Monday 6 August 2018

நோகாமல் தாய்மை

நோகாமல் தாய்மை

பிரசவ அறுவை நடந்த மறுநாள்.
நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை.
குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது.

முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும்.
கண்ணீரைப் பாலெனக் குடிக்கும்.

இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

நான் பார்த்திருக்கிறேன்.

அதுவும் அந்த உயிரின் தந்தையாக.

இப்போது நினைத்தாலும் கண்ணீர் முட்டும்.

நீங்கள் என்னதான் துணிச்சலான ஆள் என்றாலும் "ஆபரேசன் பண்ணாவிட்டால் இருவருக்கும் ஆபத்து" என்று பதறவைப்பார்கள்.

நீங்கள் "செத்தாலும் கேள்வி கேட்கமாடேன்" என்று கையெழுத்து போடுவதைத் தவிர வேறுவழியில்லை அதிலும் இயற்கைக்குப் புறம்பான ஒரு தலைமுறையை வைத்துக்கொண்டு.

பணத்தைக் கொட்டி அழுது தாயையையும் குற்றுயிராக்கி குழந்தையையும் குறைப் பிறப்பாக்கி மெல்ல மெல்ல சீரழிவதைத் தவிர வேறு வழியில்லை.

ஆம்.
தாய்க்கு முதலில் முதுகெலும்பில் மஜ்ஜையில் இரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் ஒரு மருந்தைச் செலுத்துவர்.
இதற்குப் பிறகு அந்தப் பெண் 'குறுக்கு விளங்காதவள்' ஆகிவிடுவாள்.

வாழ்நாள் முழுவதும் அவளால் 10 நிமிடம் தொடர்ச்சியாக நேராக நிற்கவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாது.

குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மெய்யான அமுதமான சீம்பால் சிசேரியனில் பிறந்த அந்த குறைபிறப்புக்கு கொடுத்துவைக்காது.

பின்னே! அது ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டு போனால்,
அலோபதி மருத்துவன் எப்படி 8×8 சதுர அடி க்ளினிக்கில் தொழில் தொடங்கி பத்தே ஆண்டுகளில் கோடி பெறுமானமுள்ள மருத்துவமனை கட்டமுடியும்?!

  தாய்ப்பால் வராமைக்கு உடல் காரணமல்ல.
மயக்க ஊசி போட்டு அல்லது மரத்துபோக வைத்து வயிற்றின் பல அடுக்குகளைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பார்கள்.
அறுந்த அடுக்குகள் இயற்கையாக பழையபடி ஒன்றுசேராது.
காலம் முழுவதும் அவள் பெருத்த வயிற்றில் தழும்போடுதான் அலையவேண்டும்.

இதிலே எங்கிருந்து காமம் பிறப்பது அடுத்த குழந்தை பெறுவது...?!

சுகப்பிரசவம் என்றால் மட்டும் சும்மா விடுவார்களா?!
குழந்தை வெளிவரும்போது  பிறப்புறுப்பை வெட்டிவிடுவார்கள்.
அதன் பிறகு இறுக்கமற்ற கலவிதான்.
நெருக்கமற்ற வாழ்க்கைதான்.
படிதாண்ட தேவைதான்.

எங்கே விட்டேன்....?

ஆம். அறுத்த பிறகு...

அறுந்துகிடக்கும் உடல் விழிக்கும்போது அதற்கு ஒன்றும் புரியாது.
தான் சீராட்டி வளர்த்த கரு எங்கே போனது...?!
எப்படி இவ்வளவு பெரிய காயம்?!

தூசியைவிட சிறிய விந்தணுவையும் அண்ட அணுவையும் சேர்த்து இரத்தம் கொடுத்து தசை கொடுத்து வெப்பம் கொடுத்து உணவு கொடுத்து எலும்பு கண் இதயம் என என்னென்னவோ பொருத்தி ஒரு ஆறறிவு உயிராக உருவாக்கத் தெரிந்த அறிவுள்ள பெண்ணுடலுக்கு,
நமது நவீன, மிகமுன்னேறிய, அதிமுற்போக்கு, வெகுதொலைநோக்கு, அலோபதி அறுவைக் கத்தி மருத்துவத்தைப் புரிந்த கொள்ள அறிவு போதவில்லையப்பா..!

2,3 நாட்களுக்குப் பிறகுதான் உடலுக்குப் புரியும் அதன் கரு உயிருடன் பாலுக்கு ஏங்குவது.

மெல்ல மெல்ல தாய்க்கு பால் ஊறத் தொடங்கும்.
கரைத்த மாவை முகம் சுளித்து குடித்துவந்த குழந்தை இப்போது தாய்ப்பாலைச் சுவைக்கும்.
உண்ட மயக்கத்தில் இதழ்கூட்டி சிரிக்கும்.

'இப்போதுதான் நிம்மதி' என்று அயரும் முன் வற்றத் தொடங்கும் அந்த முலைகள்.

6 மாதத்திற்கு பிறகு பால் அறவே இருக்காது.
பால் சுரக்க மருந்து குடிக்க சொல்வார்கள்.
நீர்த்த பால் வரத் தொடங்கி பின் அதுவும் நின்று வற்றிய விளைநிலமாக இருந்த மார்பு இப்போது பாலைவனமாகிவிடும்.

சுகப்பிரசவமான பெண்களுக்குமே பால் வராதபடி செய்துவிடுவார்கள்.

இனி வரும் காலத்தில் குழந்தை பெற்றவளுக்கு பால் வந்தால்தான் அதிசயம்!

பிறகென்ன மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு  அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியதுதான்.

குழந்தை உண்டாகும்போது ஆற்றலுக்கென சர்க்கரை ஏறும்,
குழந்தை உடல் உருவாக இரத்த அளவு குறையும்.

உடனே சுகர் ஏறிவிட்டது. அனீமியா வந்துவிட்டது என மருந்து மாத்திரை கொடுத்து இல்லாத நோயை புகுத்துவோரும் உண்டு.
"ப்ரெக்ணன்ட் ஆனதுல இருந்து சுகர் வந்துருச்சு" என்போர் இன்று கணிசம்.

யாரோ ஹீலர் பாஸ்கராம்.
"உன் குழந்தையை நீயே பெறு" என்றாராம்.

"என்ன அநியாயம்!" என்று பிடித்து உள்ளேவைத்துவிட்டார்கள் உடலுறுப்பு வியாபாரிகள்.

சிட்டி ரோபோ பழங்கால முறையை பின்பற்றி பிரசவம் பார்த்தால் கைதட்டுவோம்.

வேக்குவம் கிளினரால் குழந்தையை வெளியே இழுத்தால் கைதட்டுவோம்!

அதையே நிஜத்தில் செய்தால் தூக்கி உள்ளே வைப்போமா?!

மருத்துமனையில் மரணமே நிகழ்ந்தது இல்லையா?!

சிறுவனான தன் மகனை விட்டு ஆபரேசன் செய்து விளையாடிய டாக்டரை என்ன செய்தார்கள்?!

கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் அடித்த கொள்ளை பற்றி படங்கள் வந்ததில்லையா?

ஆஸ்பத்திரிக்கு உள்ளே என்ன நடக்கிறதென்று தெரியாமல் முதலமைச்சரையே பூட்டிவைத்த வரலாறு அறியோமா?!

நான் கேட்கிறேன் உலகில் உள்ள கோடானு கோடி உயிரினங்கள் பிள்ளைபெறுவது மருத்துவமனையில்தானா?

டிஸ்கவரியில் கூட காட்டுகிறார்களே?!
தன்னந்தனியாகத் தானே குட்டிகளை ஈன்ற பெண்சிறுத்தை உடனே வேட்டைக்குப் போய்விட்டு வருகிறதே?!

8 மாத கர்ப்பத்தோடு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய ஆப்பிரிக்கப் பெண்மணி பற்றி செய்தி வந்ததே!?

தாய்மை என்ன சுமையா?!

உலகத்திலேயே மிக மிக சோம்பேறித்தனமாக குறைந்த வலியுடன் பலரது உதவியுடன் நோகாமல் எளிமையாக தாய்மையை அடைவது மனித இனம்.
நான் சொல்வது 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை.

இப்போது பெண்கள் குனிந்து நிமிராமல் வலியேயில்லாமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு அடைவதற்குப் பெயர் தாய்மையல்ல.

சிசேரியன் செய்த எவளும் தாயில்லை!

குறுக்குவழியில் பதவியுயர்வு அடைந்த குற்றவாளி!

பயந்தாங்கொள்ளி! சுயநலவாதி! நோயாளி!

இதைச் செய்யும் மருத்துவர் இயற்கைக் கொலையாளி!

நாமோ கடவுளாகப் பார்க்கிறோம்.
தாயையும் சேயையும் காத்த கடவுள் என்று கும்பிடுகிறோம்.

அவர்கள் ஆபத்து என்றால்தான் கத்தி வைப்பார்களாம்!
அதெப்படி நல்ல நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து பலருக்கு அந்த 'ஆபத்து' வருகிறது?!

அதெப்படி 10% கூட இல்லாத 'பிரசவத்தில் அறுவையின் சதவீதம்' பத்தே ஆண்டுகளில் 37% ஆனது?!

கத்தி வைத்திருந்தால் கிழித்துவிடுவார்களா?!

சவரக்கத்தி வைத்திருக்கும் நாவிதரின் மனைவிதான் ஊருக்கு மருத்துவச்சி.
அவள் கிழித்துதான் பிரசவம் பார்த்தாளா?!
அவர்கள் காலத்தில் 37% பிரசவ இறப்பு நடந்ததா?!

இன்று அவர்கள் எங்கே?!

அலோபதி டாக்டர் சாக்கடையில் போடும் தொப்புள்கொடியை
இன்று பத்திரமாக சேமித்துவைக்கும் மேற்குலகம் "ஸ்டெம் செல்" மருத்துவம் என்ற பெயரில் ஏதோ அவர்கள்தான் முதலில் கண்டறிந்தது போல பீற்றிக்கொள்கிறார்களே?!

குறவர் செய்து தரும் தொப்புள்கொடி தாயத்தின் அருமையை இன்றுவரை நாம் அறிந்து நடந்தோமா?!

முதலில் கருத்தரிப்பது என்ன நோயா?
நோயில்லை என்றால் மருத்துவமனை ஏன் போகவேண்டும்?!

ஏன் "பேஷண்ட்" ஆகவேண்டும்?!

பிரசவத்தில் அதிக வலியைக் கட்டுப்படுத்தவும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் இயற்கையான வழியைத் தேடிக்கொண்டு
ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரின் அல்லது ஆலோசகரின் கண்கானிப்பில் வீட்டிலேயே பிரசவம் நடக்கவேண்டும்.

கல்லூரி பட்டப் படிப்பில் இதற்கான பயிற்சியும் வழங்கப்படவேண்டும்.

இல்லை. கார்ப்பரேட் டாக்டர்தான் கடவுள்.
அதுவே வேதவாக்கு என்ற போக்கு தொடர்ந்தால்.....

"சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றோர்" கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

(04.08.2018 அன்று இரவு 10:01 நேரத்தில் முகநூலில் இட்டது)

No comments:

Post a Comment