Sunday 1 October 2017

திருத்தணி மீட்பு - பெரிய சாதனையா?

திருத்தணி மீட்பு - பெரிய சாதனையா?

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 01.04.1960 அன்று திருத்தணி தமிழகத்துடன் சேர்க்கப்பட்டதுதான்.
ஆனால் கிட்டத்தட்ட அதே அளவு பரப்பளவுள்ள நிலத்தை பிடுங்கிக்கொண்டுதான் தெலுங்கர் நமக்கு அப்பகுதியைக் கொடுத்தனர்.

ஆந்திரா நமக்கு கொடுத்த நிலம் 1049 ச.கி.மீ (405 சதுர மைல்) பரப்பளவு.

பதிலுக்கு நம்மிடம் பிடுங்கியதோ 844 ச.கி.மீ (326 சதுர மைல்) பரப்பளவு.

அதாவது வெறும் 200 ச.கி.மீ மட்டுமே நம்மால் மீட்க முடிந்தது.

அண்டை மாநிலங்களிடம் நாம் இழந்த பகுதியோ ஏறத்தாழ 70,000 ச.கி.மீ.
அதாவது இன்றைய தமிழகத்தைப் போல பாதி அளவு.

இதில் ஆந்திரா பறித்தது மட்டுமே ஏறத்தாழ 32,000 ச.கி.மீ.

இதற்கு முன் 200 ச.கி.மீ பரப்பளவை மீட்ட சாதனை ஒன்றுமே இல்லை.

No comments:

Post a Comment