தமிழரில் என்ன தனியே போர்க்குடி?!
 இந்திய ராணுவம்,
பெருமளவு ராணுவ தளவாடங்களுடன்,
 ஒரு லட்சம் போர்வீரர்களுடன் ஈழத்தில் இறங்கி,
  3 ஆண்டுகள் போராடியும்
 புலிகளை வெல்லமுடியாத காரணம் என்ன என்று கேட்டால் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறுவர்.
 ஸ்டீபன் கோஹென் (Dr. Stephen P. Cohen) என்கிற புகழ்பெற்ற இராணுவ ஆய்வாளர் இந்திய ராணுவத்தை ஆராய்ந்து ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
 அதன் தலைப்பு,
Indian Army : Its Contribution to the Development of a Nation 
என்பதாகும்.
அதில்,
 "தமிழீழ விடுதலைப் புலிகள் போரியல் கல்வி கற்றவர்களை பெருமளவு கொண்டிருந்தது.
 இதுவே இந்திய ராணுவம் இலங்கையில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம்"
என்று கூறியுள்ளார்.
 
 என்றால் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் புலிகள் போன்ற போரியல் கற்ற யாருமே இல்லையா?!
 ஏனில்லை?
இருக்கிறார்கள்.
அதையும் ஸ்டீபன் கூறியுள்ளார்.
அது மதராஸ் ரெஜிமென்ட்.
(இராணுவ ஆய்வாளர் தராகி சிவராம் அவர்கள் தலைவரின் பிறந்தநாள் அன்று அளித்த பேட்டியிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்)
தமிழர் வீரம் என்றவுடன் புறநானூறு தொடங்கி பூலித்தேவன் வரை மட்டுமே பேசுகிறோம்.
ஏதோ அதன்பிறகு நாம் கோழைகளாகி விட்டதுபோல!
No comments:
Post a Comment