Showing posts with label ஒலிம்பிக். Show all posts
Showing posts with label ஒலிம்பிக். Show all posts

Saturday, 29 June 2024

ஸ்டாம்ப் சைஸ் கோவணம் இந்த கப்

 


ஸ்டாம்ப் சைஸ் கோவணம்

 

 இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஹிந்தியா சாதித்ததை இங்கே பாருங்கள்.

கீ....ழே 58 வது இடம்!

 தென்னாப்பிரிக்கா எவ்வளவோ மேல்!

விளையாட்டு என்றால் என்னவென்றே தெரியாத ஹிந்தியா இந்த கிரிக்கெட் என்கிற கேலிக்கூத்தில் வென்றது ஒரு ஸ்டாம்ப் ஐ வைத்து நிர்வாணத்தை மறைக்கும் முயற்சி!

 இந்த எழவிலும் 18 ஆண்டு தோல்விக்கு பிறகு வெற்றி!

இனியாவது சோம்பேறிகளின் பொழுதுபோக்கான கிரிக்கெட் பார்ட்டியில் கொட்டும் பணத்தை உண்மையான ஆரோக்கியமான விளையாட்டுக்கு கொடுத்தால் உலக அரங்கில் மானம் மிஞ்சும்! 

 ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் அரங்கில் பாரத மாதா பல நாடுகளால் மானபங்கம் அடைவதை ஹிந்தியர்கள் இனியாவது தடுப்பார்களா?! 

 இல்லை நடிகர் கோலியை நினைத்துக் கொண்டு கண்மூடி கவுந்து படுத்து விடுவார்களா?! 

 

Sunday, 19 November 2023

கிரிக்கெட் கார்ப்பரேட்

கிரிக்கெட் கார்ப்பரேட்

 இந்த உலகக் கோப்பை போன்ற பிரபல கிரிக்கெட் போட்டித் தொடர்களை நடத்துவது international cricket council அதாவது ICC.
 அன்று உலக மக்களைச் சுரண்டி பணம் கொழுத்துப் போன ஆங்கிலேயர்கள் அதை எங்கே செலவு செய்வது என்று தெரியாமல் திரிந்தபோது ஒரு வரப் பிரசாதமாக வந்தது கிரிக்கெட்.
 கிரிக்கெட் என்பது வெள்ளைக்காரர்கள் அரை அம்மணமாக கடற்கரையில் சூரியக் குளியல் போடும்போது பொழுதுபோக்குக்காக விளையாடுவது.
 அப்படி கி.பி. 1900 களில் இல் ஆஸ்திரேலிய கடற்கரையில் அம்மணமாக ஆடிக்கொண்டிருந்தான் ஒரு ஆங்கிலேய வெள்ளைக்காரன். 
 இவனது பொழுதுபோக்கு அவ்வப்போது டூர் போய் இங்கிலாந்திலும் தென்னாப்பிரிக்காவிலும் இருந்த இவனது அங்காளி பங்காளி ஆங்கிலேய வெள்ளைக் காரர்களுடன்  கடற்கரையில் குத்தாட்டம் போடுவது.
 அப்போது இவர்களுக்கு ஒரு யோசனை வந்தது. கி.பி.1900 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் இல் கிரிக்கெட் விளையாடப்பட்டது. இதில் பிரெஞ்சுப் பேரரசும் ஆங்கிலப் பேரரசும் மோதின. ஒரே ஒரு மேட்ச் தான் நடந்தது. இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று காறித் துப்பி வெளியே அனுப்பிவிட்டது ஒலிம்பிக் நிர்வாகம். எனவே இவர்கள் ஒலிம்பிக் போல நடத்த ஆசைப் பட்டனர்.
 இந்த யோசனையில் இம்மூன்று நண்பர் குழுவும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று இடங்களில் கிளப்களை ஆரம்பித்தனர்.
  இந்த மூன்று கிரிக்கெட் கிளப்களும் 1907 இல் ஜாலியாக டூர் அடித்து இணைந்து ஆட்டம் போட்டு அப்படி உருவானது தான் இந்த ICC.
 இப்படி ஆங்கிலேயர் ஆண்ட 6 நாடுகளில் பணம் கொழுத்த வெள்ளைக்கார கூட்டம் ஒவ்வொரு கிளப்களைத் தொடங்கி இதில் இணைந்தனர்.
 இரவில் கடற்கரையில் ஆண்களும் பெண்களுமாக கூடி விடியவிடிய உல்லாசலாக இருந்துவிட்டு பகலில் சூரியக் குளியல் எடுக்கும்போது சும்மா பந்தைத் தட்டி விளையாடுவதுதான் கிரிக்கெட்.
வெயில் நன்றாக உடலில் படும் மேல்வலியாமல் இருக்கும். பெரிதாக ரூல்ஸ் கூட கிடையாது.
கி.பி.1721 இல் இந்தியாவில் முதல் கிரிக்கெட் போட்டி குஜராத் கடற்கரை (கம்பாத்) இல் ஆங்கிலேயருக்கு இடையே நடந்தது.
 காலப் போக்கில் ஆங்கிலேய அடிவருடிகளான ஜமீன்தார்களும் வியாபாரிகளும் இதில் இணைந்தனர். பந்து பொறுக்கிப் போட்டு கடைசி பேட்ஸ்மேனாக ஒப்புக்கு சப்பானியாக ஆகி முதல் இந்தியர் (சி.கே.நாயுடு) கேப்டன் பதவிக்கு வரவே 1932 ஆம் ஆண்டு ஆகிவிட்டது. 
 ஆங்கிலப் பேரரசு வீழ்ந்த பிறகும் அது ஆண்ட நாடுகளில் இந்த கிரிக்கெட் கும்மாள கூட்டணி தொடர்ந்தது. ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு உருவாகி ஆரோக்கியமான விளையாட்டான ஹாக்கி வளர்ச்சி பெற்றது.
 இதை முறியடிக்க 1975 இல் இவர்கள் உலகக் கோப்பை எனும் தொடரை ஆரம்பித்தனர்.
 இதுவும் இங்கிலாந்தில் தான் நடந்தது.
 இதில் ஆங்கிலேயர் மற்றும் அவர்கள் அடக்கியாண்ட 8 நாடுகள் (Australia, England, India, New Zealand, Pakistan , the West Indies, Sri Lanka and East Africa ) கலந்துகொண்டன.
 (ஆனால் பாருங்கள் 2019 இல் தான் இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்கிறது! அதுவும் மிகவும் கடினப்பட்டு மயிரிழையில்! இது செட்டிங் இல்லை என்று நம்ப வேண்டுமாம்!)
 இன்றும் கிரிக்கெட் என்பது 3 கிளப் களின் பண விளையாட்டு.
 இங்கிலாந்தின் ECB, ஆஸ்திரேலியாவின் CA, இந்தியாவின் BCCI.
12 நிரந்தர உறுப்பினர்கள் 90 க்கும் மேற்பட்ட தற்காலிக உறுப்பினர்கள் இருந்தாலும் எல்லாரும் ஒப்புக்கு சப்பானிதான். இந்த 3 லும் ஏறத்தாழ முக்கால்வாசி வருமானம் bcci மூலம் வருகிறது. ஆனால் bcci க்கு கால்வாசி நிதிதான் ஒதுக்கப்படுகிறது.
 இது தமிழகத்தை மத்திய அரசு சுரண்டும் அதே மாடல்! 

 2014 இல்  ICC இன் மொத்த வருமானம் 250 கோடி டாலர். இதில் bcci இன் பங்கு 57 கோடி டாலர் அதாவது 22.8%. 
 சில ஆண்டுகளுக்கு முன் பிறருக்கும் அதிக பங்கிட்டு bcci க்கு கிடைப்பதை 11% ஆக குறைத்தனர். ஆனால் bcci விடவில்லை. அது மட்டுமின்றி இந்திய அரசின் முழு ஆதரவுடன் புது பாலிசி கொண்டு வரப்பட்டு இந்த ஆண்டு 40% கிரிக்கெட் வருமானம் bcci வசம் வந்துவிடும்.
  இதன் மூலம் 2024-2027 இல் bcci ஆண்டுக்கு 60 கோடி டாலர் சம்பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது ஆண்டுக்கு ஏறத்தாழ 5000 கோடி ரூபாய்.

முன்பு 23% தற்போது 40% என்பது icc தனது பணத்தில் bcci க்கு கொடுப்பது.
உண்மையில் icc க்கு bcci சம்பாதித்து கொடுப்பது ஏறத்தாழ 70%.
 ஆம்! கிரிக்கெட்டில் இந்தியர்கள் கொட்டும் பணம் இங்கிலாந்துக்கு சென்று அதில் 3 இல் 1 பங்குதான் 2023 வரை திரும்பி வந்துள்ளது.
 இனிதான் அது 2 ல் 1 பங்கு ஆகவுள்ளது.
(மீதி பணம் பிற நாடுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு பயன்படுத்தப் படுகிறதாம்).
 அதாவது இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் எந்த பெரிய பங்களிப்பும் செய்யாமல் நல்ல லாபம் பார்க்கின்றனர்.
 கிரிக்கெட் பிரபலமாகாத நாடுகளில் இந்தியர் பணத்தில் அது விளையாடப்படும்.
 ஆக இந்த சூதாட்டத்தில் முழுக்க நஷ்டம் இந்திய ரசிகர்களுக்கு மட்டுமே!

 2007 இல் 16, 2011 இல் 14, தற்போது 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மட்டுமே ODI உலக கோப்பை விளையாடி உள்ளன. 
 உலக வல்லரசுகள் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக அல்ல பொழுதுபோக்காக கூட மதிப்பதில்லை.
 இதை ஊக்குவிப்பதும் ஒலிம்பிக் அளவு எண்ணுவதும் முட்டாள்த்தனம்.
 
 2028 ஒலிம்பிக் இல் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று கூறுகிறார்கள்.  இது ஒவ்வொரு முறையும் கூறப்படுவதுதான்.
  
தகவல்களுக்கு நன்றி: wikipedia & Dhruv Rathee

 

 

 

Friday, 18 July 2014

கறுப்பு செப்டம்பர்

கறுப்பு செப்டம்பர்
@@@@@@@@@
1972 செப்டம்பர் 5,
ஜெர்மனியின் தலைநகரம் ம்யூனிக்; ஒலிம்பிக் போட்டிகள்
நடந்துகொண்டிருந்த நேரம்; ஒட்டுமொத்த உலகமும்
கூடியிருந்த இடம்; துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள்
அதிகாலை மௌனத்தைக் கலைத்தன; விளையாட்டு வீரர்கள்
தங்கவைக்கப்படும் 'ஒலிம்பிக் சிற்றூர்(olympic
village)' அலறத் தொடங்கியது;
காவலை மீறி கமுக்கமாக உள்ளே நுழைந்து, கள்ளத்
திறவுகோல்(சாவி) மூலம் இஸ்ரேல்
நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த
வீட்டுக்குள் கதவைத் திறந்து எதிர்பாராமல்
நுழைந்தனர் எட்டுபேர்; முகமூடி, துப்பாக்கியுடன்
வந்த அவர்களைப் பார்த்து குழம்பிய யூத
விளையாட்டு வீரர்கள் தூக்கம் கலைந்து அதிர்ச்சியில்
உறைந்தனர்; துணிச்சலை வரவழைத்துக்கொண்
டு கேள்விகேட்டவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை;
முரண்டுபிடித்த இருவர் உடனடியாகச் சுடப்பட்டனர்;
ஒட்டுமொத்த உலகமும் கதற ஆரம்பித்தது; உலகின்
மூலைமுடுக்கெல்லாம் தலைப்புச் செய்திகள் பதறத்
தொடங்கின.
ஜெர்மனி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது;
யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?
நாங்கள் 'கறுப்பு செப்டம்பர் (black september)' என்ற
இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள்; எங்கள் பாலஸ்தீனத்தில்
இசுரேல் செய்துவரும் அட்டூழியத்திற்கு பதிலடி தர
வந்திருக்கிறோம்; இந்த விளையாட்டு வீரர்களைக்
கொல்வது எங்கள் நோக்கமல்ல; எங்கள் போராளிகள்
இருநூறுபேரை இசுரேல் விடுவிக்கவேண்டும்;
அது நடக்காவிட்டால் இந்த
ஒன்பது விளையாட்டு வீரர்களை மறந்துவிடுங்கள்.
இசுரேல் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை;
ஜெர்மனியே அவர்களை ஏதாவது செய்து விடுவிக்கவேண்டு
ம், அல்லது நாங்கள் அதிரடி நடவடிக்கை எடுப்போம்
என்று சொல்லிவிட்டார் இசுரேலிய பெண் அதிபர் கொடால்
மிய்ர்;
ஜெர்மன் அரசு நயமாகப்
பேசி பயணக்கைதிகளோடு பத்திரமாக தங்கள்
நாட்டிலிருந்து தனிவானூர்தி மூலம் வெளியேற
உதவுவதாகவும், பாலஸ்தீனம் சென்ற பிறகு இசுரேலுடன்
பேரம் பேசிக்கொள்ளுங்கள் என்றும்
கூறி இசைவு பெற்றது.
பயணக்கைதிகளை ஆயுதமுனையில் அழைத்துக்கொண்டு
தனிவானூர்தி நிறுத்தப்பட்டிருந்த
நிலையத்திற்கு ஆயுதப்போராளிகள் வந்தபோது ,
அங்கே ஜெர்மன் அரசு அதிரடி நடவடிக்கைக்காக
மறைத்துவைத்திருந்த படைவீரர்கள் தாக்குதலைத்
தொடங்கும் முன் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண
்ட போராளிகள் பணயக்கைதிகளை சுடத் தொடங்கினர்;
ஜெர்மானியப் படையினர் 8போராளிகளில்
ஐவரை சுட்டுவிடும் முன் போராளிகள் 9
பணயக்கைதிகளில் அனைவரையும் சுட்டுமுடித்துவ
ிட்டனர்;
மொத்தம் 11அப்பாவி விளையாட்டு வீரர்களும் 5
ஆயுதப்போராளிகளும் அங்கே உயிரிழந்தனர்;
மூன்று ஆயுதப்போராளிகள் சிறையிலடைக்கப்பட்டனர்;
பலமணிநேர பரபரப்பு முடிவுக்கு வந்தது.
1940களில் யூதர்கள் கோடிக்கணக்கில் கொல்லப்பட்டபோது
உலகமே யூதர்களை இரக்கத்துடன் பார்த்தது; அந்த
பார்வைக்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது மேலும்
அப்பாவி யூதர்கள் பதினொரு பேரின்
குருதி நிலத்தில் சிந்திவிட்டது.
'கறுப்பு செப்டம்பர்' இந்த பழியை ஏற்றுக்கொண்டது;
ஆமாம், அவர்கள் அன்று அப்படி செய்த
பிறகு அண்டைநாடுகளுக்குக்கூட சரிவரத் தெரியாத
பாலஸ்தீனப் போராட்டம் உலகம் முழுதும் பரவியது;
அதுவரை பாலஸ்தீனத்திற்காக
குண்டுவைத்தவர்கள், ஆள்கடத்தியவர்கள், தாக்குதல்
நடத்தியவர்கள், விடுதலைக் கவிதை எழுதியவர்கள்,
புத்தகம் போட்டவர்கள், புலம்பெயர் பாலஸ்தீன
ஆதரவாளர்களின் பரப்புரை, புகைப்படங்கள்,
ஆவணப்படங்கள், ஐநா தீர்மானங்கள் என எதுவும்
சாதிக்காத ஒன்றை…
எட்டு போராளிகளும் அவர்கள் துப்பாக்கிகளும்
சரியான இடத்தில் சரியான நேரத்தில் எடுத்த
ஒரேயொரு அதிரடி நடவடிக்கை சாதித்தது.
இன்று 'பாலஸ்தீன்' என்ற பெயரை அத்தனைபேரும்
குறைந்தது பத்துதடவையாவது கேள்விப்பட்டிருப்போம்.
காரணம் அன்று கொலைப்பழி சுமந்த 'ப்ளாக் செப்டம்பர்'.
நமக்கு ஒரு 'கறுப்பு மே' இல்லாமல் போய்விட்டது;
பொதுநலவாய மாநாடும் (காமன்வெல்த்) இலங்கையில்
கோலாகலமாக நடந்தும்விட்டது;
நாமும் வருடாவருடம் நூறாயிரக்(லட்சக்)கணக்கில்
ஐநா முன்பு கூடி கத்திக்கொண்டிருக்கிறோம்.
https://m.facebook.com/photo.php?fbid=427750493995276&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739