Sunday 6 August 2023

புலிகளும் பழனி பாபாவும்

புலிகளும் பழனி பாபாவும் 

  புலிகள் உட்பட ஈழப் போராளி இயக்கங்கள் தமிழகத்திற்கு அடைக்கலம் தேடி வந்த போது அவர்களை ஆதரித்தவர்களில் பழனி பாபாவும் ஒருவர் (இவர் தமிழரசன் அவர்களுக்கும் ஆதரவளித்து வந்தார்).
 ஐந்து ஆண்டுகள் புலிகளுக்கு அனைத்து வகையிலும் உதவி வந்த பாபா ஈழத்திற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கே தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.
 இந்த நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டை இந்திய அரசு முடக்குகிறது.

 இஸ்ரேலின் வழிகாட்டுதலின் பெயரில் ஈழத்தில் இஸ்லாமியரை தனியாக பிரித்தெடுக்கும் வேலையை சிங்களவர்கள் செய்கிறார்கள்.
புலிகளுக்கு நிதி தருவதில் விருப்பம் இல்லாத சில இஸ்லாமியர்களையும் இரவில் தனியாக மாட்டும் அப்பாவி இசுலாமியர்களையும் படுகொலை செய்து புலிகள் மீது பழியைப் போடுகின்றனர்.
 புலிகளில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை அவர்களின் குடும்பத்தை மிரட்டுவதன் மூலம் அவர்களை திரும்பி வரச் செய்கின்றனர். திரும்பி வராதோரின் குடும்பங்கள் இலங்கை ராணுவத்தால் சீரழிக்கப்பட்டன.
 ஊர்க்காவல் படை என்கிற பெயரில் இஸ்லாமியரில் சில பொறுக்கிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த ஏவி விடுகின்றனர்.  அவர்கள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு செய்கின்றனர். ஊர்க்காவல் படைக்கு எதிராக புலிகள் எடுத்த நடவடிக்கைகள் இஸ்லாமியருக்கு எதிராக எடுத்த நடவடிக்கை என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.
 புலிகள் போல உடைய அணிந்து முழுக்க இலங்கை ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்த காத்தான்குடி பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களை கொன்று அந்த பழியையும் புலிகள் மீது போடுகின்றனர்.

  இந்த நிலையில் பழனி பாபாவை இலங்கை அரசே நேரடியாக தமிழகம் சென்று அழைத்து வந்து சிறிமாவோவின் கணவரே தனிப்பட்ட முறையில் அவரை கூட்டிச்சென்று இஸ்லாமியர்களை புலிகள் கொன்று வருவதாக கூறி கலவரம் நடந்த இடங்களைக் காட்டுகிறார்.
 இசுலாமிய மக்களை மிரட்டி பாபாவிடம் பொய் சாட்சி கூற வைக்கிறார்.
 சில இஸ்லாமிய தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களையும் பழனி பாபாவிடம் புலிகள் பற்றி தவறாக கூறவைக்கிறார்.
 பழனி பாபா இதை நம்பி விடுகிறார்.
 பிறகு தமிழகத்திற்கு வந்து புலிகளுக்கு எதிராக பேசுகிறார்.
 ஈழத்திற்கு இந்திய அமைதிப் படை சென்றபோதும் அதை ஆதரிக்கிறார்.
 இதைத்தான் தற்போது இஸ்லாமிய மதவெறியர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆனால் இதன் பிறகு பாமக உடன் பாபா நெருக்கமாகிறார். பா.ம.க தலைவர் ராமதாஸ் புலிகள் பற்றி எடுத்துக் கூறுகிறார்.பா.ம. கட்சி ஈழம் மற்றும் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் பொழுது பழனிபாபா ஈழத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் புலிகளை எதிர்ப்பதாகவும் கூறி பாமகவின் ஈழ ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அப்போது திண்டுக்கல் லில் பேசிய பேச்சுதான் இது.
ஈழத்து இசுலாமியர் தனி ஈழம் அமைய ஆதரவளிக்க வேண்டும் என்றும் பேசுகிறார்.
 புலிகளுடன் இருக்கும் பங்காளி சண்டையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.

 இதன் பிறகும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபொழுது எந்த தலைவருமே புலிகளுக்கு ஆதரவாக பேசவில்லை.
 ஆனால் பழனி பாபா ராஜீவ் காந்தி தன்னுடைய இடுப்பில் வைத்திருந்த பாதுகாப்பு குண்டு வெடித்துதான் இறந்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து புலிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறார். 

 புலிகளுடன் முரண்பட்டாலும் பழனி பாபா அவர்கள் ஈழம் அமைய வேண்டும் என்பதில் இறுதி வரைக்கும் உறுதியாக இருக்கிறார்.

No comments:

Post a Comment