Showing posts with label பாலஸ்தீன். Show all posts
Showing posts with label பாலஸ்தீன். Show all posts

Sunday, 16 May 2021

பாலஸ்தீனர் செய்யவேண்டியது

பாலஸ்தீனர் செய்யவேண்டியது

பாலஸ்தீனர்களும் ஈழத்தமிழர்களும் ஒரே தவறைத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒரு நாட்டின் ஒரு பகுதியை மட்டும் தனிநாடாக ஆக்குவதற்கு போராடினால் அதை போன்ற முட்டாள்தனம் வரலாற்றில் வேறில்லை.

ஒரு இனம் தன் இனத்தின் பெயரிலேயே தன் தாய்நிலத்தை முழுவதுமாக தனிநாடாக கோரினால்தான் அது விடுதலை அடைய அதிக வாய்ப்பிருக்கிறது.
ஈழத்தமிழர்கள் தமிழர்நாட்டின் ஒரு பகுதியான ஈழத்தை மட்டும் தனிநாடக்க முயற்சித்ததால் தோல்வியை சந்தித்தனர்.

அதேபோலத்தான் பாலஸ்தீனர்களின் தமது இனமான அரபு என்கிற பெயரால் அரேபியர்களுடன் ஒன்றிணைந்து முழு அரபு நாட்டை அமைக்கவோ அல்லது குறைந்தபட்சம் அருகிலிருக்கும் ஏதாவது ஒரு அரபு நாட்டின் பகுதியாக தன்னை இணைத்துக் கொள்ளவோ போராடி இருந்தால் இந்நேரம் விடுதலை அடைந்து இருப்பார்கள்.

தனது இனம் அருகிலேயே பலம்வாய்ந்த நிலையில் இருக்கும்பொழுது அவர்களை விட்டுவிட்டு தாம் வாழும் மிக சிறிய பகுதியை மட்டும் தனிநாடாகக் கோருவது சுயநலம் மட்டுமின்றி மிகப்பெரிய இனத்துரோகம் ஆகும் என்பது என் கருத்து.

பாலஸ்தீனம் ஈழம் இரண்டுமே பழமையான பெயர்கள்தான். ஆனால் அவை இடத்தை குறிக்கும் பெயர்கள் இனத்தை குறிப்பவை அல்ல.

எனவே, இனத்தின் பெயரால் ஒரு இனம் மொத்தமாக ஓரணியில் திரண்டு தனது மொத்த தாய்நிலத்தையும் ஒரே நாடாக கோருவதை தமிழ் தேசியம் வலியுறுத்துகிறது.

அந்தவகையில் அரபு நாடுகள் அனைத்துமே ஒன்றிணைந்து ஒரே நாடாக செயல்படுவது தான் சரியாக இருக்கும். அரேபிய இனத்தின் மொத்த மக்கட்தொகை ஏறத்தாழ 30 கோடி என்றாலும் அரேபிய தாய்நிலம் அந்த மக்கட்தொகைக்கு தாராளம் என்று கூறும் வகையில் மிகப் மிகப்பெரியது. ஒரே மொழி என்கிறபோது எத்தனை கோடி என்றாலும் நாட்டு நிர்வாகத்தில் பிரச்சனை வராது (ஏற்கனவே அரபு லீக் இருக்கிறதுதான். அதில் இணைந்திருக்கும் 22 நாடுகளில் பாலஸ்தீனமும் ஒரு உறுப்பினர்தான். ஆனாலும் இந்த அமைப்பு பெயருக்குதான் இருக்கிறது. அதிலும் நியாயமே இல்லாமல் சோமாலியாவும் ஒரு உறுப்பினர்).

தற்போது பாலஸ்தீன பிரச்சனைக்கு என்ன தீர்வு என்றால் பாலஸ்தீனம் வரலாற்றில் சிரியாவுடன் அதிகம் தொடர்பில் இருந்திருக்கிறது என்றாலும் தற்போது ஜோர்டான் நாட்டுக்கு அருகில் இருக்கிறது.
(முற்காலத்தில் இந்த மொத்த நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் அரேபியர்கள் கிடையாது என்றாலும் அரேபியர்களின் முன்னோர்கள் அந்த நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கிறார்கள். மூதாதை இனம் இன்று இல்லையென்ற நிலையில் அரேபியர் அந்த நிலத்தை சொந்தம் கொண்டாடுவதில் தவறில்லை.
கடவுள் ஏற்கனவே இருந்தவர்களை விரட்டிவிட்டுத்தான் யூதர்களைக் குடிவைத்ததாக அவர்களின் புனிதநூல் கூறுகிறது. நான் ஏற்கனவே கூறியபடி யூதர் ஒரு தனியினம் கிடையாது. யூத மதத்தைத் தழுவிய பல்வேறு இனத்தவர்களே இன்று யூதர்). எனவே ஜோர்டான் நாட்டின் ஒரு பகுதியாக (தற்போதைய இசுரேல் நிலப்பரப்பையும் சேர்த்து) தம்மை சேர்த்துக் கொள்ளுமாறு பாலஸ்தீனர்கள் போராட வேண்டும் (காசா பகுதியை அருகிலிருக்கும் எகிப்துடன் சேர்க்கலாம்). அரபு தேசியத்தை மட்டும் முன்னெடுக்க வேண்டும். முழு அரபுநாடு என்கிற கோட்பாட்டை முன்வைத்து அரேபியர்களை ஓரணியில் திரட்ட வேண்டும். இனத்துடன் மதத்தை அதாவது இசுலாமியர், கிறித்தவர், யூதர் என்று குழப்பிக்கொள்ளக்கூடாது. யூதரில் அராபியர் தவிர்த்து அனைவரையும் விரட்டவேண்டும். அரேபிய நாடுகள் யூனியன் அமைத்துக்கொண்டு ஒற்றை நாடு போல பொதுவான ராணுவம், இறையாண்மை, பணம் மற்றும் அலுவல் மொழி கொண்டு செயல்பட வேண்டும். தமக்குத் தொடர்பில்லாத சோமாலியாவை விட்டுவிடவும் வேண்டும்.

படம்: அரபு மொழி பேசப்படும் நிலப்பரப்பு

Tuesday, 10 May 2016

பாலஸ்தீனத்தில் புலிகள்

பாலஸ்தீனத்தில் புலிகள்

உங்களுக்கு பாலஸ்தீன விடுதலைத் தலைவர் திரு.யாசர் அராபத் அவர்களைத் தெரிந்திருக்கும்.

பாலஸ்தீன அரபுத் தந்தைக்கும் எகிப்து அரபித் தாய்க்கும் பிறந்தவர்.

எகிப்திலேயே வளர்ந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குக்கூட போகாமல் நேராக தனது இனத்தை இனவெறி யூதர்களிடமிருந்து காக்க பாய்ந்தோடியவர்.

அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டில் ஆயுதவழியில் போராடி அதிபராக உயர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.

அவருக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?
இருக்கிறது.

அவர் தலைவராக இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் (P.L.O) புலிகள் பயிற்சி எடுத்துள்ளனர்.

இதை ஏற்பாடு செய்தவர் ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பை (E.R.O.S) நிறுவிய திரு.இளையதம்பி இரத்தின சபாபதி ஆவார்.

இவர் இலண்டன் வாழ் ஈழத்தமிழர்.

பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த இங்கிலாந்துக்கான பாலஸ்தீனத் தொடர்பாளர் திரு.சையது அமீது அவர்களுடன் நட்பு ஏற்பட்டபோது,
அவருடன் பேசி தமது இயக்கத்திற்காக பயிற்சி தர ஏற்பாடு செய்தார்.

பிறகு 1976 மே மாதம் பெய்ரூட் சென்று பாலசுத்தீனப் போராளி திரு.அபு ஜேஹத் என்பவரை (இசுரேலிய உளவுத்துறையால் கொல்லப்பட்டவர்) சந்தித்துப் பேசி  நேரில் பார்த்து விபரங்களை தெரிந்துகொண்டு
வவுனியாவிலும் சென்னையிலும் இயங்கிக்கொண்டிருந்த தமது இயக்கத்தினரையும்,
வவுனியாவில் ஈரோசுடன் கூட்டாக இயங்கிக் கொண்டிருந்த பிரபாகரனின் குழுவையும்(அப்போது இயக்கத்திற்கு பெயர் இல்லை) லெபனானுக்கு அழைத்துச் சென்று
பாலஸ்தீன விடுதலை இயத்தினரிடம் பயிற்சி பெறச் செய்தார்.

இந்தப்பயிற்சி 1976ன் பிற்பகுதியில் தொடங்கி 1977 முற்பகுதி வரை நடந்தது.
1983லும் புலிகள் மீண்டும் பாலசுத்தீனப் போராளிகளிடம் பயிற்சி பெற்றதாகவும் கூறுவர்.

Friday, 18 July 2014

கறுப்பு செப்டம்பர்

கறுப்பு செப்டம்பர்
@@@@@@@@@
1972 செப்டம்பர் 5,
ஜெர்மனியின் தலைநகரம் ம்யூனிக்; ஒலிம்பிக் போட்டிகள்
நடந்துகொண்டிருந்த நேரம்; ஒட்டுமொத்த உலகமும்
கூடியிருந்த இடம்; துப்பாக்கி வேட்டுச்சத்தங்கள்
அதிகாலை மௌனத்தைக் கலைத்தன; விளையாட்டு வீரர்கள்
தங்கவைக்கப்படும் 'ஒலிம்பிக் சிற்றூர்(olympic
village)' அலறத் தொடங்கியது;
காவலை மீறி கமுக்கமாக உள்ளே நுழைந்து, கள்ளத்
திறவுகோல்(சாவி) மூலம் இஸ்ரேல்
நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்கியிருந்த
வீட்டுக்குள் கதவைத் திறந்து எதிர்பாராமல்
நுழைந்தனர் எட்டுபேர்; முகமூடி, துப்பாக்கியுடன்
வந்த அவர்களைப் பார்த்து குழம்பிய யூத
விளையாட்டு வீரர்கள் தூக்கம் கலைந்து அதிர்ச்சியில்
உறைந்தனர்; துணிச்சலை வரவழைத்துக்கொண்
டு கேள்விகேட்டவர்களுக்கு பதில் கிடைக்கவில்லை;
முரண்டுபிடித்த இருவர் உடனடியாகச் சுடப்பட்டனர்;
ஒட்டுமொத்த உலகமும் கதற ஆரம்பித்தது; உலகின்
மூலைமுடுக்கெல்லாம் தலைப்புச் செய்திகள் பதறத்
தொடங்கின.
ஜெர்மனி அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது;
யார் நீங்கள்? என்ன வேண்டும் உங்களுக்கு?
நாங்கள் 'கறுப்பு செப்டம்பர் (black september)' என்ற
இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள்; எங்கள் பாலஸ்தீனத்தில்
இசுரேல் செய்துவரும் அட்டூழியத்திற்கு பதிலடி தர
வந்திருக்கிறோம்; இந்த விளையாட்டு வீரர்களைக்
கொல்வது எங்கள் நோக்கமல்ல; எங்கள் போராளிகள்
இருநூறுபேரை இசுரேல் விடுவிக்கவேண்டும்;
அது நடக்காவிட்டால் இந்த
ஒன்பது விளையாட்டு வீரர்களை மறந்துவிடுங்கள்.
இசுரேல் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை;
ஜெர்மனியே அவர்களை ஏதாவது செய்து விடுவிக்கவேண்டு
ம், அல்லது நாங்கள் அதிரடி நடவடிக்கை எடுப்போம்
என்று சொல்லிவிட்டார் இசுரேலிய பெண் அதிபர் கொடால்
மிய்ர்;
ஜெர்மன் அரசு நயமாகப்
பேசி பயணக்கைதிகளோடு பத்திரமாக தங்கள்
நாட்டிலிருந்து தனிவானூர்தி மூலம் வெளியேற
உதவுவதாகவும், பாலஸ்தீனம் சென்ற பிறகு இசுரேலுடன்
பேரம் பேசிக்கொள்ளுங்கள் என்றும்
கூறி இசைவு பெற்றது.
பயணக்கைதிகளை ஆயுதமுனையில் அழைத்துக்கொண்டு
தனிவானூர்தி நிறுத்தப்பட்டிருந்த
நிலையத்திற்கு ஆயுதப்போராளிகள் வந்தபோது ,
அங்கே ஜெர்மன் அரசு அதிரடி நடவடிக்கைக்காக
மறைத்துவைத்திருந்த படைவீரர்கள் தாக்குதலைத்
தொடங்கும் முன் சில வினாடிகளில் சுதாரித்துக்கொண
்ட போராளிகள் பணயக்கைதிகளை சுடத் தொடங்கினர்;
ஜெர்மானியப் படையினர் 8போராளிகளில்
ஐவரை சுட்டுவிடும் முன் போராளிகள் 9
பணயக்கைதிகளில் அனைவரையும் சுட்டுமுடித்துவ
ிட்டனர்;
மொத்தம் 11அப்பாவி விளையாட்டு வீரர்களும் 5
ஆயுதப்போராளிகளும் அங்கே உயிரிழந்தனர்;
மூன்று ஆயுதப்போராளிகள் சிறையிலடைக்கப்பட்டனர்;
பலமணிநேர பரபரப்பு முடிவுக்கு வந்தது.
1940களில் யூதர்கள் கோடிக்கணக்கில் கொல்லப்பட்டபோது
உலகமே யூதர்களை இரக்கத்துடன் பார்த்தது; அந்த
பார்வைக்கு வலுசேர்க்கும் விதமாக தற்போது மேலும்
அப்பாவி யூதர்கள் பதினொரு பேரின்
குருதி நிலத்தில் சிந்திவிட்டது.
'கறுப்பு செப்டம்பர்' இந்த பழியை ஏற்றுக்கொண்டது;
ஆமாம், அவர்கள் அன்று அப்படி செய்த
பிறகு அண்டைநாடுகளுக்குக்கூட சரிவரத் தெரியாத
பாலஸ்தீனப் போராட்டம் உலகம் முழுதும் பரவியது;
அதுவரை பாலஸ்தீனத்திற்காக
குண்டுவைத்தவர்கள், ஆள்கடத்தியவர்கள், தாக்குதல்
நடத்தியவர்கள், விடுதலைக் கவிதை எழுதியவர்கள்,
புத்தகம் போட்டவர்கள், புலம்பெயர் பாலஸ்தீன
ஆதரவாளர்களின் பரப்புரை, புகைப்படங்கள்,
ஆவணப்படங்கள், ஐநா தீர்மானங்கள் என எதுவும்
சாதிக்காத ஒன்றை…
எட்டு போராளிகளும் அவர்கள் துப்பாக்கிகளும்
சரியான இடத்தில் சரியான நேரத்தில் எடுத்த
ஒரேயொரு அதிரடி நடவடிக்கை சாதித்தது.
இன்று 'பாலஸ்தீன்' என்ற பெயரை அத்தனைபேரும்
குறைந்தது பத்துதடவையாவது கேள்விப்பட்டிருப்போம்.
காரணம் அன்று கொலைப்பழி சுமந்த 'ப்ளாக் செப்டம்பர்'.
நமக்கு ஒரு 'கறுப்பு மே' இல்லாமல் போய்விட்டது;
பொதுநலவாய மாநாடும் (காமன்வெல்த்) இலங்கையில்
கோலாகலமாக நடந்தும்விட்டது;
நாமும் வருடாவருடம் நூறாயிரக்(லட்சக்)கணக்கில்
ஐநா முன்பு கூடி கத்திக்கொண்டிருக்கிறோம்.
https://m.facebook.com/photo.php?fbid=427750493995276&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739