Showing posts with label காஷ்மீர். Show all posts
Showing posts with label காஷ்மீர். Show all posts

Friday, 15 February 2019

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே

தமிழக வீரரை காஷ்மீரில் வைத்து கொலை செய்த ஹிந்தியர்களே!

காஷ்மீரிகளின் நிறம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

தோற்றம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மொழி உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மதம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

உடைகள் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

காலநிலை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

மண்வகை உங்களுடன் ஒத்துப்போவதில்லை!

உணவுமுறை உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

கலாச்சாரம் உங்களுடன் ஒத்துப்போவது இல்லை!

அவர்கள் வரலாற்றில் புராணங்களில் இலக்கியங்களில் உங்கள் பெயர் கூட இல்லை!

இன்றுவரை காஷ்மீருக்கு நேரடி நிலவழித் தொடர்பே இல்லை!

அவர்களை நீங்கள் போர் செய்து வென்று உங்கள் நாட்டுடன் இணைக்கவும் இல்லை!

அதாவது தமிழகத்தை விடவும் அந்நியமான ஒரு அண்டை நாட்டை ஆக்கிரமித்து உள்ளீர்கள்!

அதன் வளங்களை கொள்ளையடித்து வருகிறீர்கள்!

அங்குள்ள பெண்களைச் சீரழித்து வருகிறீர்கள்!

காஷ்மீர் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடிய அனைவரையும் கொன்று ஒழித்து பதினைந்து ஆண்டுகள் ஆகியும்
நேரு காலத்தில் கொடுத்த உறுதிமொழிப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தாமல் சண்டித்தனம் செய்கிறீர்கள்!

அத்தோடு நில்லாமல் தேர்தல் நேரத்தில் நீங்களே குண்டு வைத்து பல மாநில வீரர்களைக் கொன்று
நாடு முழுக்க அனுதாப அலையையும் எழுப்பி
அரசியல் ஆதாயமும் அடைகிறீர்கள்!

இத்தகைய இழிவுக்கு
உங்களது ஆக்கிரமிப்பில் இருக்கும் மற்றொரு நாட்டு மக்களான நாங்கள்
பெருமை வேறு படவேண்டுமா?!

Tuesday, 8 August 2017

சக்கரவியூகம்

சக்கரவியூகம்

2012 ல் ஹிந்தியில் சக்ரவியுஹ் என்ற நக்சலைட் பற்றிய ஒரு படம் வந்தது.

சமீபத்தில்தான் அது நினைவுக்கு வந்தது.
விட்மேட் ல் பதிவிறக்கம் செய்து பார்த்தேன்.
பிரகாஷ் ஜ்ஹா என்ற பிராமணர் தயாரித்து இயக்கிய அந்த படம் உண்மையில் நான் எதிர்பார்த்தது போல இல்லை.

பொதுவாக இந்தி படம் எல்லாமே ஒரே கதைதான்.
கதாநாயகன் அல்லது கதாநாயகி வேறொருவருடன் காதலில் இருப்பார்.
அவரை ஓரங்கட்டி தான் இடம் பிடிப்பதுதான் ஒன்லைன்.

எல்லா இந்தி படங்களும் ஏதோ ஹிந்தியா செல்வத்தில் கொழிப்பது போலவும்
அவர்களுக்கு வரும் பணக்கார பிரச்சனைகளை மையமாக வைத்துமே இருக்கும்.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் முழுக்க முழுக்க நக்சலைட்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டிருந்தது சக்ரவியுஹ்,
ஆதிவாசிகள் தரப்பு நியாயங்களை பாமரருக்கும் புரியும்படி சொல்லி,
கார்ப்பரேட் மீதும்
அது இயக்கும் அரசியல்வாதிகள் மீதும்
அதற்கு அடிமைவேலை செய்யும் காவல்துறை மீதும் கோபம் வருமாறு செய்கிறது.

கம்யூனிசம் என்பதையெல்லாம் தாண்டி எளிமையாகக் கூறவேண்டுமென்றால்
ஆதிவாசிகள் கிராமம் மொத்தமே 50 மண்வீடுகள் வரை கொண்டவை.
கிராமங்கள் காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எந்த அடிப்படை வசதியுமற்று இருக்கின்றன.
அந்த நிலத்தின் கீழே கனிமங்கள் இருக்கின்றன.

அந்த மக்களை ஏறெடுத்தும் பார்க்காத அரசாங்கம் அவர்களது கிராமத்தை காலி செய்யக் கூறுகிறது.

ஆதிவாசிகள் மறுக்கிறார்கள்.
அரசாங்கம் வன்முறையில் இறங்குகிறது.
தமது நிலத்தை காத்துக்கொள்ள வேறு எந்த வழியும் இல்லாத ஆதிவாசிகள் ஆயுதம் தூக்குகிறார்கள்.

அரசும் ஆயுதம் தாங்கிய துணைராணுவத்தை களத்தில் இறக்குகிறது.

மேற்கண்ட படத்தில் ஆயுதக் காவல்படைக்கு தலைவனாக இருக்கும் சட்டத்தை நம்பும் நேர்மையான அதிகாரி ஒருவன்
தனது நண்பனை உளவாளியாக நக்சலைட்களுக்குள் அனுப்புகிறான்.
அவன் சிறையிலிருந்து தப்பிபோவதுபோல் தப்பித்து நக்சலைட்களிடம் தஞ்சமடைந்து அவர்களோடு சேருகிறான்.

அதன்பிறகு நக்சலைட் நடவடிக்கைகளை அவ்வப்போது துப்பு கொடுக்கிறான்.
இதன் மூலம் முக்கியமான நக்சலைட் தளபதி பிடிபட்டு அவர்களின் ஆயுதக் கொள்வனவும் பணப்பரிவர்த்தனையும் பாதிக்கப்படுகிறது.

காலப்போக்கில் உளவாளி நக்சலைட் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்ந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக மாறுகிறான்.
தன்னால் ஏற்பட்ட இழப்பை தானே ஓரளவு சரிசெய்து தளபதியை மீட்டுக்கொண்டு வந்து இறுதியாக தான் பலியாகிறான்.

இந்த படத்தில் ஆதிவாசிகள் மீது அரசாங்கம் நடத்தும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் அப்படியே காட்டியுள்ளனர்.
நியாயமான வழியில் போராடும் நக்சலைட்டுகள்,
அவர்களை எதிர்த்து சிறிதும் நியாயமற்ற முறையில் கோழைத்தனமாக குறுக்குவழியில் எந்த தரைமட்டத்துக்கும் இறங்கி அடிக்கும் மனிதத்தன்மை அற்ற அரசாங்க படை
என உண்மையை முகத்தில் அறைகிறது இந்த படம்.

அதன்பிறகும் இந்த படம் ஹிந்தியாவில் ஓடுமா?
படம் தோல்வியைத் தழுவியது.

ரெட் அலர்ட் என்று ஒரு படம் பார்த்தேன்.
ஒரு அப்பாவியை நக்சலைட்கள் பிடித்துக்கொண்டு போய் வலுக்கட்டாயமாக ஆயுததாரி ஆக்குவது போலவும்
அவன் பிறகு அரசிடம் சரணடைந்து அவர்களைக் காட்டிக்கொடுப்பது போலவும் எடுக்கப்பட்ட அந்த படம்
நக்சலைட் தரப்பு நியாயங்களை ஓரளவு சொல்லியிருக்கிறது.
அதுவும் கூட வெற்றிப்படம் என்று கூறமுடியாது.

இதேபோல ஹய்தெர் என்ற ஒரு படம் காஷ்மீர் பற்றி வந்தது.
அதிலும் முடிந்த அளவு காஷ்மீர் மக்களின் நியாயங்களைச் சொல்லியிருக்கின்றனர்.
இதை இயக்கியவரும் விஷால் பரத்வாஜ் என்ற பிராமணர்தான்.
அது ஓரளவு வெற்றியடைந்தது.

ஹய்தெர் படம் பார்க்கவிட்டாலும் சக்ரவியூஹ் படம் கட்டாயம் பாருங்கள்.
மொழி புரியாவிட்டாலும் புரியும்.
சப் டைட்டிலுடன் பார்த்தால் நன்கு தெளிவாகப் புரியும்.

Thursday, 14 July 2016

காசுமீருக்குக் குரல்கொடுக்கலாமா?

காசுமீருக்குக் குரல்கொடுக்கலாமா?

காசுமீருக்கு குரல்கொடுத்தால் ஹிந்தியா கோவித்துக்கொள்ளுமாம்.

ஈழப் போராளிகளின் அறிவுரை.

முதலில் காசுமீர் பிரச்சனை இனரீதியான பிரச்சனை.
அங்கே பண்டித்துகள், பார்சிகள் என பல்வேறு மதத்தவர்கள் விடுதலையை ஆதரிக்கின்றனர்.

காஷ்மீர் விடுதலையை காசுமீரிகள் பார்த்துக்கொள்வார்கள்.

தமிழகத்தைப் போல காசுமீரமும் இரண்டு துண்டாக
சொல்லப்போனால் மூன்று துண்டாக வல்லாதிக்க நாடுகளால் உடைக்கப்பட்டுள்ளது.

காசுமீரிகள் ஹிந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் விடுதலை வேண்டிதான் போராடுகின்றனர்.

அவர்களிடமிருந்து நாம் எதையாவது கற்றோமா?

முதலில் ஈழம் என்பதே தமிழரைத் துண்டாடும் கருத்தியல்.
வெறும் 20 லட்சம் தமிழர்கள் வாழும் ஒரு தீவின் கடற்கரையை ஒட்டிய நிலப்பகுதி 8கோடி தமிழர்களுக்கு எப்படி தீர்வாகும்?

தமிழர் மண் தமிழக மாநிலத்தையும் புலிகள் அறிவித்த ஈழத்தையும் தாண்டி பெங்களூர் முதல் கதிர்காமம் வரை பரந்துவிரிந்து உள்ளது.
தமிழ்தேசியவாதிகள் ஈழத்தைத் தாண்டி இன்னமும் சிந்திக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய நிலை.

காசுமீருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தால் இந்தியாவை பகைக்கவேண்டி வருமாம்.

இந்தியாவைப் பகைக்கவேண்டிவருமோ என்றுதான் தமிழக பிரச்சனைகளில் தலையிடாமல் ஈழப்போராட்டம்
ஆனால் இறுதியில் என்ன நடந்தது?

உறுதியாகக் கூறுவேன்.

ஈழம் தோற்றதுக்கு ஒரே காரணம் தமிழகத்துடன் அரசியல் ரீதியாகவும் ஆயுதரீதியாகவும் கைகோர்க்காததுதான்.

ஈழமும் தமிழகமும் ஒரே நாடு.

ஈழத்தில் நடந்த அத்தனை பிரச்சனைகளும் தமிழகத்திலும் நடந்துள்ளது.

(விரிவான பதிவு :
தமிழகம் - ஈழம் வாங்கிய அடிகளில் ஒற்றுமை
- வேட்டொலி )

இந்தியா என்ன
உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்தாலும் சரி
நாம் நமது தாய்மண்ணை ஒரு பிடியும் விட்டுக்கொடுக்காமல் போராடவேண்டும்.

ஈழத்தான் கடலுக்கு இந்த பக்கம் வந்து இந்தியாவுக்கு வந்துட்டேன் என்கிறான்.

தமிழகத்தான் அவனைப் பார்த்து இலங்கை அகதி என்கிறான்.

இருவரும் திருந்தவேண்டும்.

ஈழம் மட்டும் போதும் என்போர் தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்கின்றனர்.

ஆகவே காசுமீரை ஆதரிக்கவேண்டுமா என்றால் ஆதரிக்கலாம்
அல்லது வேறு இனத்தின் பிரச்சனையில் தலையிடாமல் விட்டுவிடலாம்.

ஆனால் ஹிந்தியா கோபமாகிவிடும் என்பதற்காக மட்டும் பம்முவது கோழைத்தனம்.