Saturday 15 April 2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை


 பஞ்சாப் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் எந்தவித அரச மரியாதையும் இல்லாமல் உறவினர்களுக்கு அனாதைப் பிணம் போல அனுப்பி வைக்கப்பட்டன.

 

 இதை எதிர்த்து இரண்டு ஊர்களிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 தமிழர்களுக்கு ஹிந்தியாவில் எந்த மட்டத்திலும் மரியாதை என்பதே கிடையாது!


 பாஜக சார்பான வீடியோ போடும் அந்த ராணுவ வீரர் எங்கே?!

 எதற்கெடுத்தாலும் 'எல்லையில் ராணுவ வீரர்கள்...' என்று பாடமெடுக்கும் இணைய சங்கிகள் எங்கே?! 


 தமிழர்கள் இந்த நாட்டுக்காக செத்தாலும் கூட கேவலப்பட்டே ஆக வேண்டுமா?!


விபரம் கீழே,


தினத்தந்தி செய்தி (15.04.2023)


தமிழக ராணுவ வீரர்கள் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் மறியல்


தேனி,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் இறந்தனர்.


இதில் உயிரிழந்த தேனி மாவட்டம் மூணான்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் (வயது 24), சேலம் மாவட்டம் மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் (24) ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.


அதன்படி ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் நேற்று காலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவர் சிலையில் இருந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் யோகேஷ்குமாரின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.


சாலை மறியல்:

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை மற்றும் அரசு சார்பிலும் மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


உடல் தகனம்:

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் யோகேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் காரணமாக சம்பவம் குறித்து முழுமையாக கூற இயலாது என்றனர். இதையடுத்து ராணுவ வீரர் உடலை வீட்டில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடலுக்கு அவரது தந்தை ஜெயராஜ் தீ மூட்டினார்.


 கமலேஷ் உடல்:

இதேபோல ராணுவ வீரர் கமலேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12.50 மணிக்கு அந்த வாகனம் வனவாசி அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த கமலேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்தனர். அரசு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் உடல் கொண்டு வராததை கண்டித்தும், கமலேசின் இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூர் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கீதா, விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கமலேசின் உறவினர்கள், ராணுவ வாகனத்தில் தான் உடலை கொண்டு செல்லவேண்டும். அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.


மரியாதை:

மாலை 4.15 மணி அளவில் சேலத்தில் இருந்து ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு கமலேசின் உடல் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான மசக்காளியூர் பனங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவை ராணுவ தலைமை அலுவலக உத்தரவின்பேரில் தமிழ்நாடு 12-வது பட்டாலியன் சேலம் என்.சி.சி. சார்பில் அவருடைய உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் சுபேதார்கள் பாபு, ரமணா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் அனைத்து கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கமலேசின் உடல் அங்குள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment