Wednesday 18 December 2019

ஆந்திரா கோவில்களில் தமிழ்






















ஆந்திரா கோவில்களில் தமிழ்

 "திருச்சிற்றம்பல மேடை மீது ஏறி பாடக் கூடாது" என்று தீட்சிதர்கள் கூறியதை நியாயப்படி சாதிப் பிரச்சனை ஆக்காமல்
 அப்படியே திசைதிருப்பி "தமிழை நீசபாசை என்றுவிட்டான் பார்ப்பான்" என்று மொழிப் பிரச்சனை ஆக்கி பொய்ப் பிரச்சாரம் செய்தே அரசியல் செய்தனர் வந்தேறிகள்.

 இதன்மூலம் தினமும் தமிழில் ஓதும் தில்லை அந்தணர்களான தீட்சிதர்களை தமிழுக்கு எதிரானவர்களாக காட்டிவிட்டனர்.

 ஆனால்
 தமிழர் பகுதியாக இருந்து ஆந்திராவுக்கு போய்விட்ட எல்லை மாவட்டங்களில்
 தமிழர்களால் கட்டப்பட்டு தெலுங்கர் கைக்கு போய் முழுக்க சமஸ்கிருத மயமாகிவிட்ட வைணவக் கோவில்களில்
 இன்றும் விடாமல் தமிழில் ஓதிவரும் பார்ப்பனர் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை?


 திருப்பதி உட்பட
அப்லாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வர கோவில்,
 நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவில்,
 தாலப்பாக்கம் சென்னகேசவ சுவாமி கோவில்,
 தேவுணிகடப்பா சித்தீஸ்வர கோவில் மற்றும் லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஜம்மலமகுடு வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 பித்தாபுரம் பத்மாவதி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவில்,
 ஆகிய 10 கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் எழுதிய தமிழ்ப் பாசுரங்கள் ஓதப்படும்.

 தெலுங்கர் வருகைக்கு முன் தாய்லாந்து சென்ற பார்ப்பனர்கள் இன்றுவரை தமிழில்தான் ஓதுகின்றனர்.

 தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினப் பார்ப்பனர் தமிழுக்கு எதிரி இல்லை!

 படம் உதவி: Karthikeyan Rathinavelu

No comments:

Post a Comment