Friday, 9 January 2026
சிவகார்த்திகேயன் தெலுங்கர் தான்
Monday, 6 October 2025
நெரிசல் மரணங்கள் நெஞ்சில் எழும் கேள்விகள்
Sunday, 5 October 2025
ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்
Sunday, 27 October 2024
ரசிக மனப்பான்மை
Tuesday, 8 October 2024
விஜய் தெலுங்குபதி
Friday, 25 January 2019
தேசிங்கு ராஜேந்தர் தெலுங்கு பேட்டி
தேசிங்கு ராஜேந்தர் தெலுங்கு பேட்டி
இதில் சரளமாகத் தெலுங்கு பேசும் டி.ராஜேந்தர் தனது அரசியல் குரு மற்றும் திரைத்துறை குரு என்று குறிப்பிடுவது ஒரு தெலுங்கர்களை.
அவரது மனைவி நாயுடுபேட்டையில் பிறந்த தெலுங்கர் என்றும் கூறுகிறார்.
இன்னமும் தனது மனைவி வழி உறவினர் பலரும் ஆந்திரா முழுக்க இருப்பதாகக் கூறுகிறார்.
(தமிழர்கள் இதைக் காண நேரிட்டால் அவர்களைச் சமாளிக்க தன் தாய்மொழி தமிழ் என்று கூறுகிறார்)
1984 லேயே தனது 'பிரேம சாகரம்' (உயிருள்ளவரை உஷா) படத்தில் தொடங்கி தனது மகன் சிம்பு நடித்த வல்லபா(வல்லவன்) மன்மதா(மன்மதன்) வரை டப்பிங் செய்து தெலுங்கில் வெளியிட்டு அதற்கு தெலுங்கு மக்கள் அளித்த உறுதியான ஆதரவை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.
தெலுங்கு வந்தேறிகளின் தலைவன் பாதுகாவலன் கருணாநிதி தன் மீது காட்டிய பாசத்தையும் அளித்த பதவிகளையும் நினைவு கூறுகிறார்.
நான் ஏற்கனவே கூறியபடி டி.ராஜேந்தர் ஒரு பொட்டுகட்டி தெலுங்கர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.
சிம்பு முழுத் தெலுங்கர் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாக ஆகிவிட்டது.
முழு காணொளி : Exclusive Interview - Simbu's Father T.Rajendar || Sakshi Saradaga Kasepu - யூட்யூப்
https://m.facebook.com/story.php?story_fbid=1537590149677966&id=100002809860739
Saturday, 24 March 2018
உனக்குள் இருக்கும் நாயகன் எங்கே?
உனக்குள் இருக்கும் நாயகன் எங்கே?
எத்தனையோ தலைவர்கள், தியாகிகள், சாதனையாளர்கள் இருக்கும்போது
பெருவாரியான இளைஞர்கள் ஏன் ஒரு நடிகனை தனது முன்மாதிரியாக நினைக்கிறார்கள்?
இது இளைஞர்களின் தன்னம்பிக்கை குறைந்துவிட்டதைக் காண்பிக்கிறது.
நான் பல முறை கவனித்துள்ளேன்.
எந்த பணக்காரனும் ரசிகர் மன்றத்தில் இருப்பதில்லை.
சமூகத்தில் மதிக்கத்தகுந்த இடத்தில் இருக்கும் எந்த மனிதனும் நடிகனுக்கு கொடி பிடிப்பதில்லை.
நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள்தான் ரசிகர் என்ற அடையாளத்தை ஏற்கிறார்கள்.
இது உலகம் முழுவதுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.
இவர்களுக்கு எல்லாரையும் போல பெரிய பெரிய கனவுகள் லட்சியங்கள் இருக்கும்.
ஆனால் அதை சாதிக்கத் துப்பு இருக்காது.
அதாவது தன் கனவுகளை தன்னால் நிறைவேற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த ஒருவன்
அதை திரையில் போலியாக செய்துகாட்டும் ஒரு பிம்பத்தை பார்த்து திருப்தி அடைகிறான்.
அதன் உருவில் தன்னையே காண்கிறான்.
ஒரு சராசரி இளைஞன் கனவுகள் பெரும்பாலும் என்னவாக இருக்கும்?
தான் அழகாக இருக்க வேண்டும்.
தன்னை பலர் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும்.
தனியாளாக பத்து பேரை அடிக்கவேண்டும்.
உடனடியாக பணக்காரன் ஆகவேண்டும்.
சமூகம் தன்னை கையெடுத்து கும்பிட வேண்டும்.
தன் பின்னால் ஒரு கூட்டம் திரளவேண்டும்.
இப்படியாக பல ஆசைகள் மற்றும் பேராசைகள் இருக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் நிறைவேற்ற அவர்களால் முடியாது.
அதாவது முடியாது என்று அவர்களே முடிவு செய்துகொள்வார்கள்.
திரையில் நடிகர்கள் செய்துகாட்டுவது மேற்கண்ட ஆசைகளைத்தான்.
ஒரு சராசரி இளைஞனின் கனவுகளுக்கு நடிகன் என்பவன் வடிவம் கொடுக்கிறான்.
எவனுக்கு தன்னம்பிக்கை இல்லையோ,
எவன் தன் தகுதிக்கு மேல் கனவு காண்கிறானோ,
எவன் வாழைப்பழ சொம்பேறியோ,
அவனெல்லாம் அந்த நடிகனில் தன்னையே காண்கிறான்.
இதன்மூலம் தனக்குள் இருக்கும் கதாநாயகனை சாகடிக்கிறான்.
தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்வதையும் கைவிடுகிறான்.
எதற்கும் உதவாத கையாலாகதவன் ஆகிறான்.
உள்ளத்தால் ஊனமான ஒருவனை சமூகம் புறக்கணிக்கும்.
இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட தன்னை ஒத்த கையாலாதோருடன் கூட்டு சேர்ந்து தன் கற்பனை உருவத்தையாவது வாழவைக்க முயல்கிறான்.
அதற்கு பால் ஊற்றுகிறான், கொடி பிடிக்கிறான், அவன் படத்துடன் தன் படத்தை ஒட்டி ஃபிளக்ஸ், நோட்டிஸ், கட் அவுட் என வைக்கிறான்.
அவனுக்கு ஓன்றென்றால் தனக்கே ஆனதுபோல பதறுகிறான்.
இது ஒரு மனநோய்.
பகுத்தறிவு பலவீனம்.
கற்பனைக்கும் உண்மைக்கும் வேறுபாடு தெரியாத உளவியல் குறைபாடு.
முதிர்ச்சிபெற்றும் அகலாத சிறுபிள்ளைத்தனம்.
இத்தகைய சிந்திக்கத் தெரியாத முட்டாள்களை அதிகப்படியாக உருவாக்குவதுதான் கார்ப்பரேட் கம்பெனிகளினுடைய பெருமுதலாளி வர்க்கத்தின் நோக்கம்.
இதுவே அரசியல்வாதிகளுக்கும் தேவை.
இவ்விருவருக்கும் உதவுவதே ஊடகங்களின் தலைசிறந்த பணி.
ஒரு நடிகன் அவன் எவ்வளவு பெரிய டம்மி பீசாக இருந்தாலும்
அவன் ஏதோ அதிசயபிறவி போலவும் கடவுளின் அவதாரம் போலவும் கட்டமைப்பதே டிவி, பத்திரிக்கை, இணையம் போன்ற ஊடகங்களுக்கு இடப்பட்ட கட்டளை.
இதற்கு சலுகைகளை வாரி வழங்குவது அரசியல்வாதிகளுக்கு இடப்பட்ட கட்டளை.
சினிமா என்றில்லாமல் கிரிக்கெட், மல்யுத்தம், காமிக்ஸ் போன்றவையும் இதன் அடிப்படையிலேயே இயங்குகின்றன.
இவற்றில் வரும் சாதனைகளும் கதாநாயகர்களும் போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்.
பொதுமக்களை எதைச்சொன்னாலும் நம்பும் முட்டாளாக்குவதே இம்மூவருக்கும் இலக்கு.
அதுவே இவர்களுக்கும் லாபம்.
ஏர்செல் ஏமாற்றிவிட்டது சூர்யா சட்டையையா பிடிக்க முடியும்?
நாளைக்கு சாகப்போகும் கே.ஆர்.விஜயா நமக்கு அம்மாவாம்!
எந்த தைரியத்தில் இந்த மொக்கையான நெஞ்சை நக்கும் விளம்பரங்கள் வருகின்றன?
அவ்வளவு கேணையாகவா ஆகிவிட்டோம்?!
சிந்தியுங்கள் மக்களே!
சினிமா ஒரு பொழுதுபோக்கு காட்சி ஊடகம் மட்டுமே!
அதுவும் ஒலி, ஒளியுடன் கூடிய எளிமையான ஊடகம்.
அதுவும் வாழ்க்கைக்கு தேவைதான்.
ஆனால் நடிகனின் அந்தரங்க வாழ்க்கை நமக்கு தேவையில்லாதது.
கனவில் அதிகம் மூழ்கினால் நிஜம் காணமல் போகும்.
கற்பனையே வாழ்க்கையாகிவிடும்.
சினிமா ரசிகர் என்றில்லை பொதுவாகவே ரசிகர்கள் என்போர் மனநோயாளிகள்.
அவர்களைத் திருத்த முயலாதீர்கள்.
மூடநம்பிக்கையில் மூழ்கிய முரட்டு பக்தர்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடில்லை.
இதுவரை இந்த உளவியல் தாக்குதலுக்கு இரையாகாதவர்கள் இனியும் ஊடகங்களின் மூளைச்சலவையில் சிக்காமல் சுயமாக சிந்தித்து போலிகளைப் புறந்தள்ளி உண்மையான நாயகர்களை முன்மாதிரியாகக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கும் இளம் வயதினருக்கும் போலிகளை அடையாளம் காண கற்றுக் கொடுங்கள்.
அடுத்த தலைமுறையாவது தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும்.
Saturday, 17 February 2018
அஞ்சுபைசா மூஞ்சி
அஞ்சுபைசா மூஞ்சி
அவசியமே இல்லாத இடத்தில் சிவகார்த்திகேயன் ஒரு தெலுங்கன் என அண்ணன் சத்யராஜ் அம்பலப்படுத்துவதையும்
அதற்கு சிவகா பதறுவதையும் பாருங்கள்.
இதை ஏன் இப்போது இடுகிறேன் என்றால் வருங்காலத்தில் இவன் கிழடு தட்டி போனபிறகு கறுப்புசட்டையை போட்டுகொண்டு கட்சி ஆரம்பித்து காவிரி பிரச்சனை பற்றி பேட்டி கொடுக்கும் நிலை வரக்கூடாது என்றுதான்.
https://m.facebook.com/story.php?story_fbid=1155698831200435
Koffee with dd
sivakarthikeyan special
சத்யராஜ்: சிவகார்த்திகேயன் தெலுங்கு நல்லா பேசுவார்.
ஹீரோயினோட தாய்மொழி தெலுங்கு.
ஏதோ விஜய் டிவி ப்ரோக்ராம் அதனால தமிழ் பேசுறார் இல்லனா புல்லா தெலுங்குதான்.
Thursday, 19 October 2017
அரசியலும் திரைத்துறையும்
அரசியலும் திரைத்துறையும்
திராவிடத்தின் காலம் முடிந்துவிட்டது.
வெற்றிடம் உருவாகிவிட்டது.
ஹிந்தியர், வடுகர், தமிழர் மூவரும் காய்நகர்த்துவது தொடங்கிவிட்டது.
இது அனைத்து துறைகளிலும் நடக்கிறது.
உலகத் தமிழர்களை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் இரண்டு விடயங்கள் தமிழ்மொழி மற்றும் பிரபாகரன் எனும் பெயர் என்பார் அண்ணன் சீமான்.
மூன்றாவதும் ஒன்று இருக்கிறது.
அதுதான் தமிழ் திரைத்துறை.
இதில் திறமையும் உழைப்பும் பெரும்பாலும் தமிழருடையது.
(அதாவது இயக்கம், வசனம், இசை, தொழில்நுட்பம், சண்டைப் பயிற்சி)
புகழும் பணமும் பெரும்பாலும் வந்தேறிகளுக்கு
(தயாரிப்பு, நடிப்பு, நிதி, வெளியிடல்)
இதிலே வடுகம் முதலில் களமிறக்கிய தெலுங்கர் விஜயகாந்த் புத்தி பேதலித்துவிட்டதால் தோல்வியடைந்தார்.
ஆனாலும் வடுகம் திறமையாக காய்நகர்த்தி அசல் தெலுங்கர் விசாலை தலைமைக்கு உயர்த்தி தமிழ் சினிமாவை ஒழிக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ எல்லாம் செய்கிறது.
தனுஷ், ஜெயம் ரவி போன்ற தெலுங்கர்களை முன்னணிக்கு கொண்டுவந்தது.
நன்கு வளர்ந்துவந்த தமிழர் சந்தானத்தை வீழ்த்தி அந்த இடத்தில் தெலுங்கன் சிவகார்த்திகேயனை கொண்டுவந்தது
அதற்கடுத்து தெலுங்கர் சமுத்திரகனி, கன்னடர் ஹிப்ஹாப் ஆதி, தெலுங்கர் விஜய் சேதுபதி என அடுத்தடுத்த வாரிசுகளை உருவாக்கி வைத்துள்ளது.
(இதில் ஆதி சல்லிக்கட்டு போராட்டத்தில் அம்பலப்பட்டு விட்டார்).
தமிழருக்காக குரல் கொடுத்த சத்யராஜை மன்னிப்பு கோரவைத்தது,
ஒரு நடிகை தண்ணீர் பிச்சை எடுப்பவர்கள் என தமிழரை பேசவைத்தது,
தற்போது மெர்சல் பேனர்களை கிழித்தது என கன்னடர் வெளிப்படையான இனவெறுப்பையும்
தெலுங்கர் மறைமுகமான இனவெறுப்பையும் காட்டிவருகின்றனர்.
ஆந்திரா உடைந்தபோது இறங்கியிருந்த தெலுங்கரின் திமிர் பாகுபலி வந்ததும் மீண்டும் கூடிவிட்டது.
தமிழ்தேசியம் முதல் அடியே பேரடியாக சீமானை களத்தில் இறக்கியது.
இளைய தலைமுறை மத்தியில் அரசியலை கைப்பற்றி வருகிறது.
(இங்கே தமிழர் முருகதாஸ் எடுத்து தமிழர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தை இந்த இடத்தில் குறிப்பிடலாம்)
அமீர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களையும் அவ்வப்போது குரல் கொடுக்க வைத்து கருத்துக் களத்தில் இறக்கியது.
(அதையும் ஒரு தமிழனான ரஞ்சித்தை வைத்தே குழப்பியது ஹிந்தியம்).
பாதி தெலுங்கரான டி.ஆர் மற்றும் அவரது மகன் சிம்பு அவ்வப்போது தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.
மிக மொக்கையாக காய்நகர்த்திய ஹிந்தியம் மராத்தியன் ரஜினியை முன்னிறுத்தியது.
அவன் களத்திலும் இறங்காமல் சும்மாவும் இருக்காமல் பம்மாத்து காட்டிவருகிறான்.
(அவன் குடும்பத்தை ஏற்கனவே வடுகம் வளைத்துவிட்டது).
பிறகு தமிழரான கங்கை அமரனை இறக்கியது.
அதுவும் தோல்வியில் முடிந்தது.
கடைசியாக திராவிடம் கன்னடன் கமலஹாசனை களத்தில் இறக்கியது.
இந்த இடத்தில் திராவிடம் சறுக்கிவிட்டது.
இந்த சரியான நேரத்தில் தற்போது தமிழ்தேசியம் தமிழர்களான அட்லி மற்றும் ரகுமானுடன் அதிரடியாக தமிழரான விஜயை களத்தில் இறக்கியுள்ளது.
விஜய் இதுவரை தமிழர்களுக்காக குறிப்பிடும் அளவில் எதையும் செய்யாதவர் என்றாலும் அடிப்படை தமிழ் உணர்வு உள்ளவர்.
இனத்திற்கு எதிரானவர் கிடையாது.
ஆக தமிழ்தேசியத்தின் திரைப்பட அடையாளமாக உருவெடுக்க அவர் எல்லாவிதத்திலும் பொருத்தமானவர்.
மலையாளி அஜித்தின் போட்டியை மிக அழகாக சமாளித்து ஒரு படி மேலே நிற்பதே விஜயின் வெற்றிக்குக் காரணம்.
அரசியலும் திரைத்துறையும் மிக நெருக்கமானது.
தெலுங்கர் கருணாநிதி, தெலுங்கர் விஜயகாந்த், மலையாளி எம்.ஜி.ஆர், கன்னடர் ஜெயலலிதா என பலர் திரைத்துறையில் அடைந்த புகழ் மூலமாக அரசியலுக்கு வந்தவர்கள்தான்.
விஜய் இந்த முறை ஓரளவு வெற்றிதான் அடையமுடியும்.
தொடர்ந்து தமிழ்தேசிய சிந்தனையை ஒட்டியவாறு பயணித்தால் குறுகிய காலத்தில் தமிழ்த் திரைத்துறையின் உச்சத்தைத் தொடலாம்.
அரசியலில் அவர் நேரடியாக இறங்குவது அவசியமற்றது என்றே கூறுவேன்.
Tuesday, 26 September 2017
விஜய் தெலுங்குபதி
தமிழகத்தை நசுக்கும் மத்திய அரசின் தேசிய விருதை வாங்க மாட்டேன்
- நடிகர் விஜய் தெலுங்கு பதி
பிப்ரவரி 29, 2016 தினகரன் செய்தி
தமிழக தெலுங்கர் யுகாதி விழா
2016-02-29@ 00:26:52
சென்னை: அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பாக ‘தமிழக தெலுங்கர் யுகாதி விழா’ மீனம்பாக்கத்திலுள்ள ஜெயின் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
யுகாதி விழாவிற்கு சம்மேளனத் தலைவர் சிஎம்கே. ரெட்டி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைப்பு செயலாளர் நந்தகோபால், பொருளாளர் அ.சங்கரன், மாநில துணை தலைவர் ஜெஎஸ்கே. சதீஷ்குமார், இளைஞரணி தலைவர் டி.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் 'தமிழகத்தில் முக்கிய பங்களிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன், ராணி மங்கம்மா, ஜி.டி. நாயுடு, ஓமந்தூரார் ஆகியோர் தெலுங்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இவர்கள் தமிழகத்தில் சிறந்து விளங்கினார்கள்.
அதேபோல் இங்கு அமர்ந்திருக்கும் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் சிறந்து விளங்குகிறார்கள்.
யார் எந்த மொழி பேசினாலும், தாய்மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார்.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு, பின்னணி பாடகி பி.சுசிலா, வேல்டெக் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். சகுந்தலா ரங்கராஜன், ஜெயா கல்வி குழுமத்தின் தலைவர் பேராசிரியர் கனகராஜ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
திருமலா திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, உலக தெலுங்கு சம்மேளனத் தலைவர் வி.எல். இந்திரா டெக், அகில பாரத விஷ்வகர்மா மகாசபை நிறுவனர் ராஜமகாலிங்கம், திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
(தகவலுக்கு நன்றி: Asa Sundar)
Friday, 22 September 2017
இப்படி ஒரு அசிங்கம்....
இப்படி ஒரு அசிங்கம்....
இளமையில் ஆடிய ஆட்டம்!
முதுமையில் ஆட்டிப்படைக்கும்!
தாலி கட்டாமல் பெற்ற மகள் அவிழ்த்துப்போட்டு ஆட
வேலி கட்டிவைத்த வைப்பாட்டி கவிழ்த்துவிட்டு ஓட
தள்ளாத வயதில்,
தன் காணசகியா முகத்தில்,
தரித்துக்கொண்டான் அரிதாரம்!
தாங்கமுடியா பரிதாபம்!
வாழ்வாங்கு வாழ்ந்த சூழலில் நின்று,
'வாங்கலியோ புடவை தள்ளுபடியில்' என்று,
கூவி விற்கும் அவலம்!
கூனி நிற்கும் துயரம்!
அரைவேக்காடுகளை அள்ளிவந்து,
அறைகளுக்குள்ளே அடைத்துவைத்து,
நூறுநாட்கள் மேய்க்கிறான்!
ஊரை இவன் ஏய்க்கிறான்!
வாளாவிருப்போர் சந்தை அதிலே,
வாய்ச்சொல்வீரர் சண்டை நடுவே,
பட்டிமன்றமும் நடத்துவான்!
பரபரப்பும் கிளப்புவான்!
பணம் தந்தால் போதும்
பிணங்கூடத் தின்பான்!
கூப்பாடும் போடுவான்!
கூட்டியும் கொடுப்பான்!
கூலிக்கு மாரடிக்கும்
கூத்தாடி மரபினன்!
எவ்வளவோ அறிவு!
எத்தனையோ திறமைகள்!
பிறப்பு, உருவம், சுற்றம்
சிறப்பாய் அமைந்தன எல்லாம்!
ஆயினும் பயனில்லை!
ஆணவம் விடவில்லை!
விரலை மட்டும் ஆட்டியே
வழுக்கை ஒருவன் முந்திவிட்டான்!!
விறைப்பே குறியான இவனோ
ஒழுக்கம் இன்றி பிந்திவிட்டான்!!
கதறவிட்ட எதிரி கட்டையில் போகும்வரை காத்திருந்து,
கவட்டுக்குள் ஒளிந்திருந்த தலை மெல்ல நேரே நிமிர்ந்து,
நாட்டைவிட்டு ஓட இருந்தவன்,
கோட்டையை பிடிப்பேன் என்கிறான்.
கடுகளவு வந்தது துணிச்சல்!
கவிபாடி வரவைக்கிறான் எரிச்சல்!
கிறுக்கல்களில் பம்மி வெளியிட்டான் வந்த அரசியல் ஆசையை!
கிறுக்குப்பயல் கூட நம்பி வரமாட்டான் இந்த முற்றல் ஆண்வேசியை!
தன் துறையில் தனக்கென தனியிடம் இருந்தபோதும்,
தக்க நேரத்தில் ஓய்வுபெற்று தன்மானத்தை காக்காமல்,
உலகமே உமிழும் வடுகர்க்கு கைகூப்பி,
இந்தியமே தமிழும் திராவிடமும் எனக் குழப்பி,
மிச்சமுள்ள புகழையும் பணையம் வைத்து,
எச்சில் எலும்பேனும் கிடைக்குமா என்று அலைகிறான்!
ஊர்பார்க்க உதடுகளை ஏறி மேய்ந்த நாயொன்று,
ஊளையிட்டதே மேடையேறி தலைவன் நானென்று!
முடிவெடுத்தானாம்!
முதல்வராவானாம்!
செருப்பால் அடிபடுவான்! சின்னபின்னமாவான்!
ஏற்கனவே அப்படித்தான் என்றாலும்,
மேற்கொண்டும் படுவான் இனிமேலும்!
செத்தவனுக்கேது நெருப்பைக் கண்டு அச்சம்?!
மானம் கெட்டவனுக்கேது இழிவைக் கண்டு கூச்சம்?!
வீதியில் திரிய வேண்டாமென்றால்
வீட்டில் கிடடா வந்தேறி முண்டமே!
Thursday, 31 August 2017
ஜெயராமின் உருமறைப்பு
உருமறைப்பு
திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்தில் ஓடும் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்...
கேரளா உணவு, பண்டிகை, கலாச்சாரம் ஆகியவற்றை காட்சிகளாகக் காண்பித்து
நடிகர் ஜெயராம் அதை ஒவ்வொன்றாகக் கண்டு 'என் நாட்டின் பண்டிகை பிடிக்கும், உணவு பிடிக்கும், கலாச்சாரம் பிடிக்கும்' என நெஞ்சில் கைவைத்து சொல்கிறார்.
இறுதியாக 'நம் நாட்டு உடை ராம்ராஜ் வேட்டிகள்' என்று முடிக்கிறார்.
ஜெயராம் ஒரு தமிழர்.
ராம்ராஜ் ஒரு தமிழர் நிறுவனம்.
Monday, 13 March 2017
மராத்திய மண்ணின் மகள்
மராத்திய மண்ணின் மகள்
ரஜினிகாந்த் எனும் சிவாஜிராவ் கெய்க்வாட் தான் ஒரு மராத்தியன் என்பதை மறைத்து நாடகமாடினாலும்
முதல் மகளும் அவளது தெலுங்கு கணவன் தனுஸ் என்பவரும் தனது அடையாளத்தை மறைத்தாலும் தமிழ்வேடம் போட்டாலும்
இரண்டாவது மகள் சௌந்தர்யா தனது மராத்திய அடையாளத்தை மறைக்கவில்லை
அவரது பெயரான ஷக்குபாய் ராவ் கெய்க்வாட் என்பதை இப்போதும் பயன்படுத்துகிறார்.
சக்குபாய் என்ற பெயரில் படம் ஒன்று எடுக்கப்பட்டபோது வழக்கும் போட்டார்.
மராத்திய மண்ணின் மகள் Shaku Bai Rao Gaikwad வாழ்க!