Showing posts with label பழம்பெருமை. Show all posts
Showing posts with label பழம்பெருமை. Show all posts

Tuesday, 21 June 2016

சிந்துசமவெளி முருகன்

Indus vally civilization and
Tamil god murugan
சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட முருகன் உருவம் பதித்த நாணயம்
http://en.m.wikipedia.org/wiki/Murugan

(6 ஏப்ரல் 2013)

Wednesday, 10 February 2016

பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்

பழந்தமிழன் செய்த அறுவை சிகிச்சைகள்
÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷%÷
தமிழ் இலக்கியத்தில் ஏராளமான மருத்துவ முறைகளும் அறிவுரைகளும் கொட்டிக்கிடக்கின்றன.
மருந்துக் குறிப்புகளோ கணக்கிலடங்காதவை

வியப்பில் ஆழ்த்துபவற்றை இங்கே காண்போம்

மூளை அறுவை சிகிச்சை :-

ஒருவரது மூக்கு வழியே சென்ற சிறிய தேரை (கல்லுக்குள் வாழும் தவளை வகை) மூளைக்கு போய்விட்டது.

பத்தாண்டு கழித்து அறுவை சிகிச்சை மண்டை ஓட்டைத் திறந்தபோது அந்த தேரை பெரிதாக வளர்ந்து மூளையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு இருந்தது.

ஒரு மண்பாண்டத்தில் தண்ணீரைக் கொண்டுவந்து காட்டினர்,
உடனே தேரை மூளையை விட்டுவிட்டு நீரில் தாவியதாம்.

இது அகத்தியர் தன் சீடர் பொன்னரங்கன் மூலம் செய்வித்தது

பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
புகழான தேரையர் முனிவர் தாமும் சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்திரம்
சாற்றினார் தேரையார்தாம் சாற்றினாரே
சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
போற்றியே என்சீடா பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே
(அகத்தியர் -86)
(போகர் ஏழாயிரம்)

தமிழர்களின் நாகரீகமான சிந்துசமவெளி நாகரீக காலத்தைய மண்டையோடு இராஜஸ்தானில் காலிபங்கா (kalibangan) என்ற இடத்தில் கிடைத்துள்ளது இதற்கு சான்றாக உள்ளது.

தமிழகத்தில் மதுரை அருகே கோவலன் பொட்டலில் கிடைத்துள்ள துளையிடப்பட்ட மண்டையோடு மேலும் ஒரு சான்று.

----------------------------
கட்டி அறுவை சிகிச்சை :-

உடலிடைத் தோன்றிற்று ஒன்றை
அறுத்து அதன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறோர்
மருந்தினால் துயரம் தீர்ப்பர்
(கம்பராமாயணம் -7417)

அதாவது கட்டியை அறுத்து
அதனுள் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி
நெருப்பில் வாட்டி கிருமிகளைக் கொன்று
மருந்து வைத்தல்

இதைத்தான் குலசேகர ஆழ்வார் பாடுகிறார்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாக் காதல் நோயாளன்போல் மாயத்தால்
மீளாத்துயர் தரினும் வித்துவக்கோட் டம்மானேநீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே

அதாவது, வாளால் வெட்டி தீயால் வாட்டினாலும் மருத்துவனை நோயாளி வெறுக்கமாட்டான்
அதுபோல துயர்களைத் தரும் உன்னை நான் வெறுக்கமாட்டேன் என்கிறார்.
--------------------------------
பஞ்சு கட்டு :-

செருவா யுழக்கி குருதி யோட்டி
கதுவாய் போகிய துதிவா யெஃகமொடு
பஞ்சியும் களையாப் புண்ணர்”
(புறநானூறு 353)

அதாவது, பஞ்சு வைத்து கட்டிய புண் ஆறும் முன்பே மறுபடியும் போர்க்களத்திற்கு வந்து பஞ்சுக் கட்டுடனேயே வாளேந்தி போர் புரிந்த வீரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
------------------------------
தையல் :-

மீன்தேர் கொட்பிற் பனிக்கயம் மூழ்கிச்
சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளூசி
நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்
அம்புசேர் உடம்பினர்
(பதிற்றுப்பத்து 42:2-5)

இதில் தண்ணீருக்குள் இருக்கிற மீனைக் கொத்தி உண்பதற்காக நீரில் பாய்ந்து, அடுத்த நொடியிலேயே நீரைவிட்டு மேலே பறந்து வருகிற சிரல் பறவையைப் போல,
ஒரு பெரிய ஊசி புண்ணுக்குள்ள நுழைந்து வெளியே வருதாம்.
அதாவது தையல் போடும் முறை.
------------------------
ஆயுதங்களால் உண்டான காயங்களிலும்
அறுவை சிகிச்சை நடத்த இடத்திலும்
உலோக நஞ்சை முறிக்கும் மருந்தாகவும்,
புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலைக்கே மாறவும் அத்திப் பால் பயன் படுத்தினர் (பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்).

இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய்தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
வடுவின்று வடிந்த யாக்கையன்
(புறநானூறு 180)
---------------

தீவிர கண்கானிப்பு மனை :-

அதாவது I.C.U போன்றது

தீங்கனி யிரவமொடு மேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.
(புறநானூறு 281)

விழுப்புண் கொண்ட போர்வீரன் கிடத்தப் பட்டிருக்கும் அறையில் இரவம், வேம்பு ஆகிய இலைகளைச் செருகி,
அறையெங்கும் வெண்ணிறங் கொண்ட சிறுகடுகைத் தூவி,
நறுமணம் கமழும் நறும்புகை புகைத்து,
யாழினால் பல்லிசை இசைத்து,
ஆம்பல் என்னும் குழலை ஊதி,
காஞ்சிப் பண்ணைப் பாடியும் இசையால் மருத்துவம் செய்தனர்.

நெய்க்கிழி வைக்கப் பட்டார் நெய்ப் பந்தர் கிடத்தப் பட்டார்
புக்குழி யெஃக நாடி யிரும்பினாற் போழப் பட்டார்

நெய்க்கிழி (மருந்தில் முக்கியெடுக்கப்பட்ட துணி) வைத்து கட்டுதல்,
நெய்ப்பந்தர் (மருந்தால் நனைத்து எடுக்கப்பட்ட படுக்கை விரிப்பு) மீது கிடத்தப்படுதல் (முழு உடல் காயம்),
உடலில் புகுந்த எஃகு துண்டுகளை இரும்பு ஆயுதத்தால் கீறி  வெளியே எடுத்தல்.

இதை காந்தம் மூலம் செய்யலாம் என்கிறது கம்பராமாயணம்.

அன்று கேகேயன் மகள் கொண்ட வரமெனும் அயில் வேல்
இன்று கருஎன் இதயத்தின் இடைநின்று என்னைக்
கொன்று நீங்காலது அகன்று இப்பொழுது உன்குலப்புண்
மன்றுலாகமங் காந்தமா மணியின்று வாங்க

கைகேயி கேட்ட வரம் தசரதன் நெஞ்சில் குத்திய வேலாக புதைந்திருந்ததாம்
ராமன் தழுவியதும் காந்தம் இழுத்தது போல அது அகன்றுவிட்டதாம்.
வேறொரு இடத்தில் இதே செயலைச் செய்யும் மருந்து 'சல்லியம் அகற்றுவதொன்று' என குறிப்பிடப்படுகிறது.
இதே போல 'படைக் கலன்கள் கிளர்ப்பதொன்றும்' என்று வேறொரு மருந்தையும் குறிப்பிடுகிறார் கம்பர்.

இது போலவே

முதுமரப் பொந்து போல முழுமெய்யும் புண்க ளுற்றார்க்கு
இதுமருந் தென்ன நல்லார் இழுதுசேர் கவளம் வைத்துப்
பதுமுகன் பரமை மார்பில் நெய்க்கிழி பயிலச் சேர்த்தி
நுதிமயிர்த் துகிற்குப் பாயம் புகுகென நூக்கி னானே
(சீவகசிந்தாமணி)

மரப்பொந்துபோல உடல் முழுவதும் ஏற்பட்ட புண்களுக்கு ஏற்ற மருந்து எது என்பதை அறிந்த மருத்துவர்,
அம்மருந்தை வாயில் (கவளத்தை வைப்பது போல்) வைப்பர்
பின்னர் எலி மயிரால் நெய்யப்பட்ட ஆடையால் போர்த்தி,
காற்றுப் புகாதவாறு பாதுகாப்பர்.
-----------------------
பெண் மருத்துவர்:-

இவர்கள் மருத்துவி என்று அழைக்கப்பட்டனர்.

ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணிமேகலை 17, 15)

துறவிகள் இணைந்து நடத்திய 'சக்கர வாளக் கோட்டம்' என்ற மருத்துவமனையைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது.

---------------------------
மகப்பேறு அறுவை சிகிச்சை :-

அதாவது சிசேரியன்,

குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொடுநல்
இறைமகளார் மகவீனப் பொறாது உடல் ஏங்க வகிர்
துறைவழி ஏற்று மகிழ்வூட்டும் அங்கலை தோன்றி வளர்
மறைவழி நேர் நறையூர் நாடுசூழ் கொங்கு மண்டலமே

‘கொங்கு மண்டல சதகம்’ என்ற சிற்றிலக்கியத்தில் காந்தபுரம் என்ற ஒரு பகுதியை ஆண்ட வேந்தனின் மகள் பிள்ளையைப் பெற்றெடுக்க முடியாமல் பிரசவ வேதனையால் துன்பப்படுகிறாள்.
அப்பெண்ணின் வயிற்றைக் கிழித்துத் தன் திறமையால் குழந்தையை வெளியில் எடுத்தாளாம் கொங்கு நாட்டைச் செர்ந்த நறையூரில் வாழ்ந்த மருத்துவச்சி ஒருவர்.
--------------------------
வெட்டுண்ட பாகங்களை ஒட்டுதல் :-
இதுவும் கம்பராமாயணத்தில் 'மெய்வரு வகிர்களாகக் கீண்டாலும் பொருத்துவிப்பதொரு மருந்து' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
----------------------
பிணத்தை அறுத்து ஆராய்தல் :-

செயம் பெறு சிங்கைநாடன் செகராசசேகரன் மா
லுயர்ந்தவாள் வடக்கார முருட்டிய களத்தின் மீதே
அயஞ் சிறிதுளதீர வளந்தளந தறிந்த தாமே.

அதாவது போர்க்களத்தில் செகராசசேகரனால் (1400களில் இலங்கையை ஆண்ட தமிழ்மன்னன்)
வெட்டிவீழ்த்தப்பட்ட வடக்கு அரசர்களின் உடல்களைக் கீறி உறுப்புகளை எடுத்து அளந்து அளந்து ஐயமின்றின் கற்றார்கள் என இப்பாடல் தெரிவிக்கிறது
(செகராசசேகரம் எனும் மருத்துவ நூல்)
----------------------
இறந்த உடலை பதப்படுத்துதல் :-

இறந்துபோன தசரதனது உடம்பை,
கேகய நாட்டுக்குச்சென்றுள்ள பரத சத்துருக்கனர் வந்து ஈமக்கடன் செய்யும் வரை கெடாமல் இருப்பதற்காகத் தைலத்தில் இட்டு வைத்ததைக் கூறுகிறது.
தைலம் ஆட்டு படலம் (பாடல் 608)
-------------------
நன்றி: Orissa Balasubramani
நன்றி: இலக்கியத்தில் மருத்துவம் _யாழ் இணையம்
நன்றி: அறுவை : அன்றும் இன்றும் _tamilnimidangal
நன்றி: விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம் _எம்.கே.முருகானந்தன்.

Friday, 29 January 2016

தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்

தமிழின் பழமை குறித்து திரு.முத்துராமலிங்கனார்
/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/=/

‘மொகஞ்சதாரோ’ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும்,
பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.
அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.
அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது.
இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும்.

1949 பிப்ரவரி 13-ம் வெளியான 'ஃபார்வேர்டு பிளாக் கட்சி'யின் இதழான 'கண்ணகி'யில்
*இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ்*
என்ற தலைப்பில்
திரு.முத்துராமலிங்கத்தேவர்
எழுதிய கட்டுரையிலிருந்து.

நன்றி: பெருமாள் தேவன் அவர்களின் வலைப்பூ.

Saturday, 28 November 2015

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

குமரிக்கண்டத்து மன்னனின் சாதனைகள்

தமிழ் மன்னர்களிலேயே மிகவும் பழமையான மன்னன் 'நெடியோன்' என்பவனாவான்.
இவனே "நிலந்தரு திருவிற்பாண்டியன்' என்றும் அழைக்கப்படுகிறான்.

இவன் வியப்பில் ஆழ்த்தும் பெரிய பெரிய சாதனைகள் செய்துள்ளான்.

இவன் இன்று கடலடியில்  உறங்கிங்கொண்டிருக்கும் நமது 'குமரிக்கண்டத்தில்' ஓடிய 'பஃறுளி' ஆற்றின் கரையில் அமைந்த பழைய 'மதுரை'யை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளான்.

“செந்நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கீர்த்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப்பக்றுளி மணல்” (புறம் 9)

பஃறுளி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இவன் 'முந்நீர் விழவு' எனப்படும் பெரிய விழா ஒன்றை நடத்தியுள்ளான்.
இந்த விழா இன்னதென்று தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் நீர் தொடர்பான போட்டி என்று கூறமுடியும்.
கடலில் விடும் நவாய் (அல்லது கப்பல்) போட்டியாக இருக்கலாம்.

இவன் காலத்திலேயே குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டது,

“பக்றுளியாற்றுடன் பனிமலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசையாண்ட தென்னவன்”
என்று சிலப்பதிகாரம் கூறுவது இவனைத்தான்.

பல மலைகளையும் பஃறுளியாற்றையும் கொண்ட குமரிக்கோடு கடலால் விழுங்கப்பட்டது.
அதை இணைசெய்ய இமயத்தையும் கங்கையும் இவன் தனதாக்கிக் கொண்டது தெரிகிறது.

அதாவது குமரிக்கண்ட பேரழிவிலிருந்து தப்பித்து தன் மக்களையும் காத்துள்ளான் இந்த பேரரசன்.

ஏற்கனவே குமரிக்கண்ட மக்களுக்கு கப்பல்கள் பற்றிய அறிவு இருந்ததுள்ளது.
குமரிக்கண்டத்தைக் கடல் திடீரென்று ஒரேடியாக விழுங்கவில்லை என்று கூறலாம்.
அதனாலேயே அவர்கள் தப்பிக்கமுடிந்தது.

இவன் தப்பித்துவந்த மக்களைக் குடியமர்த்த இரண்டு பெரிய அரசர்களையும் பல வேளிர்களையும் போரிட்டு வென்று இமயம் வரைக் கைப்பற்றியுள்ளான்.
வளமான நிலப்பரப்பை மக்களுக்குக் கிடைக்கச் செய்தனாலேயே இவன் 'நிலந்தரு' பாண்டியன் எனப்பட்டான்.

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது,
அவரைச் செரு வென்றும்,
இலங்கு அருவிய வரை நீந்தி,
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்,
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்,
நிலம் தந்த பேர் உதவி,
பொலந் தார் மார்பின்,
நெடியோன் உம்பல்
(மதுரைக்காஞ்சி 55)

எனில் தமிழர்கள் வந்தேறிகளா?

இல்லை. இமயம் வரைக்கும் அந்நாளில் ஒரே மொழி (தமிழ்) பேசப்பட்டது.
“தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத் தோன்று மொழிந்து தொழில் கேட்ப”
என்று அதே மதுரைக்காஞ்சி கூறுகிறது.

இம்மன்னன் பழைய நூல்கள் அழிந்துவிட்டதால், இலக்கியத்தை மீட்டுருவாக்க இடைக் கழகம் (இரண்டாம் தமிழ்ச் சங்கம்) நிறுவி 'தொல்காப்பியம்' எழுதச் செய்துள்ளான்.
இவனது அவையில் புலவராக இருந்த அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் இலக்கணநூலான தொல்காப்பியத்தை அரங்கேற்றினார்.
இவ்விலக்கணத்தின் படி நூல்கள் இயற்றப்பட வரையறை செய்யப்பட்டது.

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து
(பனம்பாரனார் சிறப்புப் பாயிரம்)

இதோடு நில்லாமல் குடியமர்ந்தோருக்கு உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய கடல் கடந்து சென்று சாவகநாட்டின் (தற்போதைய இந்தோனேசியா) நெல்வளமிக்க ஒரு ஊரைக் (சாலியூர்) கைப்பற்றியுள்ளான்.

புதிதாக வயல்வெளிகள் ஏற்படுத்தி அதற்கான விதைநெல் கொண்டுவர இவ்வாறு செய்திருக்கலாம்.
நெல் இறக்குமதி செய்ய தன் புதிய நாட்டிடம் பொருளாதாரம் இல்லாமையால் படையெடுத்து சென்று அந்த பகுதியை பிடித்திருக்கலாம்.

நெடுங்கொடிமிசை இதை எடுத்து, இன்னிசைய முரசம் முழங்க,
பொன் மலிந்த விழுப்பண்டம்,
நாடு ஆர நன்கு இழிதரும்,
ஆடு இயல் பெருநாவாய்,
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கை,
தெண்கடல் குண்டகழிச்,
சீர்சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ
(மதுரைக்காஞ்சி 79-89)

என்று 'தலையாலக்காலத்துச் செருவென்ற பாண்டியனை' புகழும் மதுரைக்காஞ்சியில் பாண்டியரின் சிறப்புகளான கூறுவனவற்றில் பாண்டியர் கடல் வலிமையும் நெல் செழித்த ஊரையும் பற்றிக் கூறுகிறது.

ஆக பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை இடம், கல்வி, உணவு ஆகியன கொடுத்து அப்பேரழிவினால் ஏற்பட்ட இழப்பை முடிந்த அளவு ஈடுகட்டியுள்ளான் இத்தமிழ் மன்னன்.

விரிவாக
amuthamvaralaru.blogspot.com/2014/07/4.html?m=1

Monday, 5 October 2015

ஒருலட்சம் ஆண்டுகள் பழமை

ஒரு லட்சம் ஆண்டு பழமை

சென்னை அருகே ஒரு நூறாயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பழைய கற்கால மாந்தர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் குடியம் (கூடியம் என்றும் கூறுகிறார்கள்) சிற்றூரிலிருந்து 4.கி.மீ தொலைவில் உள்ள இரண்டு குகைகள் நூறாயிரம் (1,00,000)ஆண்டுகள் பழமையானது என்றால் நம்பமுடிகிறதா?
நுழையமுடியாத அளவு இன்னும் 16குகைகள் உள்ளனவாம்.
இந்த இரண்டு குகைகளுக்கும் செல்ல ஒற்றையடிப் பாதையில் நடந்துதான் செல்லவேண்டும்.
மாணிச்சம்மன் கோவில் என்ற ஒரு சிறிய கோவில் உள்ளது.
அதனால் குடியம் மக்கள் அவ்வப்போது போய்வருகிறார்கள்.

இதை முதன்முதலில் கண்டறிந்தவர் வழக்கம்போல ஒரு பிரிட்டிஷ்காரர் ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote) என்பவர்.
1863ல் கண்டறிந்தாராம்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபுட் தனது வாழ்நாள் முழுதும் சேகரித்த தொல்லியல் தடய பொருட்களின் எண்ணிக்கையானது இந்தியாவில் இருந்து 4135,
இலங்கையில் இருந்து 128 ஆகும்.

இவை அனைத்தையும் 1904 -ல் சென்னை அருங்க்காட்சி ( Chennai Museum) வசம் ஒப்படைத்துள்ளார்.
இவை அனைத்தும் பல ஆண்டுகளாக பூட்டி வைக்க பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் நடபெற்று வந்தாலும், 1965க்குப் பிறகு இப்படி ஒரு குகை இருந்தது என்பதையே தமிழக அரசு மறந்துவிட்டது.
நன்றாக புதர்மண்டிய பிறகு இதை புலிக்குன்றம் 'பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி' வேறு ஆக்கிவிட்டார்கள்.

இந்தநிலையில் இது பற்றி கேள்விப்பட்ட தகவல் தொழில்நுட்பத் (I.T)துறையில் இருக்கும் திரு.ரமேஷ் யந்த்ரா என்பவர் விக்கிபீடியாவில் தேடிப்பார்த்துள்ளார்.
எதுவுமே கிடைக்கவில்லை.
இப்படி ஒரு பெருமை உலகிற்கு தெரியாமல் உள்ளது என்பது அவரால் தாங்கமுடியவில்லை.

தானே இதை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டுவது என்று முடிவுக்கு வந்தார்.
தனது நண்பரான திரு.வசந்தகுமார் என்பவரை சேர்த்துக்கொண்டார்.

இதை சாதிக்க அத்தனை எளிதாக விட்டுவிடுவார்களா அரசு அதிகாரிகள்?
முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
ஒருமுறை இசைவு (அனுமதி)கொடுத்துவரச் சொல்லி எல்லாம் ஆயத்த(தயார்) நிலையில் இருக்கும்போது இசைவு இல்லை என்று திரும்பிப்போகச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி பல அரசு அதிகாரிகளின் அசட்டைப் போக்கையும் மீறி,
தானே பொருள் செலவு செய்து,
நேரத்தை கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்து,
அலைந்து திரிந்து,
பல தமிழார்வலர்களிடம் உதவி கேட்டு,
மூன்றாண்டுகள் படாதபாடு பட்டு தனி ஒருவனாக ஒரு தரமான ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார்.

‘Gudiyam Caves: Stone age rock shelter of South India'
எனும் இவரின் ஆவணப்படம், கடந்த மே மாதம் (பிரான்சில்)நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும் பெற்றுள்ளது.

"வந்தேறிகளின் தேசமாக பல நாடுகள் இருக்கின்றன.
தொடர்ச்சியாக மனித குலம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரதேசங்கள் இந்த பூமியில் மிகக் குறைவு.
அவற்றில் தமிழகமும் ஒன்று.
கற்காலத்திலிருந்து மனிதன் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழும் மண் இது என்பதை அடித்துச் சொல்கிறது குடியம் குகை!’’
- ரமேஷ் யந்திரா.
(குங்குமத்திற்கு அளித்த பேட்டியில்)

https://ta.m.wikipedia.org/wiki/குடியம்_குகை
http://gudiyamcaves.rameshyanthra.com/
www.rameshyanthra.com

நிஜம் நிகழ்ச்சியில்
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=Vsm-yYIYGk8

2014ல் இங்கே மக்களைக் கூட்டிச்சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ்,
மக்கள் வந்து பார்த்து செல்ல இப்பகுதி சுற்றுலாத் தலமாக ஆக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்று கூறினார்.

ஒரு மண்ணாக்கட்டியும் நடக்கவில்லை
www.dinamani.com/tamilnadu/2015/09/25/அறிவித்து-ஓராண்டு-ஆகியும்-ச/article3045921.ece

மறுபடியும் புதர்மண்டிப் போகுமோ?????