Showing posts with label வியட்நாம். Show all posts
Showing posts with label வியட்நாம். Show all posts

Wednesday, 16 October 2019

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------

1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------

1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------

1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------

1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------

1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------

1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------

1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை

ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.

கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.

(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட்  உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)

மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.

1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.

என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!

(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)

Saturday, 29 August 2015

வியட்நாம் பாண்டியன்

வியட்நாம் பாண்டியன்

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான் !

அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன்.
அவனுடைய பெயர் ஸ்ரீமாறன்.
தமிழில் இதை திருமாறன் என்று
சொல்லலாம் .

வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது .
இந்தக் கல்வெட்டில் ஆட்சி , ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை .
கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது.
ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

வியட்னாமில் வோ- சான் என்னும் இடத்தில் ஒரு பாறையின் இரண்டு பக்கங்களில் (VO–CHANH ROCK INSCRIPTION ) இது செதுக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீமாறன் என்ற அரசனின் குடும்பம் செய்த நன்கொடையை (தானத்தை ) கல்வெட்டு குறிப்பிடுகிறது .
பாறையின் ஒரு பக்கத்தில் 15 வரிகளும் மறு பக்கத்தில் ஏழு வரிகளும் உள்ளன .
ஆனால் ஒன்பது வரிகள் தவிர மற்றவை தேய்ந்து அழிந்துவிட்டன.
சமஸ்கிருத பாட்டுப் பகுதி வசந்த திலகா அணியிலும் ஏனைய வரிகள் உரைநடையிலும் உள்ளன .
கிடைத்த வரிகளிலும் கூட சில சொற்கள் அழிந்துவிட்டன.

கல்வெட்டின் சில வரிகள் :-

. . . . . .. . ப்ரஜானாம் கருண . .. . .. ப்ரதாம் விஜய
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஸ்ரீ மாற ராஜகுல . . . . . . வ . . . . . . . . . . .

ஸ்ரீ மாற லோ. . . . . ன. . . .. . . . குலதந்தனேன

க்ராபதிம் ஸ்வகன. . .. .. ச . . . . . . . .. .. ..

இந்தக் கல்வெட்டில், தனக்குச் சொந்தமான வெள்ளி, தங்கம், தானியக் குவியல் மற்றுமுள்ள அசையும் , அசையா சொத்து (ஸ்தாவர , ஜங்கம்) வகைகள் அனைத்தையும் தமக்கு நெருங்கிய மக்களுக்கு பொதுவுடமையாக்குவதாக மன்னன் அறிவிக்கிறான்.

எதிர்கால மன்னர்கள் இதை மதித்து நடக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கிறான் .
இது வீரனுக்கு தெரியட்டும் . . .. . . .. . . . . .. . .என்று பாதியில் முடிகிறது கல்வெட்டு.

இதில் முக்கியமான சொற்கள்  “ஸ்ரீமாற ராஜகுல ” என்பதாகும் .
இந்த திருமாறனைக் குறித்து மிகவும் குறைவான தகவலே கிடைத்துள்ளது .

ஆனால் வியட்னாம் , லாவோஸ் , கம்போடியா ஆகிய நாடுகளில் 1300 ஆண்டுகளுக்கு நிலவிய இந்து சாம்ராஜ்யத்தின் முதல் மன்னன் இவன் என்பதை சீனர்களின் வரலாறும் உறுதி செய்கிகிறது .

திருமாறனை சீன வரலாற்று ஆசிரியர்கள் கியு லியன்(KIU LIEN ) என்றும் இவன் ஹான் வம்சம் (HAN DYNASTY ) சீனாவை ஆண்டபொழுது அவர்களின் கட்டுபாட்டில் இருந்த ‘ சம்பா ’ தேசத்தில் புரட்சி செய்து ஆட்சியைக் கைபற்றியதாகவும் எழுதிவைத்துள்ளனர் .

சம்பா (CHAMPA ) என்பது தற்போதைய வியட்னாமின் ஒரு பகுதியாகும் .
மன்னனின் குடும்பப் பெயர் கியு(KIU ) என்றும் மன்னனின் பெயர் லியன் (LIEN ) என்றும் எழுதிவைத்துள்ளனர் .
இவன் காங்ட்சாவோவின் (KONG TSAO ) புதல்வன் என்றும் தெரிகிறது .

தென்கிழக்கு ஆசியா முழுதும் முதல்முதலாக தொல்பொருள் ஆராயச்சி நடத்திய பிரெஞ்சுக்காரர்கள் ஸ்ரீமாறனும், கியு லியானும் ஒருவர்தான் என்று உறுதிசெய்துள்ளனர் .
கி .பி. 137 ல் சீனர்களை எதிர்த்துக் கலகம் துவங்கியது .
ஆனால் கிபி 192 ல்தான் ஸ்ரீ மாறன் ஆட்சி ஏற்பட்டது .

ஸ்ரீ மாறனுக்குப் பின்னர் ஆண்ட மன்னர்களில் பெயர்கள் எல்லாம் சீனமொழி வாயிலாக ‘உருமாறி ’ கிடைப்பதால் அவர்களின் உண்மையான பெயர்கள் தெரியவில்லை .
எல்லா மன்னர்களின் பெயர்களும் பான்(FAN ) என்று முடிவதால் இதை ‘ வர்மன்” என்று முடிவுசெய்துள்ளனர் .
ஏனெனில் இடையிடையேயும் ஆறாம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் மன்னர்களின் பெயர்களுக்குப் பின்னால் ‘ வர்மன்’ என்ற பெயர் தெளிவாக உள்ளது .

இதில் வியப்பு என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைத்த செப்புப் பட்டயங்களிலும் பாண்டியன் வம்சாவளியில் "ஸ்ரீமாறன்", "வர்மன்" என்ற இரண்டு பெயர்களும் கிடைக்கின்றன .

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான போர்னியோ தீவின் அடர்ந்த காட்டிற்குள் "மூலவர்மன்" என்ற மன்னனின் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் 800 க்கும் அதிகமான சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.
வியட்னாமியக் கல்வெட்டு ‘பாண்டிய ’ என்ற பெயரைக் குறிப்பிடவில்லை.
ஆயினும் ஸ்ரீமாறன் (ஸ்ரீ = திரு ) என்பவன் பாண்டியனே என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன :-

(1 ) இடைச்சங்கத்தின் கடைசி மன்னன் பெயர் திருமாறன் .
அவன் அரசாண்ட காலத்தில் கடல் பொங்கி தென் மதுரையை அழித்ததால் அவன் தற்போதைய மதுரையில் கடைச்சங்கத்தை அமைத்ததாக உரையாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர் .
இந்த மன்னனோ இவனது குலத்தினரோ வியட்னாமில் ஒரு அரசை நிறுவியிருக்கலாம் .

(2 ) வேள்விக்குடி செப்பேடும் திருமாறன் என்ற மன்னனைக் குறிப்பிடுகிறது .
அதே செப்பேட்டில் மாறவர்மன் (அவனி சூளாமணி ),
ஸ்ரீமாறவர்மன்(அரிகேசரி )
ஸ்ரீ மாறன்(ராஜசிம்மன்) என்ற பெயர்களையும் காணலாம் .
பாண்டிய வம்ச மன்னர்கள் மாறன், சடையன் என்ற பெயர்களை மாறி மாறிப் பயன்படுத்துவர்.

(3 ) தொல்காப்பியத்தை அரங்கேற்றிய இடைச்சங்க காலமன்னன் "நிலந்தரு திருவில் பாண்டியன்" என்று பனம்பாரனாரின் பாயிரம் கூறுகிறது .
பல நாடுகளை வென்று தந்ததால்  “நிலந்தரு” “ திரு பாண்டியன்” (ஸ்ரீமாறன்) என்று பெயர் ஏற்பட்டிருக்கலாம் .

(4 ) சங்க இலக்கியப் பாடல்களிலும் அடிக்குறிப்பிலும் குறைந்தது பத்துமுறை ‘ மாறன்’ என்ற மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர் இடைச்சங்ககால மன்னன் "முடித்திருமாறன்" .
நற்றிணை 105 , 228 ஆகிய 2 பாடல்களை இயற்றியவன் .

(5 ) தென்கிழக்கு ஆசியா முழுவதும் அகத்திய முனிவரின் சிலைகள் கிடைக்கின்றன .
அகத்தியர் “ கடலைக் குடித்த ”  கதைகளும் பிரபலமாகியிருக்கின்றன .
முதல்முதலில் கடலைக் கடந்து ஆட்சி நிறுவியதை “ கடலைக் குடித்தார் ” என்று பெருமையாக உயர்வு நவிற்சியாக குறிப்பிடுகின்றனர் .
வேள்விக்குடி செப்பேடு இந்தக் கதைகளைக் குறிப்பிட்டுவிட்டு அகத்தியரை பாண்டியரின் “ குல குரு ” என்றும் கூறுகிறது .

(6 ) இந்திய இலக்கியகர்த்தாக்களின் முக்கிய இடத்தை வகிக்கும் மாபெரும் வடமொழிக் கவிஞன் காளிதாசன் ,
பாண்டியர்களையும் அகத்தியரையும் தொடர்புப்படுத்தி கவி புனைந்துள்ளான் (ரகு வம்சம் 6–61 )

(7 ) புறநானூற்றுப் பாடல் (புறம் 182 ) பாடிய ஒரு பாண்டிய மன்னன் பெயர் “ கடலுள் மாய்ந்த” இளம்பெருவழுதி .
இவன் வெளிநாடு செல்லும்போதோ , வெளிநாடுகளை வென்று திரும்பும் போதோ கடலில் மூழ்கி இறந்திருக்கலாம்.

(8 ) டாலமி , பெரிப்ளூஸ் என்ற யாத்ரீகர்கள் கி .பி . முதல் இரண்டு நூற்றாண்டுகளில் நடந்த தென் இந்திய கடல் வாணிபத்தைக் குறிப்பிடுகின்றனர் .

(9 ) தென் இந்தியாவை கி .மு இரண்டாம் நூற்றாண்டு முதல் 400 ஆண்டுகளுக்கு ஆண்ட சாத்வா இன மன்னர்கள் தமிழ் மொழியில் வெளியிட்ட நாணயங்களில் ‘கப்பல்’ படம் உள்ளது .

(10 ) தமிழ் நாடு முழுவதும் கிடைக்கும் ரோமானிய நாணயங்களும் தமிழர்களின் கடல் வாணிபத்தை உறுதி செய்கின்றன .

(11 ) ‘ மிலிந்த பன்ன ’ என்ற கி . மு. இரண்டாம் நூற்றாண்டு பெளத்த மத நூல் வங்கம், சோழமண்டலம் , குஜராத் , சீனம், எகிப்து இடையே நிலவிய வணிகத்தைக் குறிப்பிடுகிறது .

(12 ) மலேசியாவில் தமிழ் கல்வெட்டு இருக்கிறது.
தாய்லாந்தில் தமிழ்நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன.
மேற்கூரிய சான்றுகள் அனைத்தும் தமிழர்களின் கடல் பயண வன்மையைக் காட்டுகின்றன .

அகஸ்டஸ் சீசரின் அவையில் பாண்டிய மன்னனின் தூதர் இருந்ததையும் ரோமானிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றன .

ரோம் (இத்தாலி ) வரை சென்ற தமிழனுக்கு, தென்கிழக்கு ஆசியாவிலுள்ள வியட்னாமுக்குச் செல்வது எளிது தானே !

Reference :
(1 ) R. C . MAJUMDAR - CHAMPA : HISTORY & CULTURE OF AN INDIAN COLONIAL KINGDOM IN THE FAR EAST GIAN PUBLISHING HOUSE DELHI –
REPRINT 1985 .

(2 ) SANGAM LITERATURE –
ETTUTHOKAI & PATHUPPATTU

(3 ) பாண்டியர் செபேடுகள் பத்து – PUBLISHED BY THE TAMIL
VARALATRU KAZHAGAM ,
MADRAS 1967.

நன்றி : லண்டன் சத் சங்கம் செய்தி மடல் .
- ச . சுவாமிநாதன்

www.eegarai.net/t108461-topic

Thursday, 10 July 2014

700 கோடி (1988)



இந்திய-ஈழப்போர் உச்சநிலையை அடைந்திருந்த காலகட்டம்; தலைவர் சொற்ப போராளிகளுடன் மணலாறுப் பகுதியில் இருந்தபடி இந்தியப்படைக்கு எதிரான கரந்தடி(கொரில்லா)ப் போரை தொடர்ந்து நடத்திவந்தார்.

"கர்னல்.வர்மா" என்ற ஒரு 'ரா' உளவுத்துறை அதிகாரி புலிகளின் மூத்த உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு பேசினார்.
"பல கோடி ரூபாய் பணமும் படையும் செலவளித்து நாங்கள் இந்தப் போரை நடத்திவருகிறோம்; இத்தனை அழிவும் உயிர்ச்சேதமும் தேவையில்லாதது; அந்த பணத்தை ஏன் நீங்களே பெற்றுக்கொள்ளக்கூடாது?!" என்று நேரடியாக பேரத்திற்கு அழைத்தார்.
மக்கள் புணர்வாழ்வுக்கு 500கோடி தருவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு 200 கோடி தருவதாகவும் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு பணத்தைப் பெற்றுகொள்ளுமாறும், புலிகளுக்கு பதவிகளும் பாதுகாப்புக்கென்று தனிப்படை வைத்துக்கொள்ள இசைவும் தருவதாகவும் மேலும் பல சலுகைகளையும் தருவதாகவும் கூறினார்;
ஒத்துவர மறுத்தால் முற்றாக அழியநேரிடும் என்று மிரட்டினார்.
தமிழக முதல்வர் கருணாநிதி 'ஆன்டன் பாலசிங்கத்தை' பெங்களூரிலிருந்து ஈரோட்டுக்கு வரவழைத்து போரைக் கைவிடுமாறும், தங்கள் கட்சி தடைசெய்யப்பட்டபோது 'திராவிட நாடு' கொள்கையை தாங்கள் கைவிட்டதையும் கூறி பேசிப்பார்த்தார் ((அதனால்தான் இன்று, 25வருட பதவி கிடைத்து, அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழிகளில் கொள்ளையடித்து, 200 தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்துவைத்துள்ளார்;

*தமிழகத் தமிழர் எத்தனை கொடுப்பினையற்றவர்கள்?!
பிறந்ததோ ஒரு பிரபாகரன் அவரும் ஈழமே போதும் என்று நின்றுவிட்டார். *))

தமிழக மக்கள் இந்திய நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி கருணாநிதி அரசுக்கு நெருக்கடி முற்றிக்கொண்டு வந்தபோதும் அவர் தமிழகத்திலிருந்து புலிகளுக்கு செல்லவிருந்த சிறுசிறு உதவிகளையும் தடுத்தார்.

அந்தக் காலம் நூறாயிரம்(ஒரு லட்சம்) இந்தியப் படையினர் தாங்கிகளுடனும்(tank) வானவூர்திகளுடனும், போர்க் கப்பல்களுடனும் புலிகளைச் சுற்றிவளைத்திருந்த காலம்; அப்போது புலிகள் வெறும் 2000பேர்; தலைவர் ஆயுதங்களை வேறு ஒப்படைத்துவிட்டார் பாதுகாப்பிற்கென கமுக்கமாக கொஞ்சம் ஆயுதங்களை மறைத்துவைத்திருந்தார்;
திலீபன் உண்ணாநோன்பிருக்கும் முன் மக்களிடம் சென்று பரப்புரை செய்தபோது "அவசியம் ஏற்பட்டால் நாங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுவோம்" என்றே பரப்புரை செய்தார்;
தலைவரின் முன்னெச்சரிக்கைதான் புலிகள் மீண்டும் ஆயுதம் தூக்கநேரிட்டபோது அவர்களுக்கு வலுசேர்த்தது;

இந்திய கொண்டுவந்த ஆயுத தளவாடங்களானது, கொரியப் போருக்கு பிறகு அததனை அதிகமான ஆயுதத் தளவாடங்கள் கடல்வழி கொண்டுவரப்பட்ட ஒன்றாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

கப்பற்படையிடம் அப்போது 17 'அலைஜ்' வானூர்திகள் இருந்தன; அத்தனையும் புலிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன; புலிகளுக்கு ஆயுதம் கொண்டுவந்த படகுகளை அவைகள் மூழ்கடித்துவிட்டன; மணலாற்றி களமாடும் புலிகளுக்கு உணவும் தண்ணீரும்கூட தட்டுப்பாடாக இருந்தகாலம்;
ஒருநாளைக்கு ஒரு குவளை(டம்ளர்)க் கஞ்சிதான் தலைவர் உட்பட அந்தக்காட்டில் இருந்த 27பேருக்கும் கிடைத்தது;

ஈழத்தின் மூத்த அரசியல்வாதிகளும் தமிழக மூத்த அரசியல்வாதிகளும்கூட போரைக் கைவிடுமாறு தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தனர்;
காட்டுக்குள் சென்று பேச்சுவார்த்தை நடத்த 'குமரன் பத்மநாபன் (கே.பி)' சென்றது;
புலிகளின் மூத்த உறுப்பினர் பலரும் கூட தற்போதைக்கு பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் இந்தியப்படை வெளியேறியபின் அப்பணத்தின் மூலம் பெருமளவு ஆயுதம் வாங்கி மிகப்பெரிய அளவில் போராட்டத்தைத் தொடங்கலாம் என்றும் கூறினர்;
தலைவர் அதை ஏற்கவில்லை;
தலைவர் பண்பை நன்கறிந்திருந்த இந்தியப்படையினர் கணக்கில்லாமல் பொதுமக்களைக் கொன்றுகுவித்தனர்;
ஈழத் தலைவர் பலரும் கூட பொதுமக்கள் இழப்பைச் சுட்டிக்காட்டி புலிகளைச் சரணடையுமாறு கூறினர்;
தமிழகத்தில் ம.பொ.சி கூட வானொலியில் புலிகளை சரணடைய வலியுறுத்தினார்;
அதுவரை 5000 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்;
200 புலிகளும் 500 இந்தியப்படையினரும் பலியாகியிருந்தனர்;
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியோர் நூறாயிரம்(லட்சம்) பேர்;
சிறையிலடைக்கப்பட்டோர், காணாமல் போனோர் கணக்கேயில்லை;
400 தமிழ்ப்பெண்கள் வல்லுறவுக்கு ஆளாகிய செய்திகள் வந்திருந்தன;
ஊரடங்கு உத்தரவால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்;

தலைவர் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார்;
குழுவினர் கடைசியாக அந்த மணலாற்றுப் பகுதியை விடுத்து வேறு பாதுகாப்பான பகுதிக்கு தலைவர் மாறவேண்டும் என்று கூறினர்;
"இது பண்டார வன்னியன் களமாடிய மண்; இங்கேயே நான் தொடர்ந்து போராடுவேன், அல்லது வீரமரணம் அடைவேன்; நான் இறந்தபிறகு இயக்கத்தையும் இலக்கையும் மொத்தமாகவோ சில்லரையாகவோ எவருக்கும் நீங்கள் விற்கலாம்" என்று நெத்தியடியாகக் கூறி கேபி குழுவை அனுப்பிவைத்தார்.

பணத்தை வாங்காத தலைவர் பிரேமதாச என்ற சிங்களர் ஆயுதம் தந்தபோது மறுக்காமல் வாங்கிக்கொண்டார்;
அவர் விலைபோகவும் இல்லை, விமர்சனத்தைத் தூண்டும் வாய்ப்புகளை நழுவவிட்டதும் இல்லை;

எனக்கு ஒரு கேள்வி?
அப்போது புலிகள் வெறும் 2000பேர், அவர்கள் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் மட்டும் இருந்தது.
அதற்கே அத்தனை பெரிய விலை கிடைத்தபோது,
2009 ல் புலிகள் 30,000பேர்; இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது;

அப்போது எத்தனை பெரிய விலை கிடைத்திருக்கும்?!