Saturday 3 August 2019

மூன்று லட்சங்கோடி கொள்ளை

மூன்று லட்சங்கோடி கொள்ளை

ஓராண்டுக்கு ஏறத்தாழ "3 லட்சம் கோடி" ரூபாயை தமிழகத்திடம் கொள்ளை அடிக்கிறது மத்திய அரசு
- தமிழ்தேசிய பேரியக்கம் அறிக்கை

இந்த "3 லட்சங்கோடி" என்பது எவ்வளவு?!

இந்தியாவின் முதல் பணக்காரனான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பே "3.8 லட்சங்கோடி" தான்.

இந்த பணத்தை ஒவ்வொரு ரூபாயாக மாற்றி தரையில் ஒன்றன்பின் ஒன்றாக நிற்கவைத்துக் கொண்டே போனால் இந்த உலகத்தை கிட்டத்தட்ட 74 முறை சுற்றி வரலாம்.

ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையிலும் 40,000 ரூபாய் கடன் உள்ளது.
அப்படியாக தமிழக அரசின் மொத்த கடனே "3.2 லட்சங்கோடி" தான்.

என்றால் தமிழகத்தில் குழந்தை முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரிடம் இருந்தும் மத்திய அரசு ஆண்டுக்கு 37,000 ரூபாய் கொள்ளை அடித்து செல்கிறது.

இதற்கு பதிலாக நமக்கு என்ன லாபம் கிடைக்கிறது?!

லாபத்தை விடுங்கள்.

உணவுக்கு தேவையான தண்ணீர் கூட நமக்கு கிடைப்பதில்லை.

கடலில் நம் உயிருக்கு பாதுகாப்பு கூட இல்லை.

இதையெல்லாம் விட நம் மண்ணை அழிக்கும் திட்டங்களும் வரவுள்ளன?!

ஆங்கிலேயர் இந்தியாவிடம் இருந்து 1765 முதல் 1938 வரை அடித்த மொத்த கொள்ளையே "3.2 லட்சங்கோடி" தான்!

1947 இல் பிரிட்டிஷ் அரசிடம் இந்திய அரசு கேட்ட நட்ட ஈடு "3.37 லட்சங்கோடி" தான்!

(ஒப்பீட்டுக்காக அப்போது இந்தியாவின் தனிமனித வருமானம் ரூ.200
இப்போது அது ரூ.10,500)

இத்தனை பெரிய தொகையை தமிழக மாநிலத்தில் இருந்து ஹிந்தியா ஆண்டுக்கு ஒருமுறை கொள்ளையிட்டு செல்கிறது.

அன்று ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து இந்தியா விடுதலை கேட்டது சரி என்றால்
இப்போது நாம் இந்திய ஆட்சியிலிருந்து விடுதலை கேட்பதும் சரியே!

தனிநாடு ஒன்றே தீர்வு!


 

No comments:

Post a Comment