Monday 27 November 2023

துவாரகா குழப்பம்

துவாரகா குழப்பம்

 இத்தனை ஆண்டுகள் கழித்து ஏன் துவாரகா வரவேண்டும்?
ஏனென்றால் இப்போதுதான் போலி முகம் மற்றும் முக அசைவுகள் செய்யும் தொழில்நுட்பம் வந்துள்ளது.
 ஆனால் அதையும் சரியாகச் செய்யவில்லை.
வேறொரு முகத்தில் கண், மூக்கு, வாய் ஒட்டப்பட்டது போல உள்ளது.
அவரது பேச்சை முழுமையாகக் கேட்டேன்!
தலைவர் பேசுவது போலவே பேசுகிறார்.
மிகவும் பொதுப்படையாக பேசியுள்ளார்.
 எந்த நபரையும் இயக்கத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை!
 சமகால அரசியல் சூழல் அல்லது அடுத்த கட்ட நகர்வு என எதுவும் பேசவில்லை!
 இனப் படுகொலை பற்றி கூட விவரித்து பேசவில்லை!
 உலக நாடுகள் இலங்கைக்கு உதவின ஆனால் போர் முடிந்த பிறகு இலங்கை அரசும் உலக நாடுகளும் வாக்களித்தபடி நடக்கவில்லை ஈழத் தமிழர் பிரச்சனைகள் தீரவில்லை என்று கூறியுள்ளார்.
 ஈழத் தமிழர்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் வலியுறுத்தி யுள்ளார்.
 பொருளாதாரம் உள்ளவர்களும் புலம்பெயர் தமிழர்களும் வறுமையில் தவிக்கும் ஈழ மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.
 தமிழகத்திற்கு நன்றி கூறியுள்ளார்!
சிங்களவருக்கு ஈழத் தமிழர்கள் எப்போதும் எதிரியில்லை என்றும் ஈழப் போராட்டத்தை புரிந்துகொள்ளுமாறும் கூறியுள்ளார்.
 தலைவர் இருப்பது பற்றி எதுவும் கூறவில்லை! 
 
 குழப்பம் நீடிக்கிறது!

No comments:

Post a Comment