Monday 13 May 2019

தமிழர்நாட்டில் இனச்சான்றும் குடியுரிமையும்

தமிழர்நாட்டில் இனச்சான்றும் குடியுரிமையும்

நீங்கள் உயிருடன் கண் முன்னே நிற்கிறீர்கள்.
உங்களிடம் கேட்டால் உங்கள் பெயர், முகவரி, தகப்பனார் பெயர், பூர்வீகம் என அனைத்தையும் சொல்லமுடியும்.

இருந்தும் உங்களிடம் ஒரு அதிகாரி அடையாள அட்டை கேட்டால் அதைக் காட்டாமல்
"சக மனிதன் மீது நம்பிக்கை இல்லையா?" என்று எதிர்கேள்வியா கேட்பீர்கள்?!
மாட்டீர்கள்தானே?!

ஏனென்றால் ஆவணத்தில் இருப்பதுதான் மாற்றமுடியாத சான்று.
அதுதான் நம்பகமான சான்று.

ஒருவன் வருகிறான்.
"நான் தமிழன்" என்று கூறுகிறான்.

அவனிடம் இனச்சான்று இல்லை.
இனத்தின் உட்பிரிவான சாதிச்சான்றுதான் உள்ளது.

அதை காட்டச்சொல்லி கேட்டால் எரிந்துவிழுகிறான்.
"என் உறுதிமொழியை மட்டும் நம்பி தமிழனாக ஏற்றுக்கொள்" என்கிறான்.

அவனை நம்ப முடியுமா?!

சாதிச்சான்று வேறு எங்குமே காட்டப்படுவதில்லையா?!

சாதியை வெளிப்படையாகக் கூறாதவர்கள் ஒன்று வந்தேறிகளாக இருக்கவேண்டும்.
அல்லது தம் சாதி பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருக்கவேண்டும்.
அல்லது வந்தேறிகளுக்கு தம் இனத்தைச் சுரண்ட வாய்ப்பளிப்போராக இருக்கவேண்டும்.

இம்மூவருமே தமிழினத்துக்கு கேடு செய்பவர்கள்!

எனவே தமிழர்நாடு தனியரசு அமைந்து ஒருவருக்கு சாதிச்சான்றுக்கு பதில் "தமிழர்" என்கிற இனச்சான்று கிடைக்கும்வரை சாதிதான் இனச்சான்று.
இந்த தெளிவு தமிழர் அனைவருக்கும் வேண்டும்.
அதுவரை "சாதி ஒழிப்பு" பற்றி பேசாமல் "சாதிய சமத்துவம்" பற்றித்தான் பேச வேண்டும்.

தமிழர்நாடு தமிழினத்தவர்க்கு இனச்சான்று அளித்த பிறகு சாதி அடையாளத்தைக் கைவிடுதல் அவசியம்.

என்றால் அதற்குப் பதில் எதைக் கைக்கொள்வது?!
சாதிதாண்டிய "ஊர்ப்பாசம்" நம் அனைவருக்குமே உள்ளது.

எனவே அதன்பிறகு சாதிப் பட்டத்திற்கு பதில் பிறந்த ஊர் பெயரை பின்னொட்டாகப் பயன்படுத்தலாம்.
(தமிழர்நாடு சான்றளிக்கும்போது அவரவர் தாம் பிறந்த ஊரைக் கூறி பெயரை பதிவு செயதுகொள்ள வேண்டும்.
அதன்பிறகு வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தாலும் மாற்றக்கூடாது.
தலைமுறை தாண்டியும் தந்தைவழியில் பயன்படுத்தவேண்டும்.
இது ஒன்றும் புதிதில்லை.
முன்பெல்லாம் ஊர், தந்தை பெயர், பிறகு தமது பெயர் என்றவாறே எழுதுவர்.
எ-டு ம.பொ.சி.
நாம் அதையே சிவஞானம் மயிலாப்பூர் என்றவாறு ஆக்குகிறோம்.
இதன்மூலம் தமிழர்நாடு அரசு அமைந்தபோது அவரவர் எந்தெந்த ஊரில் பிறந்தவர் என்பது பதிவாகி அவரது வம்சத்திற்கு பூர்வீக அடையாளம் கடத்தப்படும்.)

ஊர்ப்பெயரை போட்டுக்கொள்ளும் உரிமை தமிழர்நாட்டில் பிறந்த தமிழரல்லாதாருக்கும் உண்டு.
[இது தமிழரல்லாதார் தானும் தமிழரென ஏமாற்ற வாய்ப்பளிக்கிறது.
இருந்தாலும் வேறு வழியில்லை. தமிழர்நாடு தமிழர் கட்டுப்பாட்டில் வந்தபிறகு தமிழ்ச் சாதி அல்லாதார் அனைவரும் வெளியேற்றப் படுவர்.
(தமிழர் விடுதலைக்கு அதிலும் ஆரம்பம் முதலே தோள்கொடுத்த தமிழரல்லாதார் மட்டும் விதிவிலக்கு.)
அப்படி வெளியேற்ற முடியாத பட்சத்தில் தமிழர் விடுதலைக்கு ஆரம்பத்தில் இருந்தே உதவாத மற்றும் கடைசி நேரத்தில் வந்து தமிழ்தேசியத்தில் ஒட்டிக்கொண்ட தமிழ்ச்சாதி அல்லாதாருக்கு குடியுரிமை வழங்கக் கூடாது.
ஊர்ப்பெயரை பயன்படுத்துவதையும் தடைசெய்யவேண்டும்.]

தமிழர் விடுதலைக்கு ஆரம்பம் முதலே தோள்கொடுத்த தமிழரல்லாதாருக்கு "தமிழர்நாட்டு குடிமகன்" என்கிற சான்று கிடைக்கும்.
இத்தகையோர் தமது இனத்திற்கான சான்று வாங்கிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு "தெலுங்கர்", "கன்னடர்",  "மலையாளி" என்றவாறு வாங்க விரும்பாதோர் "வெளியினத்தவர்" என்கிற சான்றை வாங்கிக் கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்து தமிழருக்கும்"தமிழர்" என்கிற சான்று தமிழர்நாட்டு தூதரகம் மூலம் ஆய்வுசெய்து வழங்கப்படும்.
(இதற்குப் பத்தாண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம்)
அவர் தமிழர்நாட்டில் பிறந்தவர் என்றாலோ அல்லது தமிழர்நாட்டில் குடியேறினாலோ "தமிழர்நாட்டுக் குடிமகன்" சான்றும் கிடைக்கும்.

தமிழர்நாட்டில் குடியேறும் தொலைதூரத் "தமிழர்" ஊர்ப் பூர்வீகம் தெரியாவிட்டால் பூர்வீக வட்டம், மாவட்டம், அல்லது (பாண்டி, சோழம், கொங்கு, தொண்டை, ஈழம் போன்ற) மண்டலம் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
இல்லாவிடில் "தமிழ்" என்றே இட்டுக்கொள்ளலாம்.
தொலைதூரம் வசிக்கும் "தமிழர்" தமது குழந்தை பிறந்ததும் அதன் 5 வயதுக்குள் தமிழர்நாடு வந்து அல்லது தமிழர்நாட்டு தூதரகம் சென்று "தமிழர்" என்கிற சான்று வாங்கிக்கொள்ள வேண்டும்.
(அக்குழந்தையின் தாத்தா-பாட்டிகள் நால்வரில் மூவராவது "தமிழர்" அல்லது "தமிழ்ச்சாதி" ஆக இருக்கவேண்டும்)

வெளிநாட்டு தமிழரல்லாதார் தமிழர்நாட்டில் குடியேறினால் தமது இனத்தின் பெயரைக் கூறி இனச்சான்று வாங்கவேண்டும்.
பிறந்த இடத்தைக் கூறி பட்டப் பெயரும் கொண்டு பெயர்மாற்றம் செய்யவேண்டும்.
இவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கலாம் பணிபுரியலாம்.
ஆனால் குடியுரிமை ("தமிழர்நாட்டு குடிமகன்" எனும் சான்று) கிடைக்காது.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்காது.

"தமிழர்நாட்டு குடிமகன்" வேறுநாட்டில் நிரந்தரமாக குடியேறிவிட்டால் அவருக்கு அங்கே பிறக்கும் பிள்ளைகளுக்கு "தமிழர்நாட்டு குடிமகன்" எனும் சான்று கிடைக்காது.
ஆனால் அவர் "தமிழர்" எனும் சான்று வைத்திருப்பின் அவரது பிள்ளைகளுக்கு "தமிழர்" எனும் சான்று கிடைக்கும்.
(அக்குழந்தையின் தாத்தா-பாட்டி நால்வரில் மூவர் தமிழராக இருக்கவேண்டும்).

ஒரு "தமிழர்" ஒரு "தமிழரல்லாதவரை" திருமணம் செய்தால் அவரது வாரிசு "அரைத்தமிழர்" என்று சான்று பெறும்.
ஒரு "அரைத்தமிழர்" ஒரு "தமிழரை" திருமணம் செய்தால் மட்டுமே அவர்களது வாரிசுகள் "தமிழர்" என்ற சான்று பெறுவர்.

சுருக்கமாக,
தமிழர்நாடு தனியரசு அமையும்வரை சாதியே சான்று.
அதன்பிறகு,
சாதிக்கு பதில் இனம்.
பட்டத்திற்கு பதில் ஊர்.
தமிழருக்கும் தமிழருக்கு உதவியவருக்கும் மட்டுமே குடியுரிமை.
முடிந்தவரை தன்னினத்தில் திருமணம்.


No comments:

Post a Comment