Thursday 20 November 2014

நெருப்புக்குத் தீப்பொறி தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

நெருப்புக்குத் தீப்பொறி
தமிழ்க் குடியரசுக்கு ஈழப்பொறி

¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥¥

தமிழீழம் நிலப்பரப்பு= 21,952 ச.கீ.மி
+
தற்போதைய தமிழகம்=130,058 சகீமி
+
அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டது=70,000சகீமி
==
மொத்தம்=222,010 சகீமி

அதாவது புலிகள் அறிவித்த தமிழீழத்தை விட 10.11 மடங்கு பெரியது நம் தாய்மண்.

உலகின் பரப்பளவில் (510,072,000 சகீமி)  இது 0.043% ஆகும்.
அதாவது நூற்றுக்கு அரைப்பங்கு கூட இல்லை.

இதில் கிட்டத்தட்ட பாதியளவுள்ள (58%) தமிழகத்தைத் தவிர மற்ற பகுதிகள் வேற்றினத்தாரிடம் முற்றாக இழந்துவிட்டோம்.
தமிழகம்கூட அரைகுறைக் கட்டுப்பாட்டில்தான் உள்ளது .

உலக மக்கள்தொகை 712கோடி.
அதில் அசல் தமிழர் கிட்டத்தட்ட 6.5 கோடி.
இது 0.91 சதவீதம் ஆகும்.
இது நூறுபேரில் ஒருவர்கூட தமிழினம் இல்லை.

பரப்பளவின் படி நாம் 77வது நாடு.

நாம் ஒரு பழமையான மிகச் சிறுபான்மையான இனம். நமக்குள் வேறுபாடுகள் ஏன்?

நமது தாய்நிலம் சின்னஞ்சிறியது இதற்குள் ஏன் இருநாடுகள்?

பெரியநாடுகளோடு நாம் இணைந்திருப்பதால் நமது வளங்கள் சுரண்டப்பட்டு நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம்.
நாம் ஒரு நாடமை(தேசிய)இனம்.
நமக்கு தனிநாடு பெறும் தகுதியும் உரிமையும் உண்டு.
இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாட்டினர் நம்மை 'ஸகோதரர்கள்' என்கிறார்கள்.
உடன்பிறந்த அண்ணன் தம்பியே ஆனாலும் ஈன்ற பெற்றோரே ஆனாலும் உரிமைகள் வழங்கப்படாவிட்டால் பிரிந்துசெல்வது சரியே ஆகும்.
நம் வளங்களைச் சுரண்டி நம்மை எட்டுதிக்கும் விரட்டியடிக்கும் இவர்கள் நமது உடன்பிறந்தவர்களும் இல்லை. இவர்கள் நமது எதிரிகளே ஆவர்.

எனவே தமிழரே,
தலைவர் பிரபாகரன் வழியில் நாம் நமக்குள் திரண்டு நமது சின்னஞ்சிறிய தாய்மண்ணை மீட்டு நமக்கான நாட்டினை அமைக்க ஆயத்தமாவோமாக.

நம்மிலும் சிறிய தாய்நிலத்தையும் நம்மைவிடக் குறைந்த மக்கள்தொகையும் கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் உலகிலேயே பெரிய பேரரசை நிறுவவில்லையா?

நம்மால் நமது தாய்நிலத்தில் ஒரு வல்லரசை நிறுவிப் படைக்க இயலாதா?

உலக மானிடர் அனைவருக்கும் நாம் நல்லது செய்யலாம். எப்படி செய்யலாம் என்றால் அவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக சிறந்துயர்ந்த ஒரு நாட்டினைக் கட்டியமைப்பதன் மூலம் செய்யலாம்.

( தமிழ்க் குடியரசு எல்லைகள்
https://m.facebook.com/photo.php?fbid=419383841498608&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )
(தமிழகம்-ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை
https://m.facebook.com/photo.php?fbid=435281226575536&id=100002809860739&set=a.203447446425583.28789.100002809860739&refid=13 )

No comments:

Post a Comment