Monday 4 December 2023

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம்

கோயிலுக்கு இஸ்லாமியர் தானம் 

 நெல்லையப்பர் கோயில் உள்ள கிபி 1751 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சொத்து பட்டயம் ஒன்றில் லாலுகான்சவான் சாயுபு என்பவர் நெல்லை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் நித்ய பூஜைக்கு தானம் வழங்கிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
 அதுபோல் குற்றாலநாதர் சுவாமி கோயிலுக்கு கிபி 1848 ஆம் ஆண்டு நித்திய பூஜை மற்றும் நெல்லை காந்தியம்மன் சிறுகால பூஜைக்கான கட்டளைக்கு அசாதுவால சாயுவும் இசுமாலிராவுத்தரும் வேறு சிலரும் சேர்ந்து தான பட்டயம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

செய்தி: தினகரன் (04.12.2023)
தலைப்பு: குற்றாலம் கோயிலில் செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு

 ஏற்கனவே தென்காசியை சேர்ந்த அகமதுபேட்டை (ஆமது பேட்டை) முஸ்லீம்கள் குற்றால நாதர் நித்திய பூசைக்கு மகமைப் பணம் கொடுக்க (கி.பி. 1788ல்) இணங்கி எழுதிய பட்டயம் ஒன்று பற்றி ஏற்கனவே பதிவிட்டுந்தேன்.

No comments:

Post a Comment