Sunday 1 December 2019

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

2004 லேயே சீமான் அண்ணன் புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

புலிகளுக்காக அவர் அளித்த பேட்டியை இங்கே இணைத்துள்ளேன்.

ஆம்.

தமிழினத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு
புலிகள் நடத்திவந்த "நிதர்சனம்" தொலைக்காட்சி 2 மணிநேரம் நீளமுள்ள ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டது.
(அதன் தலைப்பு "தலைநிமிர்வு" என்பது.
இணையத்தில் அது Prabhakaran undying symbol of tamil resistance என்ற பெயரில் இருந்தது.
தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால் என்னிடம் உள்ளது.)

இந்த ஆவணப் படம் பல அரிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம்
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றையும்
தலைவரது வாழ்க்கை வரலாற்றையும்
எடுத்துரைக்கிறது.

அப்போது புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து போர் ஓய்ந்திருந்த காலம்.

புலிகள் இலங்கை அரசுக்கு சமமான பலத்துடன் உலக நாடுகள் ஏறத்தாழ அங்கீகரித்துவிட்ட ஒரு அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.

அப்போது வெளியிடப்பட்ட இந்த ஆவணப் படத்தில் தலைவரை வாழ்த்தி 2 சிங்களவர் உட்பட 36 பேர் பேசியிருக்கின்றனர்.
அதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அண்ணன் சீமானும் அதில் பேசியிருக்கிறார்.

இந்த 13 பேரில் தலைவரை ஈழத்திற்கு சென்று நேரடியாகச் சந்தித்தோர் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகிய நால்வர் மட்டுமே!

அதில் பேட்டி அளித்தோர் முழுப் பட்டியல் வருமாறு

1. மறவன்புலவு திரு.சச்சிதானந்தம் (தமிழகம்)

2. திருமதி. தாமரைச் செல்வி
எழுத்தாளர்

3. திரு. மருசலீன்
மாவீரர் லெப்.கேணல் விக்டரின் தந்தை

4. ஜனாப். சலீம்
பத்திரிக்கையாளர்

5. திரு. தர்மலிங்கம்
மூத்த பத்திரிக்கையாளர்

6. திரு. காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர்

7. திரு. புகழேந்தி
கவிஞர் (தமிழகம்)

8. திரு.வேணுகோபால்
ஆசிரியர்

9. திரு.வை.கோபாலசாமி
பொதுச் செயலாளர் - ம.தி.மு.க (தமிழகம்)

10. திரு.முல்லைமணி
எழுத்தாளர்

11. திரு.சதாசிவம்
மாவீரர் லெப். அருச்சுனாவின் தந்தை

12. இன்குலாப்
கவிஞர் (தமிழகம்)

13. திரு.சீமான்
திரைப்பட இயக்குனர் (தமிழகம்)

14. வைத்தியர். ஜெயகுலராசா
வைத்திய அதிகாரி

15.திரு.கனகரவி
ஊடகவியலாளர்

16. திருமதி. மனோன்மணி சண்முகதாஸ்
விரிவுரையாளர் - யாழ் பல்கலை

17. திரு. சூரியதீபன்
(தமிழகம்)

18. மோகனதாஸ்
துணைவேந்தர் - யாழ் பல்கலை

19. திருமதி. யோகம்மா

20. திரு. சித்தி.அமரசிங்கம்
எழுத்தாளர்

21. திரு. அறிவுமதி
கவிஞர் (தமிழகம்)

22. ஜனாப். அப்துல் சயான்

23. திரு. டி.சிவராம்
இராணுவ ஆய்வாளர்

24. திரு. சுப. வீரபாண்டியன்
தமிழ் தமிழர் தேசிய இயக்கம் (தமிழகம்)

25. திரு. கலாநிதி விக்கிரபாகு குணரட்ண

26. திரு. தணிகாசலம்
கவிஞர்

27. ஆண்டகை. இராயப்புஜோசப்
ஆயர். மன்னார்

28. பாஷண அபேய குணவர்த்தன
பத்திரிக்கை ஆசிரியர்

29. திரு.தியாகு
தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

30. திரு. திலகவதி
எழுத்தாளர்

31. திரு. சந்திரசேகரன்

32.திரு. மனோ கணேசன்

33. திரு. பழ.நெடுமாறன்
தலைவர் - தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

34. திரு. ராமதாஸ்
தலைவர். பா.ம.க (தமிழகம்)

35. திரு. திருமாவளவன்
தலைவர் வி.சி. (தமிழகம்)

36. திரு. மணியரசன்
தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி (தமிழகம்)

இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் புலிகள் திரைப்படம் எடுத்த போது சீமான் அங்கு சென்றார்.
அப்போது தலைவரையும் சந்தித்தார்.

புலிகளின் முப்படையில் ஒன்றான கடற்படையின் தலைவர் திரு. சூசை அவர்கள் கடைசி குரல்பதிவில் "சீமானை முன்னெடுக்க சொல்லு" என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு இப்போது ஏனென்றால்
சீமான் பற்றி புலிகளுக்கு எதுவுமே தெரியாது என்றும்
  அவர் ஏதோ கேமரா பிடிக்க போனபோது தற்செயலாக தலைவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போலவும் பதிவுகள் வருகின்றன.

சீமான் அண்ணனை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்
வெறும் நக்கல் நையாண்டி செய்தே வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலர் அலைகின்றனர்.

சீமான் மீது வைக்கப்படும் உருப்படியான விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் மற்றபடி எல்லாமே நக்கல் நையாண்டி பதிவுகள்தான்.

அவர்களுக்கு உரைக்கவே இந்த பதிவு.

சீமான் புலிகளின் ஆள்தான்!

https://m.facebook.com/story.php?story_fbid=2024288354341474&id=100002809860739

No comments:

Post a Comment