Sunday, 5 October 2025

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

ரசிகர்களைப் புறந்தள்ளுவோம்

 உங்களுக்கு இது வினோதமாக இருக்கலாம்!
 ஆனாலும் ரசிக கூட்டத்தை மேய்க்க விஜய் போல நடந்தால்தான் முடியும்! 
 விஜய்க்கு உண்மையிலேயே இறந்தவர்கள் மீது இரக்கம் இருக்கலாம்!  
 அவர் மனசாட்சி உறுத்திக் கொண்டிருக்கலாம்!  உடனடியாக கிளம்பி இறந்த உடல்களைப் பார்க்க கால்கள் துடிக்கலாம்!
 இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து கண்ணீரைத் துடைக்க அவர் கைகள் துடிக்கலாம்! 
 ஆனாலும் அனைத்து உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு மனசாட்சி இல்லாதது போல அவர் காட்டிக் கொள்ள வேண்டும்!
 அப்போது தான் தீவிர ரசிகர்களைத் தக்கவைக்க முடியும்!
 ரசிக கூட்டம் என்று வந்துவிட்டாலே இங்கே தலைவனுக்கான வரையறை தலைகீழ்!
 அதாவது இங்கே தலைவன் என்பவன் தொண்டனுக்காக துரும்பைக்கூட அசைக்கக் கூடாது!
 தப்பித் தவறி கூட நல்லது செய்யக்கூடாது!
 ரசிகனிடமிருந்து எல்லாவற்றையும் உருவி எடுப்பவனாக மட்டுமே இருக்க வேண்டும்!
 அப்படி ஒருவனைத்தான் இந்த ரசிக கூட்டம் விரும்பும்!

 இதுவே விஜய் இறந்தவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தியிருந்தாலும் இந்த கூட்டம் அவரை விட்டுவிட்டு வேறு ஒருவனை தேடும்!

 இந்த கொடூரமான தற்கொலை மனநிலைதான் அன்று அந்த கூட்டத்தில் அனைவருக்கும் இருந்திருக்கும்!
 இவர்களுக்கு நல்லவர்கள் தம்மைப் பார்த்து பதறுவதில் அலாதி இன்பம்!

 இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது!
 ஆனால் இது நடக்கிறது! உலகம் முழுவதும் நடக்கிறது! 

 சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள் பிறர் தம்மை ஏறெடுத்துப் பார்க்க அல்லது ஒரு நொடி திரும்பிப் பார்க்க இப்படியான கேவலமான கொடூரமான செயல்களை செய்வார்கள்!
 தாழ்வு மனப்பான்மையின் உச்ச வடிவம்தான் ரசிக மனநிலை! 

 இதை தடுக்க நாம் என்ன செய்வது! 
 இவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடையாமல் இருந்தாலே போதும்!
  கடந்து சென்றுவிட்டாலே போதும்!
பொதுமக்கள் இவர்கள் மீது குறைந்தபட்ச மனிதநேயம் கூட காட்டாமல் புறக்கணித்தால் இந்த கூட்டம் ஒழியும்!

 வட இந்தியரில் பொதுவாக சமூக அக்கறை கிடையாது! அதனாலேயே இத்தகைய கொடூரமான கோமாளிகள் அங்கே உருவாகவில்லை! 
 
 விஜய் முகத்தைப் பார்க்க கூட்டத்தில் முண்டியடித்து நசுக்கப்பட்டு வியர்வையில் நனைந்து பல மணிநேரம் அடக்கி வைத்திருந்த சிறுநீரும் மலமும் வெளிவந்து கேவலமாக இறந்து கிடந்தவர்கள் மீது எனக்கு எந்த இரக்கமும் ஏற்படவில்லை! 
 ஏனென்றால் அவர்கள் சாக வேண்டியவர்கள் தான்!

 ஆனால் பாதிப்பட்டோரில் வேறு காரணங்களுக்காக அந்த கூட்டத்தில் போய் சிக்கியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! 

 இனி இப்படியொரு நிகழ்வு நடக்காமல் இருக்க இந்ந ரசிகவெறி கும்பல் அதிகாரத்தை நோக்கி நகர்வதை தடுப்போம்!
 
 இவர்கள் நண்பனோ உறவினரோ எவராயிருந்தாலும் மனிதநேயம் உள்ளவர்கள் புறக்கணிப்போம்! 

 ( 1 ம் தேதியே எழுதிய பதிவு)

 



 
 



 

No comments:

Post a Comment