Thursday 2 May 2019

சாதியம் vs தமிழ்தேசியம்

சாதியம் vs தமிழ்தேசியம்

எப்படி ஒரு திராவிடவாதியின் வடவர் எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாதோ....
அதேபோல,
ஒரு சாதியவாதியின் திராவிட எதிர்ப்பு தமிழ்தேசியம் ஆகாது.
-------
சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் தமிழ்தேசியம் பேசிக்கொண்டே
"நாங்கதான் பாண்டியர்! நாங்கதான் மள்ளர்!
விவசாயத்தை கண்டுபிடித்ததே நாங்கள்தான்!
எங்க திணை மருதம்!
பாவாணரே கூறிவிட்டார்!
எங்க இம்மானுவேல் சேகரனை தேவர் கொன்னுட்டாரு!"
என்று கத்தினார்கள்.

வடநாட்டு கூர்மி சாதியை அழைத்து வந்து குடும்பர் மாநாடு போட்டார்கள்.
போட்டியாக இம்மானுவேல் சேகரனார் குருபூஜை நடத்தினார்கள்.
பசுபதி பாண்டியன் வளரவிடாமல் தடுக்க தி.மு.க களமிறக்கிய கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்று தெரிந்தும் அரசியல் அடையாளம் போய்விடக்கூடாது அவரை ஆதரித்துவந்தனர்.
இறுதியாக தென்தமிழ்நாடு தனியாக பிரியவேண்டும் என்பதில் போய் நின்றனர்.

பதிலடியாக ,
"மள்ளர் என்பது வீரர் என்று பொருள் தரும் பொதுவான சொல்.
மருதம் மட்டுமுன்றி பிற திணைகளிலும் மள்ளர் இருந்தனர்.
பள்ளருக்கும் பாண்டியருக்கும் பொதுவான வேர்ச்சொல் உள்ளதென்று பாவாணர் கூறவதாக நீங்கள் கூறுவது பொய்.
இம்மானுவேல் சேகரன் அத்தனை பெரிய ஆள் கிடையாது.
அவர் பற்றி வந்த ஆகப்பெரிய புத்தகத்தில் 300 பக்கங்கள் உண்டு.
அதில் சொந்தக்கதை சோக கதை போக 3 பக்கம் கூட அவர் போராடிய வரலாறு இல்லை.
தேவர் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தமைக்கு சாதி காரணம் இல்லை.
சமாதான கூட்டத்திற்கு வரவேண்டிய எம்.எல்.ஏ (அவரும் பள்ளர்) வராமல் அவரது எடுபிடி இம்மானுவேலை அனுப்பியதுதான் காரணம்.
பிறகு இருவரும் சமரசமாகி சாமாதானத்திற்கு அழைப்பு விடும் கூட்டு அறிவிப்பில் கையெழுத்தும் போட்டனர்.
அந்த சமாதான அறிக்கை வெளிவரக்கூடாது.
சாதியாக நாம் பிரிந்து கிடக்க வேண்டும் என்றுதான் அன்றிரவே இம்மானுவேலைக் கொன்று தேவர் மீது பழிபோட்டுவிட்டனர்.
(தேவருக்கு நியாயம் கேட்பது போல காமராசரை வீழ்த்தி ஆட்சியையும் பிடித்துவிட்டனர்.)
இம்மானுவேலார் கொலையான பிறகும் கூட பள்ளர் அதிகமாக வாழ்ந்த தொகுதியில் தேவர் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இறக்கும்போது தேவர் சொத்தில் 5 இல் 1 பங்கு பள்ளருக்கு கிடைத்தது.
மள்ளர் என்கிற பெயரில் குடும்பர் மீதி பள்ளர்களை ஏய்க்கின்றனர்.
மள்ளரியத்தை தமிழ்தேசியம் சுமப்பது அதிகநாள் நீடிக்காது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
---------------
அடுத்து சில சாதிவெறியர்கள் இருந்தனர்,
"நாங்கதான் தேவரு!
முக்குலம் நாங்க ஒரே சாதியோட மூன்று பிரிவு!
நாங்கதான் மூவேந்தரு!
தேவர்கள காமராஜ் நாடார் பழிவாங்கிட்டாரு!
தமிழ்நாட்டுல எங்கள விட்டா வீரனே கிடையாது.
அந்த படம் இருக்கு இந்த பாட்டு இருக்கு!
போர்த்துகீஸ் வரைபடத்துல மறவர்நாடு இருக்கு.
10,15 ஜமீன் நாங்கதான்!"
என்று ஆரம்பித்தார்கள்.
தேவர் குருபூஜை என்ற பெயரில் ரவுடித்தனம்.
ஊருக்கு ஊர் முச்சந்தியில் தேவர் சிலை.
4,5 சாதிக்கட்சிகள்.
எதற்கெடுத்தாலும் பள்ளரை வம்புக்கு இழுப்பது என்று சாதிவெறிக்கு இலக்கணமாக மாறி நின்றனர்.

பதிலடியாக,
" தேவர் என்பது சாதி கிடையாது அது ஒரு பட்டம்.
முக்குலம் மூன்றும் தமக்குள் எந்த தொடர்பும் அற்றவை.
முக்குலத்தோர் என்கிற பெயரில் அம்மூன்று குல மக்கட்தொகையில் 60% இருக்கும் அகமுடையார்களை ஏய்த்து அரசியல் செய்கிறீர்கள்.
பாவாணர் பார்வையில் அகமுடையார் நாட்டுப்படை, கள்ளர் காட்டுப்படை.
மறவர் பொதுவான வீரர் பெயர்.
காமராசர் காலத்தில் நடந்தது இரு கட்சிகளுக்கு இடையேயான மோதல்.
அப்போது காமராசர் பக்கம் அதிகம் இருந்தோர் முக்குலம்.
தேவர் பக்கம் அதிகம் நின்றது பள்ளர்கள் (தேவரின் அப்பா கூட எதிர்க்கட்சிதான்).
மற்றபடி காமராசர் நேரு குடும்பத்தின் அடிமை.
அவரால் நாடார்கள் அடைந்த சீரழிவுக்கு பதிலடியாகத்தான் தேர்தலில் அவரை சொந்த சாதி என்றும் பாராமல் தோற்கடித்தனர்.
பள்ளரும் மறவரும் பூலித்தேவன் காலத்தில் இருந்தே ஒன்றுக்குள் ஒன்று.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் கூட 8 பேர் பள்ளர்தான்.
நீங்கள் சண்டையிட்டு வருவதால் பூலித்தேவன் இடத்தில் கொள்ளைக்காரனான கட்டபொம்மனை அமரவைத்து புகழ்கின்றனர்.
கள்ளர் தன்னரசு கூட்டமைப்பு வெள்ளையரிடம் பேசிய வீரவசனத்தை கட்டபொம்மன் பேசியதாக படமெடுத்துவிட்டனர்.
மறவர் பாளையங்கள் கொசுறு.
அதைவிட தெலுங்கு பாளையங்கள்தான் தமிழகம் முழுவதும் இருந்தது."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------------
அடுத்து சில வன்னியசாதி வெறியர்கள்,
"நாங்கதான் வன்னியகுல சத்திரியர்.
அக்கினி குண்டால இருந்து பொறந்த அக்னிகுலம்.
தமிழினத்திலேயே பெரும்பான்மை நாங்கதான்.
வீரப்பன், தமிழரசனை நீங்க யாருமே கொண்டாடலை.
வன்னியர்களை காமராசர் ஏமாத்திட்டார்.
எங்கயும் தெற்கத்தி ஆதிக்கம்.
சென்னை முழுக்க நாடார் ஆதிக்கம்.
அதனால தனி வடதமிழ்நாடு வேணும்"
என்று கத்தினார்கள்.

பதிலடியாக,
" வன்னியர் என்பது பட்டமே!
வன்னியர் என்கிற பட்டத்தை பயன்படுத்தி பள்ளிகள் படையாச்சிகளை முட்டாளாக்குகிறீர்கள்!
வீரப்பன், தமிழரசன், காடுவெட்டி குரு எல்லாரும் படையாச்சிதான்.
பதவியில் மட்டுமே இருப்பது பள்ளி!
திராவிட கட்சிகளை தூக்கி சுமப்பது வடக்குதான்.
பெரியார் கூடவே இருந்ததும் கருணாநிதி கூடவே இருந்ததும் வன்னியர்தான்.
தெற்கை விட வடக்கு பின்தங்கியதாகவோ
வடக்கில் தெற்கத்திகள் ஆதிக்கம் செலுத்துவதாகவோ நீங்கள் நிறுவ முடியாது.
தலைநகர் அனைவருக்கும் பொது.
சென்னையை ஆந்திராவுக்கு போகாமல் தடுத்ததே ம.பொ.சி என்கிற நாடார்தான்.
நாடார்களை இழிவு படுத்தும் மத்திய பாடத்திட்டம் வந்தபோது அதை கண்டித்து நீக்கியது ராமதாஸ்தான்.
நாடாரான சீமான் அளவுக்கு வீரப்பனுக்கு வெளிப்படையான ஆதரவு எந்த இயக்கமும் கட்சியும் தெரிவித்ததே கிடையாது.
தற்போதுகூட உங்கள் இருப்பிடத்துக்கு வந்த பெரிய ஆபத்தான எட்டுவழிச் சாலையை எதிர்த்து முதலில் சிறை சென்றதும் முதலில் வழக்கு போட்டு அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியதும்கூட நாம்தமிழர்தான்."
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து, சில சாதிவெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் பரையர்.
சாவுக்கு அடிக்கிற பறைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.
பரைனா பழமை.
நாங்கதா மூத்தகுடிக்கே மூத்தகுடி!
ஆதாரம் அந்த பழமொழி இந்த பழமொழி!
நாங்கதான் பூணூல் போட்ட ஒரிஜினல் பார்ப்பனரு.
வேதம் படித்த பறையூர் சாக்கையன் பற்றி இலக்கியத்துல வருது.
குலதெய்வ பூசாரிகள்லாம் நாங்கதான்!
திருவள்ளுவர், புத்தர் நாங்கதான்!
பௌத்தம்தான் எங்க நெறி!"
என்று கத்தினார்கள்.
சாதிவெறியையும் தலித்தியத்தையும் கலந்து தூக்கிக்கொண்டு
திருமாவளவன் (கருணாநிதி காலை நக்கிய அதே நாவால்) இடும் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு வன்னியர் பெண்களை துரத்த ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக தி.மு.கவும் பறையர் சாதி போலீஸ் வக்கீல் அடங்கிய கட்டப்பஞ்சாயத்து கும்பலும் இருந்தது.
இறுதியில் ராஜபக்ச புத்தரை வணங்கும் படத்தைப் போட்டு சாக்கியமுனிகள் வாழ்த்தியதில் போய் முடிந்தது.

பதிலடியாக,
"பரையர் என்பது தவறு.
சங்க இலக்கிய பாடலில் கடம்பன், துடியன், பாணன் என நான்கு குடிகள் சிறப்பித்து கூறப்படுகின்றன.
அதில் நான்குமே இசைக்கருவி சார்ந்த பெயராக இருக்கும்போது நீங்கள் எப்படி பழமை சார்ந்த பெயராக இருக்க முடியும்?!
பழமொழிகள் காலத்துக்கு காலம் திரியும். அவை சான்றாகாது.
இலக்கியத்தில் வரும் பறையூர் சாக்கையன் சாக்கைக்கூத்து ஆடும் கலைஞன் என தெளிவாகவே உள்ளது.
பூணூல் பல சாதியினர் போடுவது.
அது வில்லின் நாண்.
150 ஆண்டு முந்தைய பூணூல் போட்ட குயவர் ஓவியமும் பூணூல் போட்ட ராசராச சோழன் பெரியம்மா சிலையும் கூட உண்டு.
பறை என்றால் கேவலமில்லை.
பறையில் பலவகை உண்டு.
பூசைக்கு திருமணத்துக்கு என்று பலவிதமான பறைகள் இருந்தன.
ஆண்டாள்கூட பறையடித்து பாடுகிறாள்.
குறவர்தான் உண்மையில் மூத்தகுடி (நரிக்குறவர் இல்லை. அவர்கள் மராத்தியர்).
உங்களை ஆதித் தமிழர் என்று குறிக்காமல் ஆதி திராவிடர் பதிவாக்கி வைத்துள்ளனர்.
திருமாவளவன் என்கிற திமுக கொத்தடிமையை நம்பாதீர்கள்.
அவன் மலைச்சாமி தேவேந்திரன் ஆரம்பித்த தலித் பேந்தர்ஸ் அமைப்பை ஆட்டையைப் போட்டவன்.
இடைக்காலத்தில் நன்றாக இயங்கி பிரபாகரனாரைச் சந்திக்கும் அளவு போனான்.
பின் அவனது அசிங்கம் ஏதோ திமுக விடம் மாட்டி இன்று வரை பல அவமானங்களைச் சந்தித்து வருகிறான்.
ராஜபக்சவை சந்தித்து பல்லைக் காட்டியபிறகும் அவனை நம்புவது பச்சையான சாதிவெறி.
வெறுமனே ஆதரவு தெரிவித்தே வந்தேறி சக்கிலியர் இட ஒதுக்கீடில் தனியாக உள் ஒதுக்கீடு வாங்கி 1% அதிகம் பயனடைந்து உங்களை பின்னுக்குத் தள்ளி நன்கு முன்னேறிவிட்டனர்.
ஏக ஹிந்தி வெறியன் அம்பேத்கரை தூக்கிக்கொண்டு திரியாதீர்கள்.
அவன் ஆங்கில அடிமை.
வன்னியரையும் உங்களையும் மோதவிட்டு அந்த இடைவெளியில் படுத்துதான் திமுக இறுதி மூச்சை விட்டுக்கொண்டு இருக்கிறது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
----------
அடுத்து சில சாதி வெறியர்கள் இருந்தனர்.
"நாங்கதான் ஆரியர்.
நாங்கதான் பகவான் தலைல இருந்து பிறந்து மனுதர்மம் படைச்சு சாதிய உருவாக்கினது.
ஹிந்து மதம்தான் பழமையானது.
அகண்ட பாரதம் அமைப்போம்"
என்று எவனோ எழுதிக்கொடுத்ததை ஒப்பித்து செய்துவந்தனர்.

பதிலடியாக,
" ஆரியர் என்பதே கற்பனை!
அதை உருவாக்கிய மாக்ஸ் முல்லரே அதைத் தவறு என்று ஒத்துக் கொண்டார்.
ஆரியருகும் சமஸ்கிருத மொழிக்கும் பார்ப்பனருடன் தொடர்பு எதுவும் இல்லை.
பார்ப்பனர் வேறு பிராமணர் வேறு.
சாதி தொழில்வழி வந்தது.
ஆரியர் காலம் என்று கூறப்படும் காலத்தில் வடயிந்தியா வந்த ரோம் நாட்டு பயணி ஏழ்வர்ணம் நடைமுறையில் இருப்பதாகவும் அதில் உயர் அடுக்கு கவிஞர் மற்றும் விவசாயிகள் என்றும் குறித்துள்ளார்.
மிகப் பழமையான தொல்காப்பியம் கூட பார்ப்பனர் பற்றி நல்ல விதமாகக் கூறுகிறது.
தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் பாடுபட்ட எத்தனையோ பார்ப்பனரைக் காட்டமுடியும்.
இன்று இந்துத்துவ வெறியரில் பல சாதியினரும் உண்டு.
நீங்கள் இந்துத்வா என்ற பெயரில் உள்ளே நுழைந்திருக்கும் வந்தேறி  பிராமணர்களின் மூளைச் சலவைக்கு ஆளானவர்கள்.
மதத்தின் அடிப்படையில் நாடுகள் அமைவதில்லை.
எங்கள் பார்ப்பனர்கள் இனப்பற்றுக்கு முன் பிராமணிய-இந்துத்வா கட்டாயம் தோற்கும்"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
அடுத்து,
" நாங்கதான் நாடாரு!
காமராசர் இல்லனா எவனும் படிச்சிருக்கவே முடியாது!
நகை கடை, ஜவுளிக்கடை, மளிகைக் கடை எல்லாம் எங்க கைல தான்!"
என்று சரத்குமார் படத்தை வைத்துக்கொண்டு திரிந்தனர்.

பதிலடியாக,
"காமராசர் உங்களுக்கு என்று எதுவும் செய்யவில்லை.
கன்னியாகுமரியை தமிழகத்துடன் இணைத்த நேசமணிக்கு அவர் எந்த ஆதரவும் தரவில்லை.
தமிழகத்திற்கு சேரவேண்டிய வளமான மாவட்டமான இடுக்கியை கேரளாவுக்கு தாரைவார்த்தார்.
ம.பொ.சி திருப்பதி வரை கேட்டு திருத்தணி வரை மட்டுமே கிடைத்தபோதும் சும்மாயிருந்தார்.
இந்தியெதிர்ப்பில் பல கொலைகளைச் செய்தது அவரே!
தமிழ்நாடு என்ற பெயர்மாற்ற உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்க நாடாரை சாகவிட்டது அவரே!
அதனால்தான் சிவகாசி நாடார்கள் அவரை பதவியிலிருந்து தூக்கியெறிந்தனர்.
உங்களுக்கான தலைவர் நேசமணிதான்.
நீங்கள் பெரும்பான்மையாக இருக்கும் குமரி மாவட்டத்தை மத ரீதியாக பிரித்து அடிமைகளை பதவியில் அமர்த்தி அடக்கியாள்கின்றனர்.
நீங்கள் கணிசமாக வாழும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கொண்டுவந்து உங்களுக்கும் பள்ளர்-பரதவருக்கும் சாதிச்சண்டை மூட்டிவிட்டு ரவுடிகளை வளர்த்துவிட்டு  திசைதிருப்பியதே இன்று துப்பாக்கிச்சூடு வரை போய்விட்டது"
என்று தமிழ்தேசியவாதிகள் பிரச்சாரம் செய்தனர்.
-------
சாதியம் எப்போதெல்லாம் தலைதூக்குகிறதோ அப்போதெல்லாம் தமிழ்தேசியம் அதை நசுக்கத் தவறியதில்லை.

சாதியை அனைவரும் வெறுக்கின்றனர் என்றால் அது காரணமில்லாமல் இல்லை.

சாதி சமத்துவம் ஏற்பட வந்தேறிகள் போலவே சாதிவெறியர்களும் தடையாக உள்ளனர்.

எனவே சாதி ஒழிப்பு என்கிற வந்தேறிகளின் பித்தலாட்டத்தை எதிர்க்கும் அதே நேரத்தில்
சாதிவெறியர்களின் அளவுகடந்த அடாவடியையும் எதிர்த்தே வந்துள்ளோம்.

No comments:

Post a Comment