Friday 27 October 2017

காவிரி மேலாண்மை அமைக்கும் ஐடியா இல்லை - ஹிந்திய அரசு

தமிழகம்:-

எசமான்! இறுதி தீர்ப்புன்னீங்க! 

 அதுவந்து பல வருசம் ஆகுது.

மேலாண்மை வாரியம் அமைச்சு நடைமுறை படுத்துங்கையா!

காவிரி இல்லாம விவசாயம் பாதி அழிஞ்சுபோச்சு.

45 வருசமா வழக்கு நடக்குது ஆனா நியாயம் கெடைக்கல.

எங்கள ஏறெடுத்து பாருங்க எசமான்.

 பிள்ள குட்டியோட பட்டினியா கெடக்கோம்.


ஹிந்திய அரசு:-

இறுதி தீர்ப்பாவது?! 

நடுவர் மன்றமாவது?!

மேலாண்மையாவது?!

ஹெ ஹெ ஹெ ஹெ

போங்கடா போக்கத்த தமிழனுகளா!

காவிரிய தெறந்து விட்டா நாங்க எப்படி மணல் அள்ளி, மீத்தேன் எடுத்து, நிலக்கரி எடுத்து பணக்காரன் ஆகிறது?

எவ்வளவு திமிர் இருந்தா குடிக்க தண்ணி கேப்ப?!

டேய் சத்ரியா இவன் வீட்ட ரெண்டா ஒடச்சு வடக்க பாதி நீ எடுத்துக்க.


தமிழகம்: ?!!?


(செய்தி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை 

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்)

No comments:

Post a Comment