Thursday 17 August 2023

தாய்ன் மணிக்கொடி

தாய்ன் மணிக்கொடி 

இவர்தான் நடிகர் அர்ஜுனின் தந்தை எஸ்.பி.சர்ஜா.
 கன்னட திரையுலகில் 20 ஆண்டுகாலம் பிரபலமான நடிகராக இருந்தார்.
 இவரது மகனான அர்ஜுன் (சர்ஜா) தமிழகத்தில் பிரபலமான நடிகராக இருந்தார்.
 எஸ்.பி.சர்ஜா வின் இரண்டு பேரன்களும் கர்நாடக சினிமாவில் நடிகர்களாக உள்ளனர்.

  தமிழ் திரையுலகில் வேற்றினத்தார் ஆதிக்கம் என்பது தமிழ் இன உணர்வை மழுங்கடித்ததில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
 அதில் மிக முக்கியமானவை தெலுங்கர் விஜயகாந்த் மற்றும் கன்னடர் அர்ஜுன் ஆகியோரின் திரைப்படங்கள்.
 
  நம் அருகிலேயே ஈழத் தமிழர் மிகப்பெரிய ஆயுதப் போராட்டம் நடத்தி இலங்கைத் தீவின் 30% நிலப்பரப்பை தமது ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவந்து உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தனர்.
  ஆனால் நாமோ இது எதுவும் தெரியாமல் இந்தியர் என்கிற மாயையில் மூழ்கடிக்கப்பட்டு பாகிஸ்தான் சதிகளிலிருந்து இந்தியாவை காப்பாற்றுவது பற்றி பாடம் படித்துக் கொண்டிருந்தோம்.

 பாகிஸ்தான் தீவிரவாதிகளை  ஒழித்தது போக கேப்டன் பிரபாகரன் மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் தமிழினக் காவலர் வீரப்பன் படையை அழிப்பது பற்றியும் பாடம் எடுத்துத்தனர்.
 
  கன்னடர்கள் காவிரிக் கலவரத்தில் தமிழர்களைக் கொன்று தமிழ்ப் பெண்களின் தாலிகளை அறுத்தபோது ஜெய்ஹிந்த் படம் எடுத்து நம்மை தாயின் மணிக்கொடி பாட வைத்தவர் நடிகர் அர்ஜுன்.

 இவர் தமிழ்நாட்டு பிரச்சனைக்கு போராட வரமுடியாது என்று வெளிப்படையாக அறிவித்தவர்.
 
 சர்ஜா என்கிற சாதி பட்டத்தை இவர் போட்டுக் கொண்டிருந்தால் அல்லது நாயுடு என்கிற பட்டத்தை விஜயகாந்த் போட்டுக் கொண்டிருந்தால் நமக்கு அவர்கள் வேற்றினத்தார் என்கிற அடையாளம் தெரிந்து இருக்கும்.
 இவர்கள் நம்மைப் போலவே நடித்து நாக்குப்பூச்சி தெரிக்க இந்தியா இந்தியா என்று 20 வருடங்கள் கத்தி ஒரு தலைமுறையையே முட்டாளாக்கி உள்ளனர்.

No comments:

Post a Comment