போதைய நிலை என்ன?
அதிகரித்து வந்த சிசேரியன் கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு அதை நெறிப்படுத்தும் விதமாக World health organisation (WHO) 1985 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதிலுள்ள பரிந்துரைப்பின்படி[1] பிரசவங்களில் சிசேரியனின் சதவீதம் 10-15% க்குள் இருக்கவேண்டும்.
ஆனால் 2005 லேயே தமிழ்நாட்டில் "பிரசவத்தில் சிசேரியன் சதவீதம்" 20% ஆகிவிட்டிருந்தது. [2]
2015 ல் இது 34% ஆக உயர்ந்து இந்தியாவில் நான்காம் இடத்தைப் பிடித்தது தமிழ்நாடு.[3]
2015 நிலவரப்படி தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆன பிரசவங்களில் 10 ல் 2 சிசேரியன் ஆகும்.
ஆனால் தமிழக தனியார் மருத்துவமனைகளில் 10 ல் 6 சிசேரியன் ஆகும்.[4]
ஆயிரத்தில் இரண்டு எங்கே?!
பத்தில் ஆறு எங்கே?!
(இத்தனைக்கும் தமிழகத்தின் தற்போதைய பிரசவ மரணங்கள் லட்சத்திற்கு 62)
மாவட்ட வாரியாகப் பார்த்தால் தமிழகத்தின் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் இந்திய அளவில் 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளன.[4]
இதிலிருந்து சிசேரியன் பெரும்பாலும் தேவையற்றது என்பதும் அதில் தமிழகம் முன்னணியில் உள்ளதையும் அறிகிறோம்.
இதுமட்டுமல்லை,
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால் மிக முக்கியமானதாகும்.
தமிழகத்தில் 2015 ல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில்,
பிறந்த ஒருமணி நேரத்தில் பால் கொடுப்பெற்ற குழந்தைகள் 54.7% சதவீதம் ஆகும். [3]
இதற்கு முக்கிய காரணம் சிசேரியன்.
பிரசவத்தின்போது, தாயின் உடலில் சுரக்கும் திரவத்தில் இருக்கும் (நல்ல)பாக்டீரியாக்கள் குழந்தைக்கு போராடும் சக்தியையும் நோயெதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
இந்த சக்தி ஓராண்டு வரை குழந்தை நோய்களிலிருந்து பிழைத்துவாழ உதவுகிறது.
ஆனால் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு இது கிடைப்பதில்லை.
எனவே அது விரைவில் நோயாளி ஆகிறது.
(மேலைநாடுகளில் இதை சமன் செய்ய தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவத்தை சிசேரியன் குழந்தைக்கு பூசும் vaginal seeding செய்கிறார்கள்.
ஆனால் இது தற்காலத் தீர்வுதான்). [10]
தொப்புள்கொடி அறுப்பதும் கூட உடனடியாகச் செய்யப்படுவதால் குழந்தைக்கு பிரசவத்திற்குப் பிறகு தொப்புள்கொடி மூலம் இறங்கவேண்டிய அந்த ஸ்டெம் செல்கள் நிறைந்த ரத்தம் கிடைப்பதில்லை.
(மேலை நாடுகளில் இதை சேமித்து பத்திரமாக வைக்கின்றனர்).
அதாவது சிசேரியன் குழந்தை நலனையும் பெறுமளவு பாதிக்கிறது.
தமிழகத்தில் நிலை மட்டும்தான் இப்படியா என்றால் இல்லை.
உலகளாவிய கருத்துக்கணிப்பும் புள்ளிவிபரங்களும் சிசேரியன் பற்றி எச்சரிக்கின்றன.
பிரசவத்தின்போது அரிதாக நிகழும் தாயின் மரணத்தைக் காரணம் காட்டி பயமுறுத்தி பெரும்பான்மையான சிசேரியன்கள் தேவையில்லாமல் செய்யப்படுகின்றன.
சிசேரியன் மூலம் பிரசவ மரணங்கள் குறைந்தது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.
இந்த உண்மையை 2006 நவம்பரில் WHO வெளிப்படுத்தி உள்ளது.
119 நாடுகளில் 1991 முதல் 2003 வரையான தரவுகளைத் திரட்டி வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிசேரியனுக்கும் பிரசவ மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. [6]
2011 இலும் இதேபோல 193 நாடுகளில் 2000 - 2009 வரையான தரவுகளை வைத்து தேவையற்ற சிசேரியன்கள் அதிகரித்து வருவதை எச்சரித்தது. [8]
2015 இலும் இதேபோல 194 நாடுகளில் 2005 - 2012 வரையான தரவுகளை வைத்து சிசேரியன் செய்வது பிரசவ மரணங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்றும்
அது பெரும்பாலும் தேவையற்ற நிலையில் செய்யப்படுவதாகவும் அடித்துக் கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO). [7]
உலகளாவிய தரவுகளுடன் இந்த உண்மையை பல அறிஞர்களும் ஐ.நா நிறுவனஙகளும் சேர்ந்து 24.08.2015 அன்று உலகிற்கு அறிவித்துள்ளன. [5]
சிசேரியன் கலாச்சாரம் அதிகரித்து வருவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, பெண்களின் உடல்வலு குன்றியமை, தேவையற்ற பயம், கர்ப்பிணிகளின் கவனக்குறைவு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கார்ப்பரேட் மயமான மருத்துவமனைகளின் லாபவெறி இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆகும்.
எனவே கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உறவினர்கள் கூடுமானவரை சிசேரியனுக்கு மறுப்பு தெரிவித்து
சுகப்பிரசவத்தை எதிர்கொண்டு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. Robson classification, 1985
2. National family health survey 3 (2005 - 2006)
3. National family health survey 4 (2015 - 2016)
4. Live Mint 06.01.2016
5. Association between rates of caesarean section and maternal and neonatal mortality in the 21st century: a worldwide population based ecological study with longitudinal data.
6. Cesarean section rates and maternal and neonatal mortality in low-, medium-, and high-income countries: an ecological study.
7. Relationship Between Cesarean Delivery Rate and Maternal and Neonatal Mortality.
8. Correlation of Cesarean rates to maternal and infant mortality rates: an ecol
9. National family health survey 1 (1992 - 1993)
10. ஜேம்ஸ் காலகெர், பிபிசி - அறிவியல் மற்றும் சுகாதாரப் பிரிவு
Monday, 6 August 2018
சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?
நோகாமல் தாய்மை
நோகாமல் தாய்மை
பிரசவ அறுவை நடந்த மறுநாள்.
நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை.
குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது.
முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும்.
கண்ணீரைப் பாலெனக் குடிக்கும்.
இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
நான் பார்த்திருக்கிறேன்.
அதுவும் அந்த உயிரின் தந்தையாக.
இப்போது நினைத்தாலும் கண்ணீர் முட்டும்.
நீங்கள் என்னதான் துணிச்சலான ஆள் என்றாலும் "ஆபரேசன் பண்ணாவிட்டால் இருவருக்கும் ஆபத்து" என்று பதறவைப்பார்கள்.
நீங்கள் "செத்தாலும் கேள்வி கேட்கமாடேன்" என்று கையெழுத்து போடுவதைத் தவிர வேறுவழியில்லை அதிலும் இயற்கைக்குப் புறம்பான ஒரு தலைமுறையை வைத்துக்கொண்டு.
பணத்தைக் கொட்டி அழுது தாயையையும் குற்றுயிராக்கி குழந்தையையும் குறைப் பிறப்பாக்கி மெல்ல மெல்ல சீரழிவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆம்.
தாய்க்கு முதலில் முதுகெலும்பில் மஜ்ஜையில் இரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் ஒரு மருந்தைச் செலுத்துவர்.
இதற்குப் பிறகு அந்தப் பெண் 'குறுக்கு விளங்காதவள்' ஆகிவிடுவாள்.
வாழ்நாள் முழுவதும் அவளால் 10 நிமிடம் தொடர்ச்சியாக நேராக நிற்கவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாது.
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மெய்யான அமுதமான சீம்பால் சிசேரியனில் பிறந்த அந்த குறைபிறப்புக்கு கொடுத்துவைக்காது.
பின்னே! அது ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டு போனால்,
அலோபதி மருத்துவன் எப்படி 8×8 சதுர அடி க்ளினிக்கில் தொழில் தொடங்கி பத்தே ஆண்டுகளில் கோடி பெறுமானமுள்ள மருத்துவமனை கட்டமுடியும்?!
தாய்ப்பால் வராமைக்கு உடல் காரணமல்ல.
மயக்க ஊசி போட்டு அல்லது மரத்துபோக வைத்து வயிற்றின் பல அடுக்குகளைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பார்கள்.
அறுந்த அடுக்குகள் இயற்கையாக பழையபடி ஒன்றுசேராது.
காலம் முழுவதும் அவள் பெருத்த வயிற்றில் தழும்போடுதான் அலையவேண்டும்.
இதிலே எங்கிருந்து காமம் பிறப்பது அடுத்த குழந்தை பெறுவது...?!
சுகப்பிரசவம் என்றால் மட்டும் சும்மா விடுவார்களா?!
குழந்தை வெளிவரும்போது பிறப்புறுப்பை வெட்டிவிடுவார்கள்.
அதன் பிறகு இறுக்கமற்ற கலவிதான்.
நெருக்கமற்ற வாழ்க்கைதான்.
படிதாண்ட தேவைதான்.
எங்கே விட்டேன்....?
ஆம். அறுத்த பிறகு...
அறுந்துகிடக்கும் உடல் விழிக்கும்போது அதற்கு ஒன்றும் புரியாது.
தான் சீராட்டி வளர்த்த கரு எங்கே போனது...?!
எப்படி இவ்வளவு பெரிய காயம்?!
தூசியைவிட சிறிய விந்தணுவையும் அண்ட அணுவையும் சேர்த்து இரத்தம் கொடுத்து தசை கொடுத்து வெப்பம் கொடுத்து உணவு கொடுத்து எலும்பு கண் இதயம் என என்னென்னவோ பொருத்தி ஒரு ஆறறிவு உயிராக உருவாக்கத் தெரிந்த அறிவுள்ள பெண்ணுடலுக்கு,
நமது நவீன, மிகமுன்னேறிய, அதிமுற்போக்கு, வெகுதொலைநோக்கு, அலோபதி அறுவைக் கத்தி மருத்துவத்தைப் புரிந்த கொள்ள அறிவு போதவில்லையப்பா..!
2,3 நாட்களுக்குப் பிறகுதான் உடலுக்குப் புரியும் அதன் கரு உயிருடன் பாலுக்கு ஏங்குவது.
மெல்ல மெல்ல தாய்க்கு பால் ஊறத் தொடங்கும்.
கரைத்த மாவை முகம் சுளித்து குடித்துவந்த குழந்தை இப்போது தாய்ப்பாலைச் சுவைக்கும்.
உண்ட மயக்கத்தில் இதழ்கூட்டி சிரிக்கும்.
'இப்போதுதான் நிம்மதி' என்று அயரும் முன் வற்றத் தொடங்கும் அந்த முலைகள்.
6 மாதத்திற்கு பிறகு பால் அறவே இருக்காது.
பால் சுரக்க மருந்து குடிக்க சொல்வார்கள்.
நீர்த்த பால் வரத் தொடங்கி பின் அதுவும் நின்று வற்றிய விளைநிலமாக இருந்த மார்பு இப்போது பாலைவனமாகிவிடும்.
சுகப்பிரசவமான பெண்களுக்குமே பால் வராதபடி செய்துவிடுவார்கள்.
இனி வரும் காலத்தில் குழந்தை பெற்றவளுக்கு பால் வந்தால்தான் அதிசயம்!
பிறகென்ன மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியதுதான்.
குழந்தை உண்டாகும்போது ஆற்றலுக்கென சர்க்கரை ஏறும்,
குழந்தை உடல் உருவாக இரத்த அளவு குறையும்.
உடனே சுகர் ஏறிவிட்டது. அனீமியா வந்துவிட்டது என மருந்து மாத்திரை கொடுத்து இல்லாத நோயை புகுத்துவோரும் உண்டு.
"ப்ரெக்ணன்ட் ஆனதுல இருந்து சுகர் வந்துருச்சு" என்போர் இன்று கணிசம்.
யாரோ ஹீலர் பாஸ்கராம்.
"உன் குழந்தையை நீயே பெறு" என்றாராம்.
"என்ன அநியாயம்!" என்று பிடித்து உள்ளேவைத்துவிட்டார்கள் உடலுறுப்பு வியாபாரிகள்.
சிட்டி ரோபோ பழங்கால முறையை பின்பற்றி பிரசவம் பார்த்தால் கைதட்டுவோம்.
வேக்குவம் கிளினரால் குழந்தையை வெளியே இழுத்தால் கைதட்டுவோம்!
அதையே நிஜத்தில் செய்தால் தூக்கி உள்ளே வைப்போமா?!
மருத்துமனையில் மரணமே நிகழ்ந்தது இல்லையா?!
சிறுவனான தன் மகனை விட்டு ஆபரேசன் செய்து விளையாடிய டாக்டரை என்ன செய்தார்கள்?!
கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் அடித்த கொள்ளை பற்றி படங்கள் வந்ததில்லையா?
ஆஸ்பத்திரிக்கு உள்ளே என்ன நடக்கிறதென்று தெரியாமல் முதலமைச்சரையே பூட்டிவைத்த வரலாறு அறியோமா?!
நான் கேட்கிறேன் உலகில் உள்ள கோடானு கோடி உயிரினங்கள் பிள்ளைபெறுவது மருத்துவமனையில்தானா?
டிஸ்கவரியில் கூட காட்டுகிறார்களே?!
தன்னந்தனியாகத் தானே குட்டிகளை ஈன்ற பெண்சிறுத்தை உடனே வேட்டைக்குப் போய்விட்டு வருகிறதே?!
8 மாத கர்ப்பத்தோடு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய ஆப்பிரிக்கப் பெண்மணி பற்றி செய்தி வந்ததே!?
தாய்மை என்ன சுமையா?!
உலகத்திலேயே மிக மிக சோம்பேறித்தனமாக குறைந்த வலியுடன் பலரது உதவியுடன் நோகாமல் எளிமையாக தாய்மையை அடைவது மனித இனம்.
நான் சொல்வது 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை.
இப்போது பெண்கள் குனிந்து நிமிராமல் வலியேயில்லாமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு அடைவதற்குப் பெயர் தாய்மையல்ல.
சிசேரியன் செய்த எவளும் தாயில்லை!
குறுக்குவழியில் பதவியுயர்வு அடைந்த குற்றவாளி!
பயந்தாங்கொள்ளி! சுயநலவாதி! நோயாளி!
இதைச் செய்யும் மருத்துவர் இயற்கைக் கொலையாளி!
நாமோ கடவுளாகப் பார்க்கிறோம்.
தாயையும் சேயையும் காத்த கடவுள் என்று கும்பிடுகிறோம்.
அவர்கள் ஆபத்து என்றால்தான் கத்தி வைப்பார்களாம்!
அதெப்படி நல்ல நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து பலருக்கு அந்த 'ஆபத்து' வருகிறது?!
அதெப்படி 10% கூட இல்லாத 'பிரசவத்தில் அறுவையின் சதவீதம்' பத்தே ஆண்டுகளில் 37% ஆனது?!
கத்தி வைத்திருந்தால் கிழித்துவிடுவார்களா?!
சவரக்கத்தி வைத்திருக்கும் நாவிதரின் மனைவிதான் ஊருக்கு மருத்துவச்சி.
அவள் கிழித்துதான் பிரசவம் பார்த்தாளா?!
அவர்கள் காலத்தில் 37% பிரசவ இறப்பு நடந்ததா?!
இன்று அவர்கள் எங்கே?!
அலோபதி டாக்டர் சாக்கடையில் போடும் தொப்புள்கொடியை
இன்று பத்திரமாக சேமித்துவைக்கும் மேற்குலகம் "ஸ்டெம் செல்" மருத்துவம் என்ற பெயரில் ஏதோ அவர்கள்தான் முதலில் கண்டறிந்தது போல பீற்றிக்கொள்கிறார்களே?!
குறவர் செய்து தரும் தொப்புள்கொடி தாயத்தின் அருமையை இன்றுவரை நாம் அறிந்து நடந்தோமா?!
முதலில் கருத்தரிப்பது என்ன நோயா?
நோயில்லை என்றால் மருத்துவமனை ஏன் போகவேண்டும்?!
ஏன் "பேஷண்ட்" ஆகவேண்டும்?!
பிரசவத்தில் அதிக வலியைக் கட்டுப்படுத்தவும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் இயற்கையான வழியைத் தேடிக்கொண்டு
ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரின் அல்லது ஆலோசகரின் கண்கானிப்பில் வீட்டிலேயே பிரசவம் நடக்கவேண்டும்.
கல்லூரி பட்டப் படிப்பில் இதற்கான பயிற்சியும் வழங்கப்படவேண்டும்.
இல்லை. கார்ப்பரேட் டாக்டர்தான் கடவுள்.
அதுவே வேதவாக்கு என்ற போக்கு தொடர்ந்தால்.....
"சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றோர்" கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
(04.08.2018 அன்று இரவு 10:01 நேரத்தில் முகநூலில் இட்டது)
Thursday, 14 June 2018
உடலுறுப்பு வியாபாரம்
உடலுறுப்பு வியாபாரம்
இப்படித்தான் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் துடித்துக்கொண்டிருந்த இதயத்தை அறுத்தெடுத்து ஒரு சிறுமிக்கு சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி அனுப்பினார்கள்.
இதை ஊடகங்களில் பெரிய சாதனையாகக் காட்டினர்.
இதைத் தழுவித்தான் "சென்னையில் ஒருநாள்" படம் எடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகு இந்தியாவில் தமிழகம் உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது.
மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால் ஹிதேந்திரன் இதயத்தை வாங்கிய அந்த சிறுமி ஒரே ஆண்டிற்குள் இதயம் பழுதடைந்து இறந்துவிட்டார் என்பது.
எடுக்கப்படும் உறுப்புகளில் 25% தான் சரியாக பயன்படுத்தப் படுவதாக வினோபா (பா.ம.க) அவர்கள் விவாதத்தில் கூறியதாகக் கேள்விப்பட்டபோது மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
எது மலிந்துகிடக்கிறதோ அதற்கு மதிப்பிருக்காது.
ஹிந்தியாவில் அது மனிதர்கள்!
Tuesday, 13 June 2017
சோழர் ஆட்சியில் மருத்துவம்
சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.
மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.
மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
கல்வியோடு மருத்துவமும் கற்றுக்கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
நன்றி: Lokan K Nathan
Wednesday, 10 February 2016
பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்
பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்
÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷
தமிழ் இலக்கியத்தில் ஏராளமான மருத்துவ முறைகளும் அறிவுரைகளும் கொட்டிக்கிடக்கின்றன.
மருந்துக் குறிப்புகளோ கணக்கிலடங்காதவை
வியப்பில் ஆழ்த்துபவற்றை இங்கே காண்போம்
மூளை அறுவை சிகிச்சை :-
ஒருவரது மூக்கு வழியே சென்ற சிறிய தேரை (கல்லுக்குள் வாழும் தவளை வகை) மூளைக்கு போய்விட்டது.
பத்தாண்டு கழித்து அறுவை சிகிச்சை மண்டை ஓட்டைத் திறந்தபோது அந்த தேரை பெரிதாக வளர்ந்து மூளையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருந்தது.
ஒரு மண்பாண்டத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து காட்டினர்,
உடனே தேரை மூளையை விட்டுவிட்டு நீரில் தாவியதாம்.
இது அகத்தியர் தன் சீடர் பொன்னரங்கன் மூலம் செய்வித்தது
பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
புகழான தேரையர் முனிவர் தாமும் சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்
சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
போற்றியே என்சீடா பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே
(அகத்தியர் -86)
(போகர் ஏழாயிரம்)
தமிழர்களின் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீக காலத்தைய மண்டையோடு இராஜஸ்தானில் காலிபங்கா (kalibangan) என்ற இடத்தில் கிடைத்துள்ளது இதற்கு சான்றாக உள்ளது.
தமிழகத்தில் மதுரை அருகே கோவலன் பொட்டலில் கிடைத்துள்ள துளையிடப்பட்ட மண்டையோடு மேலும் ஒரு சான்று.
----------------------------
கட்டி அறுவை சிகிச்சை :-
உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்
(கம்பராமாயணம் -7417)
அதாவது கட்டியை அறுத்து
அதனுள் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி
நெருப்பில் வாட்டி கிருமிகளைக் கொன்று
மருந்து வைத்தல்
இதைத்தான் குலசேகர ஆழ்வார் பாடுகிறார்
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே
அதாவது, வாளால் வெட்டி தீயால் வாட்டினாலும் மருத்துவனை நோயாளி வெறுக்கமாட்டான்
அதுபோல துயர்களைத் தரும் உன்னை நான் வெறுக்கமாட்டேன் என்கிறார்.
--------------------------------
பஞ்சு கட்டு :-
செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”
(புறநானூறு 353)
அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரிந்த வீரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
------------------------------
தையல் :-
மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்
(பதிற்றுப்பத்து 42:2-5)
இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,
ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.
அதாவது தையல் போடும் முறை.
------------------------
ஆயுதங்களால் உண்டான காயங்களிலும்
அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும்
உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும்,
புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் (பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்).
இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய்தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த யாக்கையன்
(புறநானூறு 180)
---------------
தீவிர கண்கானிப்பு மனை :-
அதாவது I.C.U போன்றது
தீங்கனி யிரவமொடு மேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.
(புறநானூறு 281)
விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் அறையில் இரவம், வேம்பு ஆகிய இலைகளைச் செருகி,
அறையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி,
நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து,
யாழினால் பல்லிசை இசைத்து,
ஆம்பல் என்னும் குழலை ஊதி,
காஞ்சிப் பண்ணைப் பாடியும் இசையால் மருத்துவம் செய்தனர்.
நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்
நெய்க்கிழி (மருந்தில் முக்கியெடுக்கப்பட்ட துணி) வைத்து கட்டுதல்,
நெய்ப்பந்தர் (மருந்தால் நனைத்து எடுக்கப்பட்ட படுக்கை விரிப்பு) மீது கிடத்தப்படுதல் (முழு உடல் காயம்),
உடலில் புகுந்த எஃகு துண்டுகளை இரும்பு ஆயுதத்தால் கீறி வெளியே எடுத்தல்.
இதை காந்தம் மூலம் செய்யலாம் என்கிறது கம்பராமாயணம்.
அன்று கேகேயன் மகள் கொண்ட வரமெனும் அயில் வேல்
இன்று கருஎன் இதயத்தின் இடைநின்று என்னைக்
கொன்று நீங்காலது அகன்று இப்பொழுது உன்குலப்புண்
மன்றுலாகமங் காந்தமா மணியின்று வாங்க
கைகேயி கேட்ட வரம் தசரதன் நெஞ்சில் குத்திய வேலாக புதைந்திருந்ததாம்
ராமன் தழுவியதும் காந்தம் இழுத்தது போல அது அகன்றுவிட்டதாம்.
வேறொரு இடத்தில் இதே செயலைச் செய்யும் மருந்து 'சல்லியம் அகற்றுவதொன்று' என குறிப்பிடப்படுகிறது.
இதே போல 'படைக் கலன்கள் கிளர்ப்பதொன்றும்' என்று வேறொரு மருந்தையும் குறிப்பிடுகிறார் கம்பர்.
இது போலவே
முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே
(சீவகசிந்தாமணி)
மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது என்பதை அறிந்த மருத்துவர்,
அம்மருந்தை வாயில் (கவளத்தை வைப்பது போல்) வைப்பர்
பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,
காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர்.
-----------------------
பெண் மருத்துவர்:-
இவர்கள் மருத்துவி என்று அழைக்கப்பட்டனர்.
ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணிமேகலை 17, 15)
துறவிகள் இணைந்து நடத்திய 'சக்கர வாளக் கோட்டம்' என்ற மருத்துவமனையைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.
---------------------------
மகப்பேறு அறுவை சிகிச்சை :-
அதாவது சிசேரியன்,
குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே
‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.
--------------------------
வெட்டுண்ட பாகங்களை ஒட்டுதல் :-
இதுவும் கம்பராமாயணத்தில் 'மெய்வரு வகிர்களாகக் கீண்டாலும் பொருத்துவிப்பதொரு மருந்து' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
----------------------
பிணத்தை அறுத்து ஆராய்தல் :-
செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.
அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி உறுப்புகளை எடுத்து அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெரிவிக்கிறது
(செகராசசேகரம் எனும் மருத்துவ நூல்)
----------------------
இறந்த உடலை பதப்படுத்துதல் :-
இறந்துபோன தசரதனது உடம்பை,
கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது.
தைலம் ஆட்டு படலம் (பாடல் 608)
-------------------
நன்றி: Orissa Balasubramani
நன்றி: இலக்கியத்தில் மருத்துவம் _யாழ் இணையம்
நன்றி: அறுவை : அன்றும் இன்றும் _tamilnimidangal
நன்றி: விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம் _எம்.கே.முருகானந்தன்.