Tuesday 15 August 2023

சக் தே இந்தியா

சக் தே இந்தியா

 ஹிந்தியில் மிகச்சிறந்த தேச பக்தி படம் 'சக் தே இந்தியா'.
 அதுவரை முழுக்க விளையாட்டை மையமான வைத்து  எந்த திரைப்படமும் வந்ததில்லை. இந்த படம் வந்த உடனேயே கிரிக்கெட் மாயையை உடைக்க முற்பட்டது.
 இதில் கேட்பாரற்றுக் கிடக்கும் மகளிர் ஹாக்கி அணியை மேம்படுத்தி கோப்பை வெல்ல வைப்பார் அதன் கோச்சாக வரும் ஷாருக் கான்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் முதல் காட்சி இளம் வீராங்கனைகள் வரிசையாக நிற்பார்கள். சாருக் கான் வருவார். ஒவ்வொருவரும் ஒரு அடி முன்வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி வரும். ஒவ்வொருவரும் neha from gujarat மாதிரி தனது பெயரையும் தனது மாநிலத்தின் பெயரையும் கூறுவார்கள்.  அப்பொழுது அவர் நீங்கள் எல்லோரும் இந்தியர்கள் எனவே நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று கூறுமாறு பணிப்பார்.
 உடனே அவரவர் தமது பெயரையும் தான் இந்தியாவில் இருந்து வருவதாகவும் முழு வேகத்துடன் கூறுவார்கள். 
பிறகு அந்த வீராங்கனைகள் தத்தமது இனத்துடன் தங்குவதை தடுப்பார்.
அதாவது  இரண்டு தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஒரே அறையில் தங்கியிருந்தால் அவர்களை பிரித்து வெவ்வேறு மாநில வீராங்கனைகளுடன் அறையில் தங்கும்படி செய்வார்.
 இதனால் வேற்றுமைகள் மறைந்து அவர்கள் இந்தியர் என்ற உணர்வுடன் விளையாடி கோப்பையை வெல்வதாக படம் செல்லும்.

  ஆக தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து புதிதான (போலியான) இந்தியா என்கிற அடையாளத்தின் கீழ் இணைப்பதன் மூலமே இந்த நாடு வெற்றி பெறும் என்பது ஆளும் வர்க்கத்தின் மனநிலை.
 தேசிய இனங்களின் தனித்தன்மையை பேணுவது அவர்கள் மொழியை கலாச்சாரத்தை பாதுகாப்பது இதெல்லாம் தேச பக்திக்கு எதிரான சிந்தனை என்பது தான் இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் உறுதியான நிலைப்பாடு .

நீங்கள் தமிழன் என்றால் உங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் உரிமைகளையும் இந்தியா காவு கேட்கிறது  என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

  அதையெல்லாம் விட்டுக் கொடுக்க நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக இந்தியன் என்று கூறிக் கொள்ளலாம்!

தமிழனாகவும் இருப்பேன் இந்தியனாகவும் இருப்பேன் என்பது கடுகளவும் சாத்தியமில்லை.

  இரண்டுமே நேர் எதிரானது!
இரண்டில் ஏதோ ஒன்று தான் உங்கள் அடையாளம்!

ஆனால் விபரம் தெரியும் முன்பே குழந்தைகளை சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மூளைச்சலவை செய்து அவர்களை இந்தியர் என்று நம்ப வைத்து தேசபக்தியின் பெயரால் அவர்களது மொழியையும் இனத்தையும் வளத்தையும் தியாகம் செய்யச்சொல்லி கேட்கிறது இந்திய தேசம்!

  இப்படி தேசிய இனங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்கச் சொல்வதில் இந்திய தேசியம், இந்துத்துவம், இஸ்லாமியம், தலித்தியம்,  கம்யூனிசம், திராவிடம் என அனைவருமே கைகோர்ப்பார்கள் !

 இந்த இந்திய தேசிய சிந்தனை வலிந்து திணிக்கபடுவதற்கும் ஒரு கன்னிப் பெண் கற்பழிக்கப்படுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை!

No comments:

Post a Comment